Monday, November 1, 2010

ஆர்க்கிடெக்ட் அதிசயங்கள் - தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில்

இலங்கையில் பெரிய புத்தர் சிலையை பார்த்துவிட்டு தஞ்சைக்கு வந்த இராஜராஜ சோழன் அதே மாதிரி சிவனுக்கு கோயில் கட்ட ஆசைப்பட்டார். விளைவு தஞ்சை பெரிய கோவில். இக்கட்டிடத்திற்கு 14 நிலைகள் உண்டு. 216 அடி உயரமுடையது. ஒவ்வொரு கோபுர மூலையிலும் நந்திகள் அமைக்கப்பெற்றுள்ளது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால், எல்லோரும் நினைத்து கொண்டிருப்பது போல் இராஜராஜ சோழனின் தலைமை ஆர்க்கிடெக்ட் பெருந்தச்சர் குஞ்சரமல்லர் என்றால் தவறு. அவருக்கும் கீழே இருந்த நித்த வினோத பெருந்தச்சன் எனப்படும் குணவன் எனப்படும் சிற்பியே தலைமை ஆர்கிடெக்டாக பணிபுரிந்து வந்தார். ( கோயிலின் உச்சியில் இடம் பெற்றிருக்கும் அந்த கல் விமானத்தை எந்தவித கிரேனும் இல்லாம உச்சியில் ஏற்றிய டெக்னிக் நித்த வினோத பெருந்தச்சனுடையது) அவருக்கு உதவியாக இருந்த மற்றுமொரு ஆர்க்கிடெக்ட் இலத்திச்சடையண் என்பவராகும். மேலும் இவர்களுக்கு டிசைனராக பணிபுரிந்தது சீராளன் என்னும் ஓவியர்.

வெறும் செங்கற்கள் நிலைபெறாது என புரிந்து வைத்திருந்த இராஜராஜ சோழன் நித்த வினோத பெருந்தச்சனின் யோசனைப்படி நாரத்தை எனப்படும் இடத்திலிருந்து (தற்போதைய திருவல்லம் அருகே ) கருங்கற்களைக் கொண்டு கற்றளி எழுப்பினார். கோபுரத்தின் மொத்த உயரம், மொத்த நிலைகள் நீள அகலம், மூல லிங்கத்தின் உயரம் என மொத்தமும் பேசி திட்டமிடப்பட்டு விவாதித்து பிறகு கட்டிட வேலைகள் துவக்கப்பட்டன. கோபுரத்தின் உச்சியில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வழியும் நந்தி உள்ளிட்ட துணைச் சிற்பங்களை கொண்டு செல்லப் பட்ட வழியும், முறையும் இப்பொழுதும் கூட ஆச்சர்யமாகத்தான் உள்ளது.


மேல்நிலைகளுக்கும், உச்சிக்கும் பொருட்களைக் கொண்டு செல்ல சாரம் கட்டுவதா? அல்லது உச்சியில் இராட்டினம் அமைத்து கருங்கற்களை கயிற்றால் கட்டி இழுப்பதா? அல்லது  கோபுர உச்சியில் இருந்து தரையின் வரையில் ஒரே நேரான  சரிவான பாதை அமைப்பதா? என குழப்ப நிலை வேறு. அவ்வாறு நீளமான சரிவான பாதை அமைக்கும் போது அந்த பாதையின் நீளம் ஒரு கிராமத்தையும் (ஏறக்குறைய 6 கி. மீ) தாண்டி நிற்கும் என அளந்து பார்த்து அத்திட்டத்தையும் கைவிட்டனர். அவ்வளவு உயரத்திற்கும் நீளத்திற்கும் மண் பாதை போட முடியாது என மாற்று வழி யோசித்தனர். பின்புதான், கோயிலின் கோபுரத்தைச் சுற்றியே கோபுரத்தின் உச்சி வரை வளைவு பாதை போடுவதென தீர்மானித்தார்கள். இந்த ஐடியா நித்த வினோத பெருந்தச்சனுடையதாகும். கோயில் கோபுரம் எழ எழ அதனை சுற்றியே மண் கொட்டப்பட்டு, மண்பாதை அமைக்கப் பட்டது. அவ்வழியே கோபுரத்திற்கு தேவையான துணைச்சிற்பங்கள், கோபுர மூலையில் வைப்பதற்கான நந்திகள் மற்றும் விமானங்கள் போன்றவை யானைகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன.  அந்த மண்பாதையின் அகலம் 16 அடியாகும்.

கருங்கற்கள் தூண்கள் பெரும்பாலும் ஒரே கல்லில் செய்வதென தீர்மானிக்கப்பட்டது. உத்திர கட்டைகள் மட்டும் சாந்தினால் இணைக்கப்பட்டது. சாந்து கலவை செய்வதற்கு புற்று மணல், சாம்பிராணி மற்றும் ஏகப்பட்ட மூலிகைப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது. சோழர்களின் ஆட்சிக்காலம் முடிந்து வெகு காலம் வரை எத்தனையோ மன்னர்கள் வந்து தஞ்சையை சூறையாடிய பிறகும் இந்த பிரகதீஸ்வரர் ஆலயம் மட்டுமே அவர்களையும் காலத்தையும் வென்று நின்று கொண்டிருக்கிறது.

இந்த கோவில் கட்டுவதற்கான தங்கம், வெள்ளி மற்றும் செப்பு பொருட்களுக்காக மேலை சாளுக்கியம் (இப்போதைய கர்நாடகா)  என்கிற நாட்டோடு  இராஜராஜ சோழன் போர் புரிய வேண்டியதாயிற்று. அப்போரில் துங்கபத்திரா நதிக்கரையில் ஏழு லட்டம் படை வீரர்களுடன் இராஜராஜ சோழன் அணி வகுத்திருந்த போது முதல் வீரனாக ஆற்றில் இறங்கி போர் புரியச் சென்றது சாட்சாத் இராஜராஜ சோழன்தான்.


ஹைலைட்ஸ்

  • கோபுரத்தை சுற்றி மண்பாதை  அமைப்பதற்காக கொட்டப்பட்ட மண்ணின் அளவு 3 லட்சம் கூடையாகும். (ஒரு கூடை = 22 கிலோ). தேவைப்பட்ட மண் ஆறுகள், ஏரிகள், குளங்களிலிருந்து எடுக்கப் பட்டன. தேவைக்கான மண்ணும் கிடைத்தது. அதே சமயம் நீர் நிலையங்களும் ஆழமாகின.

