நான் உசுரோடத்தான்யா இருக்கேன் :)

Thursday, December 15, 2011

கிட்டத்தட்ட ஒன்னரை வருடங்களுக்கு பிறகு… தொடர்ந்து பதிவு எழுதலாம்னு எண்ணம்.. கூகுள் பஸ் போனதுதான் முக்கியமான காரணமா இருக்கும்னு நினைக்கிறேன்… பிடிச்ச கூகுள் பஸ்ஸை சட்டுன்னு மாத்தி ப்ளஸ்ல போறதுக்கு பதிலா நமக்கு நெருக்கமான பதிவே எழுதலாம்னு வந்தாச்சு :)




எப்பயாச்சும் நான் பதிவு எழுதாலாம்னு நினைச்சாலும் உடனே ஞாபகத்து வருவது நம்ம சினேகிதன் அக்பர்தான்.. அவருதான் வீடு பத்தின தொடரை தொடர்ந்து எழுதுங்கன்னு எனக்கே அந்த தொடரை பத்தி ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்பார்.. இனிமே அதையும் டிரை பண்ணனும்.



இடைப்பட்ட காலத்தில் என் பதிவை கூகிளில் தேடிபார்த்து என்கிட்ட சந்தேகம் கேட்கும் மின்மடல்களை பார்க்கும் போது… என் மனசாட்சி என்னை பாத்து…”டேய் கண்ணா…. நீ இதுக்கெல்லாம் வொர்த் இல்லையேடா” ந்னு கேட்கும் ஆனாலும் அந்த மெயிலுக்கெல்லாம் பொறுப்பா பெரிய பருப்பு மாதிரி பதில் போட்டதை நினைச்சா சிரிப்புதான் வருது..



இதுக்கெல்லாம் காரணம் தமிழில் தொழில்நுட்ப பதிவுகள் மிகமிக குறைவாக வருவதுதான்.. விஷயம் தெரிஞ்ச நிறைய பேரு எழுத வராமலே இருப்பதும்.. என்னை மாதிரி அரைகுறை எழுதிகிட்டு இருக்கறதும்தான் முக்கிய காரணம்னு நினைக்குறேன்.. இனிமேல் நான் படிச்ச/படிக்கும் கட்டுமான செய்திகளையும் முடிந்தளவு பதிவு செய்யலாம்னு பாக்குறேன்.. பாக்கலாம்… நடக்குதான்னு :)



மொக்கை ஸ்டார்ட் :))



Read more: http://www.mylivesignature.com/mls_wizard2_1.php?sid=54488-88-2310E4045D4C93510FF9C713854FCA35#ixzz0gSZ8nIoA

Read more...

நெல்லையில் முந்துவது யார் - தேர்தல் நிலவரம்

Saturday, April 9, 2011

நீண்ட நாள்களுக்கு பிறகு என் பளாக்கில் பதிவில் எழுதும் போது ஒரு இனம் புரியாத கேள்வி “ஏன் இதை இவ்வளவு நாள் எழுதவில்லை?” என. பெரிய காரணங்கள் ஒன்றுமில்லை எழுத விஷயங்களும் ஆர்வமும் இல்லாததுதான்.

சரி விஷயத்திற்கு வருவோம்.  தேர்தல் வருவதால் பதிவு, பஸ், டிவிட்டர் என ஆங்காங்கே விவாதங்கள் நடைபெறுவதால் நானும் நெல்லை தொகுதியை பற்றி பதிவிடலாம் என நினைத்து இதோ ஆரம்பித்தாகிவிட்டது.




