Showing posts with label நகைசுவை. Show all posts
Showing posts with label நகைசுவை. Show all posts

Wednesday, March 10, 2010

சாரு பெரியாரிஸ்டா – ஜுவி காமெடி

இவ்வார ஜுனியர் விகடனில் வெளிவந்த சாரு பேட்டியை விட அவரை குறித்த ஜுவியின் அறிமுகம்தான் பயங்கர சிரிப்பை வரவழைத்த்து. சாருவை பெரியாரிஸ்ட் என அறிமுகப் படுத்தி சிரிப்பு மூட்டி இருந்த்து. எந்த பெரியாரிஸ்ட் சாமியாருக்கு சொம்பு தூக்கியிருக்கிறார். கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாமல் இந்த அடைமொழியை கொடுத்திருக்கிறார் ஜுவி நிருபர்.



இதில் வழக்கம் போல் சாரு சரவெடி காமெடிகளை உதிர்திருக்கிறார். இதுவரை நாலாயிரம் ஏமாந்தேன் என்றவர் இப்போது அவர் இருபத்து ஐந்தாயிரமும் அவர் மனைவி ஒரு இலட்சமும் ஏமாந்து இருக்கிறார் என கூறுகிறார்.

யோவ் நித்தி ஒழுங்கா இப்பவே உண்மையை ஒத்துக்கோ...இல்லேன்னா போக போக அமெளண்ட் ஏறிரும்.

அவரின் அந்த கேள்வியும் பதிலும் கீழே.

கேள்வி:

'நீங்கள் சாமியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் புகழ் புராணம் பாடியதாகவும், இப்போது அதை மறைப்பதற்காக சாமியார் மீது வழக்குப் போடப் போவதாகவும் சொல்லப்படுகிறதே?''

பதில்:

''பணம் சம்பாரிக்கணும்னா நான் எப்படி வேணும் னாலும் சம்பாரிச்சிருப்பேன். எவ்வளவு வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன். சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு பல தடவை அவனுக்கு நான்தான் தண்டம் அழுதிருக்கேன். புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு. இதுக்கிடையில கும்ப மேளாவுக்கு போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா. அதையெல்லாம் திருப்பித் தரச் சொல்லித்தான் அவன் மேல நான் வழக்குப் போடப் போறேன். மத்தபடி சில மாமா பயலுக கிளப்பிவிடுற கதைக்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்!''

அடங்கொன்னியா... அடங்கவே மாட்டியான்னு கேட்க தோணுதுங்க... அட அவன விடுங்க..  எழுத்தாளர் எல்லாம் புத்திசாலி, காவி உடுத்தரவனெல்லாம் சாமியார்ன்னு நம்புற ஜனங்க இருக்குற வரைக்கும் இவனுங்க கல்லா கட்டிகிட்டேதான் இருப்பாங்க.

இப்போ நித்தி – ரஞ்சிதா விஷயத்தில் குமுதமும், ஜூவியும் கல்லா கட்ட ஆயத்தமாகி விட்டது. அதை வைத்து இவரும் குமுதம் ரிப்போர்ட்டரில் தொடர் எழுதப்போவதாக கேள்வி. இப்பொதெல்லாம் இவரை விடவும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

Wednesday, June 10, 2009

தமிழிஷ் ஓனர் யாரு..?

சக்கரை சுரேஷ் தமிழிஷில் இணைத்த ஓரு பதிவில் தமிழிஷில் விழுந்த பின்னூட்டங்களை இந்த தமிழிஷில் நடந்த விறுவிறுப்பான சண்டைகாட்சிகள் லிங்கில் பார்க்கவும்.


இந்த மாதிரி சண்டைலதான் பல உண்மைகள் வெளிவரும்கிறது காலம் காலமா நடக்குற விஷயம். அதனால தமிழிஷா, தமிழர்ஸா, நெல்லை தமிழா, தமிழ்10 ஆ, உலவா என நடந்த சண்டையில் தமிழிஷ் ஓனர் யாருன்னு சந்தேகத்தின் பேரில் நிறைய பேரை ஜீப்பில் ஏத்தலாம்.

தமிழர்ஸ் ஓனர் சக்கரை சுரேஷா, இல்லை போன வாரம் வரைக்கும் தமிழரா இருந்து இந்த வாரம் இங்கிலீஷ்காரரா மாறிபோன பிரியமுடன் வசந்தா இல்லை இந்த வாரம் மட்டும் தமிழரா இருக்கும் கடைகுட்டியா அப்பிடிங்கறதை தனிபதிவா போட்டு அலசலாம்.