  • கோபுர உச்சியில் வைக்கப்பட்டிருக்கும் கல் (விமானம்) ஒரே கல்லினால் ஆனது அல்ல. கீழேயே இரண்டு துண்டுகளாக செய்து மேலே கொண்டு செல்லப்பட்டு மறுபடியும் ஒட்ட வைக்கப்பட்டது.  இந்த விமானத்தின் மொத்த எடை 81 டன்களாகும்.

  • கோபுரம்  14 நிலைகள் உடையது.  கோபுரத்தின் மொத்த உயரம் 216 அடி.

  •  ஒவ்வொரு கோபுர மூலையிலும் நந்திகள் அமைக்கப்பெற்றுள்ளது. கோபுர மூலைகளில் வைக்கப்பட்டுள்ள  நந்தி 6.5 x  5.5 அடி அளவுகள் உடையது.

  • இதன் வாசலில் இருக்கும் நந்தியின் எடை 27 டன்களாகும்.

  • கோபுர கீழ்தளத்தின் மொத்த சுற்றளவில் 14ல் ஒரு பங்கானது மேல் நிலையில் உள்ள கோபுர தளத்தின் உட்பக்க சுற்றளவும் சமமாகும்.

  • இந்த கோவில் மண்டபத்தில் கர்ணம் எனப்படும்  நடனச்சிற்பங்களுக்கு மாடல் யார் தெரியுமா? இராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவிதான்

- நன்றி  திரு பா. சுப்ரமணியம் & பில்டர்ஸ் லைன்

- பா. சுப்ரமணியம் எழுதி   ”பில்டர்ஸ் லைன்” பத்திரிக்கையில் வெளிவந்த ’ஆர்க்கிடெக்ட் அதியசங்கள்’ எனும் தொடரில் இருந்து டைப்பியது

Wednesday, August 18, 2010

ரத்து செய்.. ரத்து செய்... உமாசங்கர் சஸ்பெண்டை ரத்து செய்...



தருமி ஐயாவின் வேண்டுகோளுக்கிணங்க இந்த புதன் கிழமை திரு உமாசங்கர் ஐஏஎஸ் அவர்களுக்கு ஆதரவாக அவர் சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து இந்த சிறிய பதிவை எழுதுகிறேன்..

உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.


அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.


( நன்றி தருமி ஐயா, வால் பையன்)

Monday, August 16, 2010

வீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D

நீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். இது இலவசமாக கிடைக்கும் இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த மென்பொருளின் சிறப்பாக சொல்லலாம். கட்டில் சேர் போன்ற இண்டீரியர் பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின் பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம் தேவைக்கேற்ப பொருத்தி பார்த்து அறையின் அளவுகளை மாற்றி கொள்ளவும் மிக எளிதாக இருக்கிறது.



நீங்கள் ஆட்டோகேட் அல்லது 3D Home Architect உபயோகித்திருந்தால் இந்த மென்பொருளை உபயோகிக்க எந்தவித சிரமமும் இருக்காது. அது தெரியாதவர்கள் உபயோகிப்பதற்காக சிறிய அறிமுக விளக்கம் மட்டும். இதில் உள்ள அளவுகள் அனைத்தும் செமீ ல் உள்ளீடு செய்ய வேண்டும். 10அடிக்கு 10 அடி எனில் அதை முதலில் செமீக்கு மாற்றிக்கொள்ளுங்கள் 10 அடி = 305 செமீ



மேல் வரிசையில் plan மெனுவில create walls என்பதை க்ளிக் செய்யவும். பின் வலது பக்க பேனலில் க்ளிக் செய்து அறை அளவுகளை கொடுத்து வரைய ஆரம்பியுங்கள். ஓரு அறை போன்ற அமைப்பு மட்டும் வந்தால் போதும் மற்றவற்றை எடிட் பண்ணும் வசதி இருக்கிறது. எந்த சுவரை எடிட் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த சுவரை டபுள் க்ளிக் செய்தால் அந்த சுவரின் அளவுகள் தனி விண்டோவில் தெரியும் அதில் நமக்கு தேவையான நீளம், அகலம் மற்றும் உயர்த்தை மாற்றி கொள்ளலாம்.

சைடு பாரில் இருக்கும் டோர்ஸ் அண்ட் வின்டோஸ் ஆப்ஷனை பயன்படுத்தி தேவைப்படும் கதவை தேர்ந்தெடுத்து ட்ராக் செய்து ப்ளானில் தேவைப்படும் இடங்களில் வைத்து விடுங்கள். விண்டோவிற்கும் இதே முறையில் செய்யுங்கள்

இதில் பெட்ரூம், பாத்ரூம், சமையலறை மற்றும் ஹால்களுக்கான பர்னிச்சர் செட்கள் இன்பில்ட் ஆக இருப்பதால் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து வைத்து பார்த்து கொள்ளலாம்.



எடிட் ஆப்ஷனை தேர்வுசெய்து நமக்கு தேவையான அளவுகளை மற்றூம் கலர்களை மாற்றி பார்த்து கொள்ளலாம். புதிதாக வீடு கட்ட போகிறவர்கள் மற்றும் வீடு கட்டி கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான மென்பொருள். குறிப்பாக இண்ட்டீரியர் டிஸைனுக்கு இது மிகவும் உபயோகமான மென்பொருள். இது முற்றிலும் இலவசமாகவே கிடைக்கிறது. இந்த சுட்டியில் தரவிறக்கி இன்ஸ்டால் செஞ்சுகோங்க.




Tuesday, July 27, 2010

இராமாயணம் நெல்லையில் நடந்ததா?? ஜடாயு தீர்த்தமும் காட்டு இராமர் கோவிலும் சாட்சியங்களா??

நேற்றுதான் இராவணன் படம் பார்க்க முடிந்தது. நான் பொதுவாக பொழுதுபோக்கவே படம் போவதாலும் இதில் விஷுவல் ட்ரீட் நல்லா இருந்ததாலும் எனக்கு படம் பிடித்திருந்தது. ஆனால் மணிரத்னம் கடத்தப்படும் இடமாக நெல்லையை ( அவரின் செண்டிமெண்ட்..??!!) காண்பித்து இருப்பார். அதை பார்க்கும்போது என் நினைவுகள் நெல்லையின் காட்டுராமர் கோவிலையும், ஜடாயு தீர்த்தத்தையும் நோக்கி போக ஆரம்பித்தது.