எல்லா தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் மிகவும் கவனத்தோடு வேட்பாளர்களை தேர்வு செய்யும் தொகுதி நெல்லை ஏனெனில் இந்த தொகுதியில் வென்ற கட்சிதான் ஆட்சியமைக்கும் எனபது இதுவரை நடந்த தேர்தல்களில் நிருபணமாகி இருக்கிறது.  இப்போது திமுக சார்பாக ஏஎல் எஸ் லெட்சுமணனும் அதிமுக சார்பில் நயினார் நாகேந்திரனும் பலப்பரிட்ஷை நடத்துகிறார்கள். கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் 722 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்று 2006ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாலைராஜாவிடம் 606 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்று தற்போது மூன்றாவது முறையாக நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து நான்கு முறை தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை எம் எல் ஏ ஆனவரும் திருநெல்வேலி மாநகராட்சி மேயராகவும் இருக்கும் ஏ எல் எஸ்ன் மகன் லெட்சுமணன் போட்டியிடுகிறார். சிட்டிங்க் எம் எல் ஏ மாலைராஜாவின் ஆதரவும் கட்சி மற்றும் தந்தையின் செல்வாக்கும் கரைசேர்க்கும் என நம்பியிருக்கிறார்.  

தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுகவிற்கு சம அளவில் செல்வாக்கு உள்ளது. வேட்பாளர் அறிவித்த நாளில் இருந்து கணிக்க முடியாத அளவிலேயே இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் பந்தயத்தில் திமுக சற்று முன்னே நின்றாலும் நயினார் நாகேந்திரனின் மற்றும் கட்சியினரின் அபாரமான பீல்ட் வொர்க்கினால் உடனடியாக சுதாரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இதுவரை 1951 ல் இருந்து 2001 வரை தொகுதி வெற்றி நிலவரம் கீழே. ( நன்றி: Press Information Bearu chennai) 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட மாலைராஜா 65,517 ஓட்டுகளும் அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 64,911 ஓட்டுகளும் வாங்கினார். 606 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.


இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சை போல பரபரப்பான போட்டியில் திமுகவும் அதிமுகவும் திமுக 2001 தேர்தலில் 722 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தொகுதியை இழந்து 2006 தேர்தலில் 606 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மீண்டும் தொகுதியை கைப்பற்றியிருக்கிறது. தற்போதய பரபரப்பான் சூழலில் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது மற்றும் மதிமுக எதிர் கூட்டணியில் இல்லாதது போன்ற சாதகமான சூழ்நிலைகள் திமுகவிற்கு இருந்தாலும் கடுமையான களப்பணி, கடந்த முறை கடும் போட்டியை கொடுத்த அதிமுக வேட்பாளர், பாளை தொகுதிக்கு பரிச்சயமான திமுக வேட்பாளர் என சில காரணங்களால் தற்போதைய நிலவரப்படி 60:40 என்ற அளவில் அதிமுகவின் ஆதிக்கம் அதிகமா படுகிறது. தேர்தலுக்கும் இன்னும் ஓரு வாரம் கூட இல்லாத நிலையில் இறுதி நேர களப்பணி, வாக்குகள் பதிவாகும் சதவிகிதம் ஆகியவற்றால் இன்னமும் கணிக்க முடியாத தொகுதியாக இது இருக்கிறது. 

 டெய்ல் பீஸ்:  பாளை தொகுதியை பொறுத்தவரை சிட்டிங் எம் எல் ஏ மைதீன்கான் பக்கமாகவே காற்று பலமாக வீசுகிறது


Read more...

