Monday, April 27, 2009

மனோகரா….மண்டைய போட்றாத… - கலைஞருக்கு சில கேள்விகள்…

மனோகரா….மண்டைய போட்றாத… - கலைஞருக்கு சில கேள்விகள்…



தலைப்பை பாத்துட்டு நீங்களே ஏதாவது கற்பனை பண்ணீராதீங்க….இந்த பதிவு ரெண்டு பகுதியா இருக்கு…முதல்ல
என் ஆருயிர் நண்பன் மனோகரனை பத்தி… அப்புறம் நம்ம தானை தலைவர், தமிழன தலைவர் கலைஞருட்ட எனக்கு தெரியாத விஷயத்தை கேட்டு தெரிஞ்சுகலாம்னு…

மனோகரன்

என் ஆருயிர் நண்பன். அவன் நேத்து டீவில கலைஞர் உண்ணாவிரதம் இருக்குறத பாத்துட்டு அவனும் இருக்க ஆரம்பிச்சவந்தாங்க… இன்னும் அவன் நிறுத்தல….அவருக்காது ரெண்டு பொண்டாடியும் வந்து சூசு குடுத்தாங்க…. இவனுக்கு இன்னும் கல்யாணமே ஆகல…. யாரு வந்து சூசு குடுக்க… நான் போயி குடுக்க போனதுக்கு இலங்கைல யாரோ கோத்த பயலோ கோட்டி பயலோ ஓருத்தன் இருக்கானாம்ல அவன் வந்து நாங்க சண்டய நிப்பாட்டிடோம்னு பத்திரத்துல கையெழுத்து போட்டு தந்தாதான் முடிப்பேன்னு சொல்லுறான்.. இவனுக்கு ஏற்கனவே அல்சர் இருக்கு….. அதுபோக உடம்புல சொல்ல படாத இன்னும் பல வியாதில்லாம் இருக்குல்லா… அதான் அவன பாத்து சொல்லுறேன் மனோகரா….மண்டைய போட்றாத…


சாமி.. எனக்கு ஓரு உண்மை தெரிஞ்சாகணும்……



கலைஞரிடம் சில கேள்விகள்..

1) இலங்கைல போர் நிறுத்தற வரைக்கும் உண்ணாவிரதம்னு இருந்திய….ரொம்ப சந்தோஷம்.. ஆனா பாருங்க..இந்த சோனியா புள்ளயும் இந்த சிதம்பரம் பயலும் சேந்து உங்க கிட்ட பொய் சொல்லி உண்ணாவிரதத்த முடிச்சு புட்டாப்ல…. ஆனா அந்த விளங்காத பய ராஜபக்‌ஷே என்னன்னா போர் முடியலன்னு சொல்லிட்டான். இப்ப நீங்க மறுபடியும் உண்ணாவிரதம் இருப்பியளா… இல்ல என்ன பண்ணுவிய சொல்லும்..?



2) உங்க உடன்பிறப்புக்கெல்லாம் நேத்து காலைல 6 மணில இருந்து தமிழ் உணர்வு பீ…றிட்டு வந்து அங்கங்க உண்ணாவிரதம் இருந்தாங்க.. இப்ப அவங்க அந்த உண்ர்வ எங்கிட்டு வச்சுட்டு இருக்கானுக சொல்லும் ??



3) இந்த சிதம்பரம் பய மேலயும், சோனியா புள்ள மேலயும் பொய் சொல்லிடானுவன்னு சொல்லி போலிஸ் காரனுவட்ட போய் கேஸ் குடுப்பியளா.???



4) இந்த ராஜபக்‌ஷேயும் , கோட்டி பயலும் சேந்துகிட்டு போரை நிப்பாட்ட மாட்டன்னு சொல்லிட்டு இருக்கானுவ….. பின்ன இங்க இருந்து ரெண்டு தூது பயலுவ.. அங்க போயி என்ன புடுங்கிட்டு வந்தானுவ ???



5) அப்புறம் நம்ம கனிமொழியக்கா..இந்த விஷயத்துக்காக நேத்து ஏதும் உங்ககிட்ட ராஜினாமா லெட்டர் ஏதும் குடுத்துச்சா..????? குடுத்துன்னா எங்ககிட்ட சொல்லிருங்கப்பு.. நாங்களும் தெரிஞ்சுகுடுவோம்ல..


Saturday, April 25, 2009

ஈழத்து சிறுமி...









சாகக் கிடக்கிறான்
என் அண்ணன்
சிரித்து கொண்டே….