சரியாக நினைவில்லாத ஓரு நாளின் சாயங்காலம் உறவினரின் அழைப்பின் பேரில் நெல்லை அருகேயுள்ள அருகன்குளம் கிராமத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தோம். எனக்கு அந்த கோவிலுக்கு செல்வது அதுதான் முதல் முறை, நண்பர் சில முறைகள் சென்றிருக்கிறார். அங்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வேறெங்க போகலாம்னு கேள்வியை வீசி விட்டு வண்டியை எடுக்க எத்தனிக்கும் போது

"இங்க பக்கத்துலதான் ஜடாயு தீர்த்தமும், காட்டு ராமர் கோவிலும் இருக்கு ஹிஸ்டாரிக்கல் பிளேஸ் இராமயணயத்துல இராவணன் சீதையை கடத்திட்டு போனது இங்க இருந்துதான். தெரியுமா?

வந்த எதிர் கேள்வியில் சுவாரஸ்யம் பல மடங்கு கூடி என்னப்பா சொல்ற போலாம் உடனேன்னு வண்டியை திருப்பினோம்.

ஜடாயு  தீர்த்தம்
சற்று குறுகலான சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த ஓரு பாதையில் செல்லும் போதே அணில்களின் குறுக்கு ஓட்டங்களும், அடர்ந்த வளர்ந்திருந்த மரங்களும் ஓரு காட்டுக்குள் செல்வது போன்ற தோற்றத்தை கொடுத்தது. அதிலிருந்து கொஞ்சம் தள்ளிப்போனால் ஓரு கோசாலை வருகிறது அதையும் தாண்டி சென்றால் முதலில் வருகிறது ஜடாயு தீர்த்தம். சென்றால் சிறிய கிணறு போன்ற அமைப்பும் அதையொட்டிய ஆறும் அதனுடன் இணைந்த சிறிய கோவிலும் அமைந்துள்ளது. அதாவது சீதையை இராவணன் கடத்தி செல்லும் போது ஜடாயு அவனுடன் போராடி வீழ்ந்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது அங்கு வந்த இராமன் ஜடாயுவிற்கு தண்ணீர் தருவதற்காக அம்பால் உருவாக்கிய கிணறுதான் இது என்று இங்குள்ளவர்களால் நம்பப்படுகிறது. பிறகு ஜடாயு இறந்தவுடன் அவருக்கான ஈமகாரியங்களை சற்று தொலைவிலுள்ள சிவன் கோவிலில் செய்ததாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. இங்கு மூன்று கிணறு போன்ற அமைப்புகளை ஜடாயு தீர்த்தம், இராம தீர்த்தம், சிவ தீர்த்தம் என அழைக்கிறார்கள். இதனருகிலேயே இருக்கிறது காட்டு இராமர் கோவில். இங்குள்ள ஆஞ்சனேயர் சிலை சுயம்பு என கூறுகிறார்கள்.

காட்டு இராமர் கோவில்

இராவணன் இங்கிருந்துதான் சீதையை கடத்தியதாகவும், கடத்தும் போது நடந்த போரில் ஜடாயு வீழ்த்தப்பட்டு கிடந்ததாகவும் அப்போது இராமர் ஜடாயுவிற்காக உருவாக்கிய நீரூற்றுதான் இப்போது ஜடாயு தீர்த்தம் என அழைக்கப்படுவதாகவும் அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். மிக ஆச்சர்யமாக இருந்தது. இது உண்மையாக இருக்குமா? அல்லது உணமை மாதிரி நம்ப வைக்க பட்டிருக்கிறதா என. உண்மையாக இருந்தாலும், உண்மை மாதிரி நம்ப வைக்கப்பட்டிருந்தாலும் அது மிக ஆச்சர்யமானதுதான். எது எப்படியோ நான் அந்த அமைதியான சூழலுக்காகவே அடிக்கடி அங்கு போக ஆரம்பித்தேன்.

டிஸ்கி:
எனக்கு இறை நம்பிக்கை உண்டென்றாலும் அதை என் எழுத்தில் கொண்டு வர  எப்போதும் விரும்பியதில்லை.  இந்த பதிவும் மிகுந்த தயக்கங்களின் இடையேத்தான் எழுதுகிறேன்.  இது இந்த இடம் குறித்து நீண்டநாடகளுக்கு பின்தான் தெரிந்தது. என்னை போல சிலர் இருப்பதாலும், இது குறித்த விவாதங்களுக்கான ஓரு ஆரம்பமாகவும்தான்  இந்த பதிவு.


படங்கள் உதவி:  கூகுள்

Thursday, July 22, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்

இன்று (22.07.2010) பிறந்தநாள் காணும்அமீரக அஜீத் , அருமை நண்பர் வினோத் கெளதமை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.... இதுதான் அவரின் கடைசி பேச்சுலர் பிறந்த நாள் என்பதாலும் அடுத்த பிறந்தநாளில் அவரின் ஷாலினியும் உடன் இருப்பார்கள் என்பதாலும் இந்த முறை தீர்த்தவாரி விழாவை சிறப்பான முறையில் நடத்த இருக்கிறார். ஆகையினாலே அமீரகத்து அன்பர்கள் அவரை நேரில் தொடர்பு கொள்ளுமாறும், இந்தியா மற்றும் அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்கள் அக்கவுண்ட் நம்பரை தெரிவித்தால் தீர்த்தவாரிக்கு லம்ப்பாக அமெளண்ட அனுப்ப படும் என்பதையும் கம்பெனி சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.




பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சி...

இது குறித்து மேலதிக சுவாரஸ்ய தகவல்களோடு நண்பர் கிஷோரின் பதிவு இங்கே




Monday, July 5, 2010

சுடச்சுட......நெல்லை பதிவர் சந்திப்பு செய்திகள் புகைப்படங்களுடன்...!!!

இரண்டு மாதங்களுக்கு முன், அதிகாலை 10 மணி அளவில் போன்.. ஓரு குரல் நான் ராஜா பேசுறேன் என்றது. எந்த ராஜா என்றதும் நாந்தான் துபாய் ராஜா என்றது அதேகுரல். ஆஹா நம்ம அண்ணந்தான் கூப்ப்டுறாரான்னு வழக்கமான நலம் விசாரிப்புகளுக்கு பிறகு நான் திருநவேலி வாரேன்... நாம மீட பண்ணலாமான்னு கேக்கவும் சரின்னு புது பஸ்ஸ்டாண்டு முன்னாடி உள்ள அருணா ஸ்விட்ஸை ஸ்பாட்டா முடிவு செய்து சந்திக்க தயாரானோம்.


ஓரு மணி நேரம் கழித்து மறுபடியும் போன்.. வந்தாச்சுன்னு... சரி வாரேன்னு பைக்கை எடுத்து கிளம்பினா ஓரு சந்தேகம் அவரை எப்பிடி அடையாளம் கண்டுபிடிக்க...அவரு புரோபைல் போட்டோவில் ஷேக் டிரஸ்ஸோட பாத்தது. ஓரு பார்ட்டி போட்டோவிலும் மொட்டை அடிச்சிருந்தாரு அதை தவிர வேறு ஓண்ணும் தெரியாதேன்னு காதல் கோட்டை அஜித்குமார் தேவயானியை பாக்க போற மாதிரி யோசனை பலமாதிரி ஓட ஆரம்பித்தது. பைக்கை நிப்பாட்டி விட்டு போன் பண்ணினால் கட் பண்ணி விட்டு ஆறடி உயர ஆள் கை காட்டுறாரு...(என்னா உசரம்ணே....!!! உங்க ஹைட்டுக்கு நீங்க பாஸ்ட் பெளலிங்க் போட்டா....பேட்டிங் பண்ணுறவன் செத்தான்) ஆஹா ராஜா கூப்பிட்டுடாரே...மீ த பர்ஸ்ட்டேய் சொல்லிறலாமான்னு வாய் வரைக்கும் வந்ததை நாகரீகம் கருதி அடக்கி கொண்டேன்.


பல விஷயங்களை சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தோம். திருநெல்வேலியில் இருந்து எவ்வளவு பதிவர்கள் என இருவரின் ஆச்சர்யங்களையும் பகிர்ந்து கொண்டோம். நாஞ்சிலுக்கு போன் பண்ணலாம் என கால் பண்ணினால் அவர் போனை வைத்து விட்டு கேரளா வரைக்கும் போயிருக்கிறார் என அவர் வீட்டில் தகவல் சொன்னார்கள். சரி அப்டின்னா.. மறுபடியும் எக்ஸ்பிரஸ் மலையாள மங்கையிடம் மயங்கி விட்டது. திருமப பார்ட்டி துபாய் வந்ததும் மலையாளப்பட விமர்சனம் கண்டிப்பாய் இருக்கும்னு மனசுல நினைச்சுகிட்டேன்.


அப்புறம் ஓரு ஜுஸை குடித்து கொண்டே உரையாடி கொண்டிருந்தோம். அவர் ஐந்து வருடமாக பதிவெழுதுவதையும் இப்போதுதான் அதிக அளவில் புதிய பதிவர்கள் வருவதையும், ஓரு முறை அம்பை பஸ் ஸ்டாண்டில் ஆடுமாடு என்ற பெயரில் பதிவெழுதும் பதிவரை பார்த்து விட்டு “நீங்கதானே ஆடுமாடுன்னு” எப்படி கேக்க என குழம்பி பின் அறிமுக படுத்தி பேசிய சுவாரஸ்யமான சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார். பின் அவரை பாளை பஸ் நிலையத்தில் டிராப் செய்து விட்டு நான் ஜங்சனுக்கு சென்றேன். திருநெல்வேலி நிறைய மாறிவிட்டது நிறைய மாறாமல் அப்படியே இருக்கிறது. அதையெல்லாம் பத்தி எழுதி ஓரு பத்து பதிவாது தேத்திறணும்னு நினைச்சுகிட்டேன்.


அதன் பிறகு ஓரு பத்து நாள் கழித்து நண்பர் பதிவர் எறும்பு ராஜகோபால் அண்ணனும் போனில் பேசினார்கள். ஊருக்கு வந்திருப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் நான் அப்போது தஞ்சாவூரில் இருந்ததால் அவரை சந்திக்க முடியாமல் போனது.


பதிவர் சந்திப்பு புகைப்படங்கள்


பதிவர் சந்திப்பை பற்றி எழுதினால் புகைபடங்கள் பதிவிட வேண்டும் என்ற தொன்று தொட்டு வரும் பாரம்பரியத்தை பின்பற்ற வில்லையென்றால் வரலாற்றுபிழை ஏற்பட்டு விடக்கூடாது என்பதாலும்  எங்களின் தன்னடக்கத்தின் காரணமாக நாங்கள் புகைப்படம் எடுக்காமல் விட்டதாலும் கூகுளில் இருந்து களவாண்ட படங்கள் உங்கள் பார்வைக்கு..



Monday, June 28, 2010

சுணங்கிய தேடல்கள்..!!




ஓரு


கிணற்று தவளையின்

கூச்சலைப் போல

என்

இதுவரையிலான வாதங்கள்.. !


தேடல்கள் சுணங்கி

மூளையை துருப்பிடிக்க

வைக்கும் என்னின்

இதுவரையிலான முயற்சியை

மூட்டை கட்டலாமா

என யோசனைகள்

விரிய ஓரு

விடியல் கிட்டுமென நம்பிக்கையுடன்..!!

 

Monday, June 14, 2010

உறங்கத்தான் உன்னினைவு விடுவதில்லை..




வானவில்
வாழ்க்கையொன்று வாழ்ந்தேன்….

வாழ்வின்
அர்த்தம் தெரியாமல்…

உறங்கத்தான்
உன்னினைவு விடுவதில்லை..

சுட்டாலும்
சூரியன் மறைவதில்லை..

எழுதபடாத
என்னிதயத்தில்
வடிக்கபட்ட காவியமே..!!!

என்
வாழ்வின் அர்த்ததை
தெளிய வைத்த ஓவியமே…!!!

காலம்
எழுதிய காதல்பக்கங்களில்
இப்போது நீயும் நானும்…………..

இம்மென்று
சொல் இறுதிவரை
இணை பிரியா திருப்போம்…!!!

இல்லையென்று
சொன்னால்
இடுகாட்டில் தான்என் உறக்கம்……

என்
இறுதிபயணம் இமயத்தில்
அல்ல உன் இதயத்தில்……………!!

என் அஸ்தி
கரையவேண்டியது கங்கையில்
அல்ல உன் கண்ணீரில்…………….!!

இரக்கம்
கொள் உறங்காத
என் இதயம் உன்னருகில்……………….!!!!!!



டிஸ்கி:  இது ஓரு மீள் பதிவு. முன்னாடி பல பேர் இதை கவனிக்காததால் திரும்பவும். நிறைய பேரின் கருத்துக்களை அறிய வேண்டி இப்போது...

Monday, June 7, 2010

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா..!!!

கடந்த மாதம் அமீரகத்திலிருந்து கிளம்பும் போதே ஏதோ கல்யாணமாகி போகும் பெண்களை போல கட்டிடம் கட்டாந்தரையெல்லாம் பார்த்து உணர்ச்சிகள் குபீர் குபீர்னு பெருக்கெடுத்துச்சு.. அப்பவே எனக்கு மைல்டா சந்தேகம் வந்துச்சு. ஆனா இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சுது நான் சந்தேகப்பட்டது சரிதான்னு. சில குடும்ப செளகரிய காரணங்களுக்காக நான் இன்னும் குறைந்தது ஓரு வருடமாவது இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் தீவிரமாக வேலை தேட வேண்டிய அவசியமும் ஏற்பட்டு விட்டது ( ஐயகோ...!! ) இந்தியாவுல வேலை கிடைச்சா கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் வேலை பாக்க சொல்லுவாய்ங்களேன்னு பயத்தோடயே அப்ளிகேஷன் அனுப்ப ஆரம்பிச்சா.. உடனேயே கால் லெட்டரும் வந்து இண்டர்வ்யூம் சக்ஸஸ் ஆகிடுச்சு (இன்னுமாடா உன்ன இந்த உலகம் நம்புது...அவ்வ்வ்). போஸ்டிங் பெங்களூருன்னு சொன்னாய்ங்க....அங்க கிளைமேட்டும் நல்லா இருக்கும்ங்கறதால நானும் ஓகே சொல்லிட்டேன்.

அப்பிடியே ஓரு பத்து பதினைஞ்சு நாளு ஆகுதுங்க நானும் இங்க பெங்களூரு வந்து....ஹும்... இது வரைக்கும் பெங்களூருல நான் தங்கி இருக்கற வீட்டையே முழுசா சுத்தி பாக்க முடியாத அளவுக்கு வேலை பெண்ட நிமுத்துறாங்க. ஆனா என்னதான் கஷ்டப்பட்டாலும் ஏதோ ஓரு வெள்ளக்காரபயலுக்கு வேலை பாக்காம நம்மூருகாரனுக்குதான் வேலை பாக்குறோம்கற நிம்மதி இருக்கு பாருங்க அது அனுபவிச்சாதாங்க தெரியும். அட...அட...அட....

நட்பின் பலம்



இங்க வந்து வீடு பாக்க ஆரம்பிக்கும் போதுதான் நட்போட பலம் தெரியுது. இங்க நான் என் இரண்டு பள்ளிகால நண்பர்களை குறிப்பிடலேன்னா நன்றி கெட்டவனாயிருவேன். செந்தில், விஜயகுமார் ப்ளஸ் டூவில் என்கூட படித்த நண்பர்கள். சாப்ட்வேர் லையனில் சென்று முறையே AOL, IBM நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். பெங்களூரில் அவர்கள் வசிப்பதால் அவர்களை தொடர்பு கொண்டேன். அப்போது நண்பர் விஜயகுமார் டெல்லியில் இருந்தார் ஆனாலும் நண்பர், நண்பரின் நண்பர் என பலரையும் தொடர்பு கொண்டு எனக்கான இடத்தேடலில் மும்முரமாக இடுபட்டார். நன்றி விஜய். பின் கம்பெனி கெஸ்ட் கவுஸில் ஓரு வாரகாலம் தங்க அனுமதி கிடைத்ததும் வீடு தேட நண்பர் செந்தில் வண்டியை எடுத்து வந்து தெரு தெருவாக தேட ஆரம்பித்தார். இறுதியில் ஓரு வீட்டை அமர்த்திவிட்டுதான் ஓய்வெடுத்தார். நன்றி செந்தில். இது போன்ற நண்பர்கள் கிடைத்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்லி கொல்கிறேன்.

என் குடும்ப பிரச்சினை



இப்போ ரெண்டு நாளு முன்னாடிதான் மறுபடி ப்ளாக்கையே ஓப்பன் பண்ணேன். (ஏன்...ஏண்டா... இவ்ளோ நாளு நிம்மதியாதான இருந்தே...) ஆனா ஓப்பன் பண்ணாமலே இருந்துருக்கலாம் நினைக்க வைச்சுடாங்க. அதுவும் முகில் எழுதுகிறார்ங்கற இடுகையை செந்தழில் ரவியின் தளத்தில் படிச்சதும் எனக்குள் பயங்கர அதிர்வை ஏற்படுத்துச்சு. அதிலிருந்து மீண்டு வரவே ரொம்ப நேரம் ஆச்சு. சந்தன முல்லை அவர்கள் எவ்ளோ பாதிக்க பட்டிருப்பாங்கன்னு அதோட வீரியத்தை எனக்கு உணர்த்தியது முகிலின் எழுத்தை படிக்கும் போதுதான். அதுவரையில் மேலோட்டமாக அந்த விஷயத்தை படித்து கொண்டிருந்தவன் லிங்க் தேடி மூலமும் படிக்க நேர்ந்தது. அந்த பூக்காரி இடுகை படிச்சா நர்சிம் இப்பிடில்லாம் எழுதுவாராங்கற அதிர்ச்சிதான் அதிமாச்சுது. பெண்ணை எதிர் கொள்ள இந்த கேவலமான ஆயுதம்தானா உங்களுக்கு கிடைச்சுது நர்சிம்.

ஆனால் அதை வைச்சு எழுதின மற்றவர்களின் பதிவை படிச்சால் என்னவோ அவங்களோட தனிப்பட்ட பழைய பகையை தீர்த்துக்கற மாதிரிதான் தெரியுது. ஆனா இதை ஜாதி ரீதியா பாக்குறவங்க யாரா இருந்தாலும் அவங்களுக்கு என் கடும் கண்டங்கள். சந்தன முல்லை அவர்களும் இதை இழுத்து கொண்டு போவதும் எனக்கு சரியாக படவில்லை. ஆணாதிக்கம் மிகுந்த உலகில் இதை வைத்து மற்றவர்கள் திருந்துவார்கள் என்றோ அல்லது இனிமேல் இது போல நடக்காது என்றோ யாராலும் உறுதியாக கூறமுடியாது. நர்சிம்மை என்ன பண்ண வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு பண்ண வேண்டும். மற்ற நாட்டாமைகளை உள்ளே விட்டால் அவர்களுடைய தனிப்பட்ட பகை ஆட்களை உள்ளே இழுத்து குட்டையை குழப்பி கொண்டுதான் இருப்பார்கள். ஏனெனில் வினவு லீனா விஷயத்திலும், செந்தழில் ரவி கிருபாநந்தினி மற்றும் கவிதா அவர்கள் விஷயத்திலும் இது போன்ற தவறை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே இது குறித்து வாதம் புரிவது எதிர்வாதங்களுக்கு இடமளிக்கிறது. நீங்களும் உங்கள் கணவரும் கலந்து ஆலோசித்து என்ன பண்ண வேண்டுமென்று உங்கள் தளத்தில் குறிப்பிடுங்கள் அதுதான் அடுத்தடுத்த ஆரோக்யமான தீர்வுக்கு வழி வகுக்கும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. இதை உங்களுக்கான முடிவை நான் எடுப்பதாக நீங்கள் கருதினால் மன்னித்து கொள்ளுங்கள்.