ஆர்க்கிடெக்ட் அதிசயங்கள் - தஞ்சை பெரிய கோவில்

Monday, November 1, 2010

தஞ்சை பெரிய கோவில்

இலங்கையில் பெரிய புத்தர் சிலையை பார்த்துவிட்டு தஞ்சைக்கு வந்த இராஜராஜ சோழன் அதே மாதிரி சிவனுக்கு கோயில் கட்ட ஆசைப்பட்டார். விளைவு தஞ்சை பெரிய கோவில். இக்கட்டிடத்திற்கு 14 நிலைகள் உண்டு. 216 அடி உயரமுடையது. ஒவ்வொரு கோபுர மூலையிலும் நந்திகள் அமைக்கப்பெற்றுள்ளது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால், எல்லோரும் நினைத்து கொண்டிருப்பது போல் இராஜராஜ சோழனின் தலைமை ஆர்க்கிடெக்ட் பெருந்தச்சர் குஞ்சரமல்லர் என்றால் தவறு. அவருக்கும் கீழே இருந்த நித்த வினோத பெருந்தச்சன் எனப்படும் குணவன் எனப்படும் சிற்பியே தலைமை ஆர்கிடெக்டாக பணிபுரிந்து வந்தார். ( கோயிலின் உச்சியில் இடம் பெற்றிருக்கும் அந்த கல் விமானத்தை எந்தவித கிரேனும் இல்லாம உச்சியில் ஏற்றிய டெக்னிக் நித்த வினோத பெருந்தச்சனுடையது) அவருக்கு உதவியாக இருந்த மற்றுமொரு ஆர்க்கிடெக்ட் இலத்திச்சடையண் என்பவராகும். மேலும் இவர்களுக்கு டிசைனராக பணிபுரிந்தது சீராளன் என்னும் ஓவியர்.

வெறும் செங்கற்கள் நிலைபெறாது என புரிந்து வைத்திருந்த இராஜராஜ சோழன் நித்த வினோத பெருந்தச்சனின் யோசனைப்படி நாரத்தை எனப்படும் இடத்திலிருந்து (தற்போதைய திருவல்லம் அருகே ) கருங்கற்களைக் கொண்டு கற்றளி எழுப்பினார். கோபுரத்தின் மொத்த உயரம், மொத்த நிலைகள் நீள அகலம், மூல லிங்கத்தின் உயரம் என மொத்தமும் பேசி திட்டமிடப்பட்டு விவாதித்து பிறகு கட்டிட வேலைகள் துவக்கப்பட்டன. கோபுரத்தின் உச்சியில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வழியும் நந்தி உள்ளிட்ட துணைச் சிற்பங்களை கொண்டு செல்லப் பட்ட வழியும், முறையும் இப்பொழுதும் கூட ஆச்சர்யமாகத்தான் உள்ளது.


மேல்நிலைகளுக்கும், உச்சிக்கும் பொருட்களைக் கொண்டு செல்ல சாரம் கட்டுவதா? அல்லது உச்சியில் இராட்டினம் அமைத்து கருங்கற்களை கயிற்றால் கட்டி இழுப்பதா? அல்லது  கோபுர உச்சியில் இருந்து தரையின் வரையில் ஒரே நேரான  சரிவான பாதை அமைப்பதா? என குழப்ப நிலை வேறு. அவ்வாறு நீளமான சரிவான பாதை அமைக்கும் போது அந்த பாதையின் நீளம் ஒரு கிராமத்தையும் (ஏறக்குறைய 6 கி. மீ) தாண்டி நிற்கும் என அளந்து பார்த்து அத்திட்டத்தையும் கைவிட்டனர். அவ்வளவு உயரத்திற்கும் நீளத்திற்கும் மண் பாதை போட முடியாது என மாற்று வழி யோசித்தனர். பின்புதான், கோயிலின் கோபுரத்தைச் சுற்றியே கோபுரத்தின் உச்சி வரை வளைவு பாதை போடுவதென தீர்மானித்தார்கள். இந்த ஐடியா நித்த வினோத பெருந்தச்சனுடையதாகும். கோயில் கோபுரம் எழ எழ அதனை சுற்றியே மண் கொட்டப்பட்டு, மண்பாதை அமைக்கப் பட்டது. அவ்வழியே கோபுரத்திற்கு தேவையான துணைச்சிற்பங்கள், கோபுர மூலையில் வைப்பதற்கான நந்திகள் மற்றும் விமானங்கள் போன்றவை யானைகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன.  அந்த மண்பாதையின் அகலம் 16 அடியாகும்.