ஏன் சிரிக்கிறாய் ?
கேட்டதற்கு சொன்னான்.
நண்பர்கள் எல்லாம்
சிங்கள குண்டுகளால்
செத்து மடிகையில்

அவனின்
மார்பை துளைத்தது
இந்திய குண்டுகளாம்…

எனக்கு
விளங்க வில்லை
இந்தியாவில் இருந்து
காப்பாற்ற அல்லவா
வருவார்கள் என சொன்னான்…

சிரித்து கொண்டே
மரித்து போனான்…

என்னால் சிரிக்க
முடிய வில்லை .......................



ஈழம்..





ஈழம்..

மனிதன் மரத்து
போனதின் காயம்

மனிதம் மரித்து
போனதின் சாயம்…..

இரத்தங்களற்ற விடியலும்…..
யுத்தங்களற்ற பூமியும்
ஏன் ஈழனுக்கு இல்லை?

ஈழப் பிறவிகள் - என்ன
ஈனப் பிறவிகளா?

முன்னொரு காலத்தில்
மனிதன் என்றொரு
உயிரினம் இருந்ததாம்
இப்போது அவன்
எங்கே என்று
தெரிய வில்லை…

நாங்கள். யாரிடம்
போய் புலம்ப ……..

Wednesday, April 15, 2009

சரத்பாபு.....அக்னி குஞ்சொன்று கண்டேன்.....


அரசியல் ஒரு சாக்கடை என நாமெலலாம் புலம்பி கொண்டே இருக்க... ஒருவன் மட்டும் சுத்த படுத்த களத்தில் இறங்கி விட்டான்...
இத்தனை நாள் எதிர்பார்த்த மாற்றம் இதுதான்! தென்சென்னை வாக்களர்களுக்கு ஒரு வேண்டுகோள்! நமது நண்பர்களையும், உறவினர்களையும் இவருக்கு வோட்டு போட வைப்பது, நம்மை ஆட்சி செய்ய திறமையற்ற பொறுக்கிகளை தேர்ந்தெடுப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று நினைக்கும் அனைவரது கடமை! இன்ஃபொசிஸ் நாரயணமூர்த்தி அவர்கள், தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் ஜெயிப்பது மக்களுக்கு நல்லது என்று சொல்லியிருப்பது அர்த்தம் பொதிந்தது!ஒரு நல்ல இளைஞனை மக்களுக்கு அறிமுகப்படுத்திய விகடனுக்கு நன்றி.


இந்த வார ஜீ வியில் தென்சென்னை வேட்பாளர்..சரத்பாபு வை பற்றி படித்து வியந்து போனேன்..


ஜீ வியில் வந்தவை




''என்னோட சின்ன வயசில எங்க அம்மா சாப்பாடு வேணாம்டானு சொல்லிட்டு, அடிக்கடி தண்ணி குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. 'தண்ணின்னா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கு'னு சின்னப் பையன் நானும் நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது, இட்லி கடையில் கிடைக்கிற வருமானத்தை வச்சு அம்மா, நான், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பினு ஆறு பேர் எப்படி சாப்பிட முடியும்? அதான் எங்க அம்மா தண்ணீரை குடிச்சே வயித்தை நிறைச்சுட்டு இருக்காங்க.

இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'யூத் ஐகான்' விருதும் பெற்றவர் சரத்பாபு. ஐ.ஐ.எம்-மில் படித்தவர்களெல்லாம் பல லட்சம் மாத சம்பளத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் செட்டில் ஆவது வழக்கமாக இருக்க... சரத்பாபு எடுத்தது மாறுபட்ட முடிவு. பொதுவாக ரிப்பன் வெட்டும் எந்த நிகழ்ச்சிக்கும் போகாத இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, சரத்பாபு முதல் முதலாக காலேஜ் ஒன்றில் கேன்டீன் துவங்கியபோது அதன் துவக்க விழாவுக்கு வந்து இவரை உற்சாகப்படுத்தினார்.
நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற 'பிட்ஸ்-பிலானியில்' இன்ஜினீயரிங் பட்டமும் வாங்கியவர். ஐ.ஐ.எம்-மிலும், பிட்ஸ்-பிலானியிலும் படித்த அத்தனை பேரிடம் இல்லாத ஒரு கூடுதல் 'தகுதி' சரத்பாபுவுக்கு உண்டு.
ஆம். சரத்பாபு மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர்! அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர். அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் இத்தனை பட்டங்களையும் பெற்றார் சரத்பாபு.


Hindu வில் வந்தவை..




“Amma could have sent me to work and made her life much easier. But, she chose to make me study... I had to give my best”




Mr. Sarathbabu attributes his career growth to the calculated risks he took at the beginning. He started off with two people.




“We did the organising and also doubled up as waiters and served the food to clients. Part of me kept asking, you’re an IIM-A product, should you be doing this?... And the other part of me kept saying, it does not matter what you do, just do it well.”