Tuesday, April 27, 2010

பேச்சுலர் சமையலும்.. ஊருக்கு போதலும்..!

மூன்று வருடங்களுக்கு முன்பு கத்தாரில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். வழக்கமா வெள்ளிகிழமை பக்கத்துல இருக்கற நேஷன்ல்ங்கற எடத்துக்கு இட்லி, தோசை சாப்பிடறதுக்காக போவோம். 10 ரியால் இட்லி தோசைக்கு 15 ரியால் டாக்ஸி சார்ஜ் கொடுத்து போவோம்னா நாங்க எப்பிடி காய்ஞ்சு போய் கிடந்திருப்போம்னு கற்பனை பண்ணிகிடுங்க. அப்பிடியான ஓரு சுபயோக சுபதினத்தின் போது நான் திடீரென கூட்டத்தில் ஏண்டா , நாம சமைக்க ஆரம்பிச்சா என்ன்ன்னு நான் வாயை திறக்க சனி சரியாக என் நாக்கில் வந்து உக்காந்த்து. உடனே நான் என்ன சொன்னாலும் எதிர்வாதம் பண்ணுற ஓரு பய குறுக்க புகுந்து கெக்கே பிக்கேன்னு சிரிக்க ஆரம்பிக்க.. எனக்கு வந்த கோவத்துல என நாக்குல உக்காந்துருந்த சனி நல்லா சுகமா பாயை விரிச்சு படுத்துகிச்சு. இது என்னடா பெரிய விஷயம் அரிசியை கழுவி தண்ணி ஊத்தி அடுப்புல வச்சா சாதம்.. இதெல்லாம் ஓரு மேட்டரான்னு எதிர்பதிவு போட்டேன்.

அவனும் அசரலை வெறும் சோறை வச்சு என்ன பண்ணுவேன்னு கவுண்டர் பண்ணினான். தயிர்ல மஞ்ச பொடி போட்டு கொதிக்க வச்சா மோர் குழம்பு, பருப்ப அவிச்சு மிளகா பொடி மஞ்ச பொடி போட்டா சாம்பாருன்னு எதிர்த்து பேச சனி என நாக்குல உக்காந்து கும்மி அடிக்க ஆரம்பிச்சது. காய்ஞ்சு போய் கிடந்த மத்த பசங்க்ளெல்லாம் இதையெல்லாம் கேட்ட உடனே எல்லாரும் நீ ஏண்டா உனக்கு சமைக்க தெரியுற விஷயத்தை முன்னாடியே சொல்ல்லைன்னு சண்டைக்கு வர.. நானும் பதிலுக்கு நான் சமைச்சதில்லை ஆனா பக்கத்துல இருந்து பாத்துருக்கேன் சொல்ல என்னை ஆபத்பாந்தவனா பாக்க ஆரம்பிச்சாங்க. அப்புறமா அமைச்சரவையை கூட்டி மறுநாள் இருந்து சமைக்க ஆரம்பிக்கலாம். ஆளாளுக்கு நான் காய்கறி நறுக்கி தாரேன், நான் பாத்திரம் கழுவித்தாரேன்னு துறை பிரிக்க ஆரம்பிச்சாங்க. தேவையான எல்லா சாமான்கள் காய்கறிகள், பாத்திரங்கள் போன்றவற்றை வாங்கி மறுநாள் வெள்ளிகிழமையில் இருந்து ஆரம்பிக்கலாம் பெரிய கனவோட எல்லாரும் போய் படுத்து தூங்கினாங்க.


மறுநாள் அதிகாலை 12 மணிக்கு தூங்கிட்டு இருந்த என்னை ஓருத்தன் எழுப்பினான். என்னடான்னு கேட்ட்துக்கு சமைக்கணும்லன்னு சவுண்ட் விட்டான். ங்கொய்யால .. சவுண்டா விடுற போய பாத்திரத்த கழுவுடான்னு பயல அனுப்பி விட்டு சமையலுக்கான ஆயத்தங்களை பண்ண ஆரம்பித்தேன். என்ன பண்ணலாம்னு தீவிரமா ஆலோசனை பண்ணி சாம்பார் வைக்கலாம்னு முடிவெடுத்தோம். அதுக்குள்ள ஓருத்தன் அவன் பிரெண்டுக்கு போன் பண்ணி மச்சி எங்க ரூம்ல சமைக்க ஆரம்பிக்கிறோம்டா.. மதியம் சாப்பிட வந்துருன்னு சொன்னான். நானும் அடுப்ப பத்த வைச்சு பாத்திரத்தை மேல வைச்சு அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்குறதுக்குள்ள பாத்திரத்துல இருந்து குபீர்னு புகை வர ஆரம்பிச்சுது. இங்கயே மத்த எல்லாரும் கொஞ்சம் எதிர்பார்ப்பு குறைய ஆரம்பிச்சது. சமையல் முடிஞ்ச உடனே யாரு முகத்துலயும் ஈயாடலை. நாந்தான் எல்லாருக்கும் தைரியம் குடுத்து சாப்பிட உக்கார சொன்னேன். அதுக்குள்ள போன் பண்ணிய பிரெண்டு வந்து சாம்பார் சட்டிய பாத்துட்டு ரசம் சூப்பரா வந்திருக்கே கமெண்ட் குடுத்தான். ஏற்கனவே பீதியிலயே சாப்பிட உக்காந்திருந்த ரெண்டு பேரு தட்டை பின்னாடி எடுத்தாங்க. அவன் சும்மா அதோட விடாம சாம்பரை எடுத்து ஊத்திட்டு சாரி பாஸ் காரகொழம்பா நான் ரசம் நினைச்சு சொல்லிட்டேன்னு அடுத்த கமெண்டும் போட பீதில உக்காந்துருந்த ரெண்டு அப்பாவிங்க தட்டை கழுவிட்டு நாங்க இன்னைக்கு விரதம்னு சொல்லீட்டாங்க.

