ஏற்றி விட்ட ஏணியை மறக்கும் உலகம்
ஜனவரி 4ம் தேதி மிக பிரமாண்டமான ஓபனிங்க்கு தயாராகி கொண்டிருக்கிறது துபாயில் உள்ள அல் புர்ஜ் டவர் , உலகின் மிக உயரமான கட்டிடம்.
818 மீ உயரம், 160 மாடிகளை கொண்ட இந்த கட்டிடம், ஸ்ட்ரக்ச்ச்ர் மற்றும் கிளாடிங் வேலைகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராகிறது. ஜனவரி 4ல் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.
818 மீ உயரம், 160 மாடிகளை கொண்ட இந்த கட்டிடம், ஸ்ட்ரக்ச்ச்ர் மற்றும் கிளாடிங் வேலைகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராகிறது. ஜனவரி 4ல் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

ஏற்றி விட்ட ஏணியை மறக்கும் மனிதனின் பழக்கத்தை இந்த கட்டிடமும் கற்று கொண்டது. வெறும் மண்ணாக கிடந்த இடத்தை கம்பியாலும் காங்கீரீட்டாலும் உலகில் மிக உயரத்திற்கு கொண்டு செல்ல அல்லும் பகலும் அயராது உழைத்தவர்களை ( யார்ரா... அவன் கேக்கெ.. பிக்கென்னு சிரிக்குறவன்) மறந்து விட்டது. இப்போது என்னால் கட்டிடத்திற்கு உள்ளே நுழைய முடியவில்லை. விஐபிகளும் விவிஐபிகளும் மட்டுமே நுழைய முடியுமாம்.
கிளிக்கு றெக்கை முளைச்சிட்டுதோன்னோ..அதான் பறந்து போச்சு.........
” பாலூட்டி வளர்த்த கிளி
பழம் கொடுத்து வார்த்த கிளி
நான் வளர்த்த பச்சை கிளி
நாளை வரும் கச்சேரிக்கு “
உலகின் உயரத்தில் உன்னத தமிழன் ( வேற யாரு ...ந்நாந்தேன்...)

இயர் எண்ட் பார்ட்டி...
இந்த ரிஸஸன் நேரத்தில் பார்ட்டியை நடத்தவா வேண்டாமா என பட்டிமன்றம் நடத்தி எடுக்கப்பட்ட முடிவு. வழக்கம் போல் முதல் நாளே சொல்லி விட்டதால் அதிலிருந்தே ஓன்றும் சாப்பிட கூடாது என்ற தொன்று தொட்ட வழக்கத்தை விட்டு விட்டால் தமிழின துரோகி என கூறி விடுவார்கள் என்பதால் அதையே கடைபிடித்தேன்.
இந்த ரிஸஸன் நேரத்தில் பார்ட்டியை நடத்தவா வேண்டாமா என பட்டிமன்றம் நடத்தி எடுக்கப்பட்ட முடிவு. வழக்கம் போல் முதல் நாளே சொல்லி விட்டதால் அதிலிருந்தே ஓன்றும் சாப்பிட கூடாது என்ற தொன்று தொட்ட வழக்கத்தை விட்டு விட்டால் தமிழின துரோகி என கூறி விடுவார்கள் என்பதால் அதையே கடைபிடித்தேன்.
முதலில் பவுலிங் செண்டர்க்கு சென்றோம். பந்தை உருட்டி கட்டைகளை தட்டி விட்டு பக்கத்திலிருக்கும் செம கட்டைகளை ஓரு தட்டு தட்டி விளையாண்டோம். ஊரில் கோலிக்காவை மட்டுமே விளையாண்டு பழக்கம். இங்கு வந்து இம்மாம் பெரிய பந்தை குடுத்தா என்ன பண்ணுவேன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
சரின்னு மனசை தேத்திகிட்டு, ”சாமி.. தேவதைகள் மத்தியில மானத்தை வாங்கிறாதனு” நினைச்சுகிட்டே பந்தை போட்டா... கடவுள் நல்லவங்களை எப்பவும் கைவிடமாட்டார்னு புரிஞ்சுகிட்டேன். ( யாரு அந்த நல்லவன்னு தெரியாத மாறி கேப்பீங்களே..)
அப்புறம் ரெஸ்டாரண்ட் போய் சாப்டவிட்டா...ஆத்தாடி...ஸ்பூனை கைல குடுத்து சாப்பிட சொல்லுறானுவோ... அடங்கொக்கா மக்கா.. ஸ்பூனு வச்சு அதை எடுத்துகறேன்..கைய வச்சு சாப்ட்டுக்கறேன்னு சொன்னா .. கேக்கானுவளா...கேணப்பயலுக.... அப்புறம் ஸ்பூனு வச்சு ரொட்டியை பிச்சா ஓரு பாதி என் டேமேஜர் முகத்துல போய் விழுது... அப்புறம் அவங்க எல்லாரும் கெஞ்சி கேட்டுகிட்டதுனால மறுக்கா கையை வச்சே சாப்பிட்டு முடிச்சேன்.
இதுக்கு மேல என்னால டைப்ப முடியாத காரணத்தால் உரையை இதோடு முடித்து கொள்கிறேன்.