ஒரு சாதாரண வேலைக்கு கூட...எத்துனை கேள்விகள்...படிப்பு..முன் அனுபவம்..திறமை...என்று கேட்கிறார்கள்...நமக்காக உழைக்க ஒருவனை அனுப்பும் போது சரத்பாபு போன்ற படித்த, கஷ்டமும்,நிஜமும்,சூழ்நிலைகளும் நன்கு தெரிந்த ஒருவனை அனுப்பி வைக்க பத்திரிகைகளும் உதவ வேண்டும். நாளைய இந்தியாவிற்கு...இதுவே முதல் மையில் கல்லாக இருக்கட்டுமே...

எனக்கு தெரிந்து ஜூ.வி சமிபத்தில் செய்த பெரிய விஷ்யம் இது போன்றவர்களை பற்றி கட்டுரை எழுதியது.

Sunday, April 12, 2009

ஐ நா .வுக்கு இதை கவனிக்க நேரம் இருக்குமா..??!

எனக்கு வந்த நெஞ்சுருக்கும் மின்னசல் உங்கள் பார்வைக்கு

Hitler Re-born

Mahinda Rajapakse – Srilankan President

We really don’t like to publish these pictures………


But we don’t have any option or choice to prove


What happening in SriLanka ………………………



Srilankan Army Shelled in Civilian Place

Srilankan Army attacked hospital last month…..

What this child did? This child spoke Tamil language that’s the only reason Srilankan Army did like this Is this acceptable?

None of the Indian or International news papers displaying the news Desperately they are hiding the news………….


Jan’09 - Srilankan Army attacked civilan people in Moongilaru, Srilanka

Almost 10 children are killed in this attack... Who is going to question Srilanka ?




What this child did? only one wrong thing is, this child is Tamil child


Pregnant women brutally killed by Srilankan Army…………




This is the world worst deadliest attack……. 8 month foetus also killed

A pregnant women killed by Srilankan army on 17-March-2009 (Baby Child inside her body) ..........


Where is the Head?


Just 13 year old school student What is the use of UN?


From 01-Jan-2009 to 30-March-2009……………………………………………………..


3812 innocent Tamil people killed by Srilankan Army it includes more than 900 children.


UN report says….. Every day 42 Tamil people are killed by Srilankan Army……


They are their own citizens………………………………………………………………….




Srilankan government not allowed UN and ICRC members in Vanni (Tamil place in Srilanka) They want to hide the news from the entire world….. Planned and Perfect GENOCIDE


Please forward Rajapaksey & Co



Some people may think this is internal problem of a country....... why we should worry about? Definitely we should worry because,


When innocent people are killed for no reason by their own government any where in the world as a human being with some humanity

We should raise a voice against genocide

If it is an internal problem or war means why we studied about Hitler in our history book.

The Aim is the future generation should not repeat the same mistake again.


I m not willing my Children’s to read this SriLanka Tamil Genocide as a history chapter.

So please try to understand and please forward


Booker prize winner – Arundhathi Roy statement about Srilankan Issue
http://timesofindia.indiatimes.com/articleshow/4331986.cms

எங்கே மனித நேயம் .....?

எங்கே மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள் ....?

எங்கே...மனிதன்....?

உங்கள் கருத்துக்களை பின்னுட்டத்தில் பகிரவும் ......

Friday, April 3, 2009

காயா ... ? காதலா ... ?


என்
இதய பூமியில்
ஏன்
இத்தனை எரிமலை ..... ?

என்
கரிசல் காட்டில்
ஏன்
இத்தனை விரிசல் ...... ?


இது
அவள் பேசிய
வார்த் தையின் வெப்பத்திலா .... ?

அல்லது
அவள் வீசிய
பார் வையின் உஷ்ணத்திலா .... ?

நாம்செய்த
வார்த்தைப் போர்களின்
வீர மரணங்களா இவை ..... ?

சகியே !
போதும் ! சகிக்க
வில்லை இந்த யுத்தம் ..

தவறுக்கு
தண்டனையாக
தஞ்சம் அடைகிறான் தலைவன் ..

மன்னிக்க
மாட்டாயா ? மதுரமே !
மண்டி இடும் மன்னவனை ..

உன்
இதயம் என்ன
இன்னுமா இளக வில்லை ... ?

இனியும்
தாங்காது இப்போதே
சொல் காயா .......... ? காதலா .......... ?

Thursday, April 2, 2009

தொலைந்து போனேன்..........!!!!!

ஏன்
உன்னை....
பார்த்து தொலைத்தேன்..............

உன்னை
பார்த்ததால்
தொலைந்து போனேன்................


- கண்ணா