மறுநாளில் இருந்து என்னை பாத்திரம் கழுவுகிற டிபார்ட்மெண்ட்டுகு மாத்திட்டாங்க... எந்த நேரத்துல என்னை அந்த டிபார்ட்மெண்டுக்கு மாத்தினாங்கலோ நானும் இது வரைக்கும் ஆறு ரூம் மாறிட்டேன் வேற வேற ஆட்கள் ஆனா எல்லாரும் என்னை அதே டிபார்ட்மெண்டிலேயே வேலை செய்ய விடுறாங்க. வீட்டுல உக்காந்த இட்த்த விட்டு எந்திரிக்காம தட்டை கூட கழுவாம அம்மாவை திட்டின பாவம்தான் என்னை விரட்டி விரட்டி பழிவாங்குதுன்னு நினைக்குறேன்.

அதற்கப்பறம் லீவில் வீட்டுக்கு போகும் போது குத்தம் குறை சொல்லாம நான் சாப்பிட்ட்தை பார்த்து எங்கம்மாவே ஆச்சர்யப்பட்டாங்க..ஏன்னா அதுக்கு முன்னாடி அந்தளவுக்கு ஆட்டம் போட்ருக்கேன். தோசை சூடு ஆறிட்டுன்னா, சோறு லேசா குழைஞ்சிட்டுன்னா, தண்ணி எடுத்து வைக்கலைன்னா... சவுண்ட் கொடுத்தே டார்ச்சர் பண்ணிருக்கேன்.

இதெல்லாம் எதுக்கு ஞாபகம் வருதுன்னா இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு போறேன். இனி கொஞ்ச நாளுக்கு வீட்டு சாப்பாடு சந்தோசமா சாப்பிடலாம்.

டிஸ்கி:

கல்யாணம் ஆக போகுற வினோத், கிஷோர் மாதிர் ஆளுங்களெல்லாம் இதை பாத்து மெர்ச்ல்லாக வேண்டாம். கல்யாணம் ஆனபின் உங்களுக்கு நல்லா சமைக்க தெரிந்து விடும். டோண்ட் வொர்ரி... பி ஹேப்பி...

பதிவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

அதனால கொஞ்ச நாளுக்கு என்னாடா இது மொக்க பதிவு குறைஞ்சிட்டே... அனானி கமெண்ட் வரலையே நினைக்குறவங்களுக்கெல்லாம் நான் ஓண்ணே ஓண்ணு சொல்லிக்க ஆசை படுறேன்..
நான் ஊருக்கு போறேன்.. நான் ஊருக்கு போறேன்.. நான் ஊருக்கு போறேன்..

Wednesday, April 21, 2010

என் கதைக்கு மொக்கை என பெயர் வை

சிறு வயதில் கதை கேட்ட அனுபவததை பகிர சொல்லி தொடர் பதிவுக்கு அழைத்த அண்ணன் ஸ்டார்ஜனுக்கு நன்றி.

இப்பிடி ஓரு மொக்கையை வாழ்நாளில் படிச்சதில்லைன்னு நறநறன்னு உங்களுக்கு கோவம் வந்துச்சுன்னா.. அப்பிடியே மனசுக்குள்ள வைச்சுருக்காதீங்க அது உடம்புக்கு நல்லதில்ல. நான் இதுக்கு காரணமில்லை. அதனால இதுக்கு காரணமான ஸ்டார்ஜனை திட்டி உங்க கோவத்த தணிச்சுகிடுங்க. :) 


எப்பவுமே கொலை பண்ணியவனை விட அதுக்கு காரணமாக இருந்தவர்தான் அதிக தண்டனைக்குரியவர்னு இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்லுது


--------

திருநெல்வேலி டவுணில் வளவும் வளவு சார்ந்த இடத்தில்தான் என்னுடைய ஆரம்பகாலங்கள். சின்ன பசங்க ஒரு பத்து பேருக்கு மேல இருப்போம். காலையில் பக்கத்துல இருக்கற புளியந்தோப்புக்கு போனோம்னா மதியம் சாப்பிட வீட்டுல கம்போட வந்து அடிச்சு இழுத்துட்டு போனாத்தான் உண்டு. ஆனா இருட்டின உடனே வளவோட இருக்கற திண்ணைல உக்காந்து பக்கத்துவீட்டு அக்கா, ஆச்சியெல்லாம் சொல்லுற கதை கேக்குற அனுபவம் ஓரு அற்புதமான விஷயம். அந்த வளவு, அந்த திண்ணை, பகிர்ந்து சாப்பிடும் சாப்பாடு, அங்க கேக்குற கதை, இதையெல்லாம் நினைக்கும் போது இன்னொரு தடவை அந்த காலமெல்லாம் திரும்பி வாராதான்னு இருக்கு.

அதுல சுந்தர் ஆச்சின்னு ஓருத்தங்க சொல்லுற கதைக்கு நாங்கெல்லாம் பயங்கர பேன். அவங்க ஓரு ஊர்ல ஒரு பெரிய்ய்யய… ராஜான்னு ஆரம்பிச்சா அவரோட பிரம்மாண்டம் எங்க எல்லாரோட கற்பனையிலும் விரிய ஆரம்பிக்கிற அளவுக்கு இருக்கும் அவங்களோட கதை சொல்லும் திறன். சொல்லப்போனால் அவங்ககிட்ட கதை கேக்குறதுக்குகாகவே சாயங்காலங்களில் திண்ணைகளில் கூடுவதை வழக்கமாகவே வைத்திருந்தோம். அப்பிடி ஓரு பெளர்ணமி நாளில் நிலவை காட்டி அங்க ஓரு பாட்டி காலை நீட்டி உக்காந்து வடை சுட்டுகிட்டு இருக்கான்னு (பாருங்க எவ்ளோ புத்திசாலின்னு, பாட்டி வடை சுட்ட கதை லொகேஷனை நிலாவில் வைச்சுட்டாங்க) சொன்னதை கேட்டு நிலவை பார்த்தால் அந்த பாட்டி உருவம் அப்பிடியே தெரிய ஆரம்பித்தது. அப்புறம் ஓவ்வொரு பெளர்ணமியிலும் நிலவை பார்க்கும் போதும் எனக்கு சுந்தர் ஆச்சிதான் நினைவுக்கு வருவார்கள்.