இப்ப யாரையெல்லாம் ஜீப்ல ஏத்தலாம்னு பாக்கலாம். அந்த பின்னூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், tamilnenjam, sureshsakkarai, alwaysarafath, priya-win, true-tamil, kummachi, kilukku, karthigan, appavitamilan, globen

இதுல true-tamil கடைசிவரை சண்டை போட்டதால அவர் தமிழிஷ் ஓனரா இருக்க முடியாது. இருந்தாலும் அவரு போட்ட சண்டைலதான் பல மேட்டர் வெளிய வந்ததுனால அவரை ஜீப்புல ஏத்திருவோம்.

அப்புறம் நம்ம பின்னூட்ட பிசாசு (உபயம்: கலை) சக்கரை சுரேஷ் அவரு சமீபத்துலதான் தமிழிஷின் மோசடின்னு ஒரு பதிவு போட்டதுனால அவரும் இருக்க முடியாது. ஆனா சண்டைக்கு நடுவுல தமிழிஷ் ஓனர் என் கூட போன் பேசினாருன்னு வாக்குமூலம் கொடுத்ததால அவரையும் ஜீப்புல ஏத்தி முட்டிக்கு முட்டி தட்டுனா உண்மை தானா வெளிவந்துரும்.

கும்மாச்சி நடுவுல ஒரே ஒரு இடத்துல வந்து நியூஸ் பானைல எதும் பிரச்சனை இருக்கானு சண்டைக்கு சம்பந்தமே இல்லாத ஓன்னை பத்தி கேட்டதால அவருதான் நியூஸ் பானை ஒனரான்னு சந்தேகம் வலுக்கிறது. அது பத்தி தனியா ஒரு பஞ்சாயத்து வச்சுக்கலாம்


இதில் பிரியாவின் மற்றும் கார்த்திகன் விவாதத்தில் மிக தீவிரமாக கலந்து கொள்ளாததால் அவர்களின் மேல சந்தேகபார்வை அவ்வளவாக இல்லை. ஆனாலும் அவர்கள் வேற ஏதாவது ஓரு திரட்டிக்கு ஒனரா இருக்க கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

மீதம் இருப்பவர்கள் tamilnenjam, alwaysarafath, kilukku, appavitamilan, globen இதில் தமிழ்நெஞ்சம் இதுவரைக்கும் தமிழிஷில் 5000 ஓட்டுகளுக்கு மேல் போட்டிருப்பதாலும் அடிக்கடி தமிழிஷில் கமெண்ட் போடுறதாலும் இவர் மேல் சந்தேகம் வலுக்கிறது. கிலுக்கு பலபதிவை தமிழிஷில் இணைப்பதாலும் இந்த சண்டையில் மிக தீவிரமாக இருந்ததாலும் இவர் மேலும் சந்தேகம் வலுக்கிறது.

மத்தவங்க எல்லார் மேல சந்தேகம் இருந்தாலும்..alwaysarafath வந்து சண்டைக்கு நடுவுல அடிக்கடி வந்து என்னை யாரும் தமிழிஷ் ஓனரான்னு சந்தேகபடாதீங்க சந்தேகபடாதீங்க ன்னு அப்பப்போ கூவுறதால இவர் மேல பயங்கரமா சந்தேகம் வலுக்கிறது..ஏன்னா எங்க ஊருல இப்பிடிதான் யாராவது ஆடு களவாண்டத பத்தி பஞ்சாயத்துன்னா.. ஆடு களவாண்டவன்தான் “யார்ரா களவாண்டது” அப்பிடீன்னு ஓவரா சவுண்ட் விடுவான். அதனால அந்த அடிப்படையில பார்த்தா.. alwaysarafath மேல சந்தேகம் பயங்கரமா வருது.

அதனால உண்மையான தமிழிஷ் ஓனர்களே இந்த சந்தர்பத்திலாவது உண்மையை சொல்லிருங்க. இல்லேன்னா சில பன்னாடைங்க ஹிட்ஸ்க்காக வேண்டி தமிழிஷ் ஓனர் யாருன்னு பதிவும் போட்டு அதையும் தமிழிஷ்லயே இணைப்பாங்க பாத்துகிடுங்க..


டிஸ்கி:
இது முழுக்க முழுக்க நகைசுவைக்காக மட்டுமே எழுதபட்டது. யார் மனதையும் புண்படுத்த அல்ல. யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்