கருங்கற்கள் தூண்கள் பெரும்பாலும் ஒரே கல்லில் செய்வதென தீர்மானிக்கப்பட்டது. உத்திர கட்டைகள் மட்டும் சாந்தினால் இணைக்கப்பட்டது. சாந்து கலவை செய்வதற்கு புற்று மணல், சாம்பிராணி மற்றும் ஏகப்பட்ட மூலிகைப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது. சோழர்களின் ஆட்சிக்காலம் முடிந்து வெகு காலம் வரை எத்தனையோ மன்னர்கள் வந்து தஞ்சையை சூறையாடிய பிறகும் இந்த பிரகதீஸ்வரர் ஆலயம் மட்டுமே அவர்களையும் காலத்தையும் வென்று நின்று கொண்டிருக்கிறது.

இந்த கோவில் கட்டுவதற்கான தங்கம், வெள்ளி மற்றும் செப்பு பொருட்களுக்காக மேலை சாளுக்கியம் (இப்போதைய கர்நாடகா)  என்கிற நாட்டோடு  இராஜராஜ சோழன் போர் புரிய வேண்டியதாயிற்று. அப்போரில் துங்கபத்திரா நதிக்கரையில் ஏழு லட்டம் படை வீரர்களுடன் இராஜராஜ சோழன் அணி வகுத்திருந்த போது முதல் வீரனாக ஆற்றில் இறங்கி போர் புரியச் சென்றது சாட்சாத் இராஜராஜ சோழன்தான்.


ஹைலைட்ஸ்

  • கோபுரத்தை சுற்றி மண்பாதை  அமைப்பதற்காக கொட்டப்பட்ட மண்ணின் அளவு 3 லட்சம் கூடையாகும். (ஒரு கூடை = 22 கிலோ). தேவைப்பட்ட மண் ஆறுகள், ஏரிகள், குளங்களிலிருந்து எடுக்கப் பட்டன. தேவைக்கான மண்ணும் கிடைத்தது. அதே சமயம் நீர் நிலையங்களும் ஆழமாகின.

  • கோபுர உச்சியில் வைக்கப்பட்டிருக்கும் கல் (விமானம்) ஒரே கல்லினால் ஆனது அல்ல. கீழேயே இரண்டு துண்டுகளாக செய்து மேலே கொண்டு செல்லப்பட்டு மறுபடியும் ஒட்ட வைக்கப்பட்டது.  இந்த விமானத்தின் மொத்த எடை 81 டன்களாகும்.

  • கோபுரம்  14 நிலைகள் உடையது.  கோபுரத்தின் மொத்த உயரம் 216 அடி.

  •  ஒவ்வொரு கோபுர மூலையிலும் நந்திகள் அமைக்கப்பெற்றுள்ளது. கோபுர மூலைகளில் வைக்கப்பட்டுள்ள  நந்தி 6.5 x  5.5 அடி அளவுகள் உடையது.

  • இதன் வாசலில் இருக்கும் நந்தியின் எடை 27 டன்களாகும்.

  • கோபுர கீழ்தளத்தின் மொத்த சுற்றளவில் 14ல் ஒரு பங்கானது மேல் நிலையில் உள்ள கோபுர தளத்தின் உட்பக்க சுற்றளவும் சமமாகும்.

  • இந்த கோவில் மண்டபத்தில் கர்ணம் எனப்படும்  நடனச்சிற்பங்களுக்கு மாடல் யார் தெரியுமா? இராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவிதான்

- நன்றி  திரு பா. சுப்ரமணியம் & பில்டர்ஸ் லைன்

- பா. சுப்ரமணியம் எழுதி   ”பில்டர்ஸ் லைன்” பத்திரிக்கையில் வெளிவந்த ’ஆர்க்கிடெக்ட் அதியசங்கள்’ எனும் தொடரில் இருந்து டைப்பியது

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP