Showing posts with label குழிக்குள் விழுதல். Show all posts
Showing posts with label குழிக்குள் விழுதல். Show all posts

Monday, December 14, 2009

திரும்பி விட்டேன்...

நல்லா வாசிங்க. திருந்திவிட்டேன்னு தப்பா புரிஞ்சுக்காதீங்க... அதுக்கெல்லாம் கம்பெனி பொறுப்பாகாது.. இந்தியாவில் இருந்து வந்து ஓரு மாதம் ஆகிறது.. இப்பெல்லாம் கம்பெனியில் நிறைய ஆணிகள் புடுங்க வேண்டி இருப்பதாலும், பதிவுலகத்தில் இல்லாத இந்த ஐந்து மாதங்கள் தேவையில்லாத மன உளைச்சல் இல்லாததாலும் பதிவை எட்டி பார்க்க ஆர்வம் இல்லாமல் போனது..

இன்னும் சாரு, இளையராஜா , விஜய் அஜீத், மற்றும் பலரை குறித்து சண்டைகள் நடந்து கொண்டுதானே இருக்கிறது..? யாரும் திருந்திரலேல்லே.

அப்புறம் இன்னமும் துபாய் பதிவர் சந்திப்பில் சுந்தர் அண்ணன் வடை கொண்டு வருகிறார்களா? கலை இன்னும் வடையை ஆட்டையை போடுகிறானா? வினோத்தும் கிஷோரும் சண்டை போடுறதை நிப்பாட்டி விட்டார்களா?

இப்பிடி நிறைய கேள்விகள் மனதில் இருந்தாலும் சபை நாகரீகம் கருதி அதனை கேக்காமல் நான் வந்துட்டேன்னு சொல்லிக்கறேன்.

முதல்ல ஊருக்கு போன உடனே தும்முனா, இருமுனா, முக்குனா எல்லாத்தையும் பதிவா போட்றலாமேன்னு தோணுச்சு.... இப்போதான் அந்த நினைப்புல்லாம் இல்லாம எல்லாத்தையும் செய்யுறேன்.. இப்போ மறுபடியும் ”ஐ ம் பேக்”

முதல்ல துபாய்ல இருந்து பதிவை படிக்கறப்போ பரவால்லயே எல்லா முக்கிய செய்திகளும் இதுலயே கிடைக்குதேன்னு நினைச்சேன்.. ஆனா ஊருக்கு போன உடனேதான் தெரிஞ்சுது.. பதிவுலகம் ஊர் நடப்புக்கு சம்பந்தமே இல்லாம் தனி உலகமா இருக்குன்னு..


பதிவர்களுக்கு ஓரு வேண்டுகோள்

ப்ளாக் நமக்கு ஓசில கிடைக்குங்குறதுக்காக ஓவரா மொக்கைகளை போட்டு இதனை இன்னும் தனித்து விடவேண்டாம்.

உங்களை யாரும் தினமும் பதிவு போட்டுதான் ஆகணும்னு கட்டாயபடுத்தலை.. அப்பிடி போட்டு வர்ற ஹிட்ஸை வச்சு நாக்கு கூட வளிக்க முடியாது...

நல்ல பொழுதுபோக்கான , உபயோகமான தகவல்களை பகிருங்கள்... இன்னைக்கு பதிவுலகில் மொக்கைகள்தான் பெருவாரியாக உள்ளது. அதிலயே போய் பத்தோடு பதினொன்னா ஆகுறதுக்கு பதில் .. உபயோகமான தகவல்களை பகிர்ந்து தனித்து தெரியலாமே.. அப்பிடி பட்ட தகவல்கள் கிடைக்குற வரைக்கும் நம்ம பதிவே போடலேன்னாலும் ஓண்ணும் ஆக போறதில்ல... ஆகவே பதிவு போடுறதுக்கு முன்ன ஓருமுறை யோசிச்சுங்கோங்க...