பின்னாட்களில் பள்ளியில் ஆர்ம்ஸ்டார்ங்தான் நிலவுக்கு முதலில் போனவர்னு படிக்கும்போது அவரு அந்த பாட்டிய பாத்திருப்பாரோ, பாட்டி அப்பவாச்சும் நீட்டிய காலை மடக்கியிருக்குமா என பலவாறு எனக்கு யோசனைகள் விரிய தொடங்கின. அதுவும் அவர்கள் சொன்ன மூணு கண்ணன் கதை எங்களில் பலபேரை ரொம்ப நாள்கள் பயத்தில் வைத்திருந்தன.


--------------
அந்த ஆச்சி பல கதைகள் சொல்லியிருந்தாலும் எனக்கு மறக்காம இருக்கற ஓரு கதையை மட்டும் இந்த தொடர் பதிவுக்கு எடுத்து கொள்கிறேன்.

ஓரு பெரிய்ய்ய்ய காடு அதில மரமெல்லாம் அடர்த்தியா இருக்கும். கொஞ்சம் கூட வெளிச்சமே உள்ள வராத அளவுக்கு நெருக்கமான மரங்கள் நிறைஞ்ச காடு அது.

ம்ம் (அங்கங்க மானே தேனேன்னு போடுற மாதிரி ம்ம் கொட்டுறது நாங்கதான். நீங்களும் ம்ம் கொட்டிகிட்டே படிங்க )

அந்த காட்டுல ஓரு புறா இருந்துச்சு. அது சாப்பிடுறதுக்காக காடு முழுதும் சுத்தி மரத்தில உள்ள பழங்களையெல்லாம் சாப்பிட்டு தண்ணி குடிக்கறதுக்காக ஓரு ஆத்தங்கரைக்கு வந்திச்சு.

ம்ம்


அப்போ ஆத்துல ஓரு எறும்பு தண்ணில தத்தளிச்சுட்டு இருந்த்தை பார்த்து மரத்தில உள்ள ஓரு இலையை எடுத்து அந்த எறும்பு பக்கத்துல போட்டுச்சு. எறும்பும் அதுல ஏறி உயிர் பிழைச்சதாம்.

ம்ம்



அப்புறம் கொஞ்சநாள் கழிச்சு ஓரு வேடன் வேட்டைக்கு காட்டுக்கு வந்தான். அவன் மரத்து மேல உக்காந்து இருக்கற புறாவை பார்த்தது சத்தம் போடாமல் மெதுவா அம்பை எடுத்து வில்லில் பூட்டி குறிபார்த்தான்.


அச்சச்சோ….


அவன் அந்த புறாவை அடிக்க போற சமயத்தில் அங்க வந்த எறும்பு அவன் காலை ‘நறுக்குன்னு’ கடிச்சு வைக்க அவன் குறி தப்பி புறா உயிர் பிழைச்சிட்டாம்.

அய்யா :)

அவ்ளோதான் முடிஞ்சுது




Monday, April 19, 2010

வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் “லாரி பேக்கர் தொழில்நுட்பம்” - 02

வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் லாரி பேக்கர் தொழில்நுட்பம்தொடரின் இதற்கு முந்தைய  பகுதியை படிக்காதவர்கள் இந்த சுட்டியில் பார்த்துக் கொள்ளலாம்

இன்றைக்கு வீடு கட்டும் செலவில் மிக அதிகமான செலவை உறிஞ்சகூடியதும் கட்டிடத்தின் மிக முக்கியமான கூரை அமைப்பை பற்றி லாரி பேக்கரின் தொழில்நுட்பத்தை இந்த பதிவிற்கு எடுத்து கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு ஓன்று தெரியுமா? நாம் இப்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் ரூப் ஸ்லாப் காங்கிரீட் முறைதான் அதிக ஸெல்ப் வெய்ட் கொண்ட முறை. அதாவது அதிக எடை கொண்ட கூரையை வடிவமைத்து அந்த எடையை தாங்கும் அளவிற்கு சுவர்கள் மற்றும் அஸ்திவாரத்தின் வடிமைப்பதின் மூலம் கட்டிடத்தின் செலவுகளை நாமாகவே கூட்டி கொண்டிருக்கிறோம். நான் சில கட்டிடத்தில் பழைய மெட்ராஸ் டெர்ரஸ் ரூப் ஐ இடித்து காங்கிரீட் ஸ்லாப் மாற்றும் வேலைகளை பார்த்திருக்கிறேன். அவ்வளவு உறுதி வாய்ந்த கூரையை இடிப்பதே கஷ்டமான வேலை. மேலும் அதில் உள்ள பொருள்கள் பலவும் வீணாகாமல் ரீயூஸ் செய்யமாறும் இருக்கும் (உதா.) உத்திரகட்டைகள், செங்கல், சுண்ணாம்பு. சொல்லப்போனால் 20% பொருள்கள் வேண்டுமானால் வீணாகும். ரீயூஸிங் மெட்டிரியல் (Reusing Material)  இன்றைய சுற்றுசூழலுக்கு உகந்த கட்டிடங்களின் முதல் கோட்பாடு. நமது பழமையான கட்டிட முறைகளில் எப்படி பொருந்தி வருகிறது என்பதை நினைத்தால் நம் மூதாதையர்களின் மீது பெருமதிப்பும், அதையெல்லாம் நாகரீக பூச்சால் மறைத்துவிடுகிற நம் தலைமுறையின் மீது கோபமும் ஓரு சேர வருகிறது. இப்ப கூட பாருங்க சொல்ல வந்த விஷயத்த விட்டு ஆதங்கம் வேறு எங்கெங்கோ செல்கிறது.

லாரி பேக்கரின் ஃபில்லர் ஸ்லாப் (Filler Slab) முறையில் எடை குறைந்த பொருள்களை கம்பிகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் கூரையின் ஸெல்ப் வெயிட்டை குறைக்கலாம். இதற்காக இவர் பரிந்துரைப்பது மங்களூர் ஓடுகள். இரண்டு மங்களூர் ஓடுகளை படத்தில் குறிப்பிட்ட அமைப்பில் கம்பிகளுக்கு இடையில் வைப்பதின் மூலம் கூரையின் எடையை 30% வரை குறைக்கமுடியும் என லாரி பேக்கர் கூறுகிறார்.

Filler  Slab

இதை படித்தவுடன் எனக்கு இது குறித்து எனக்கு சந்தேகம் இருந்த்து. இந்த ஓடுகளின் மேல் காங்கிரீட் விழும் போது அந்த காங்கிரீட்டின் எடைகளை ஓடுகள் தாங்குமா என்ற சந்தேகம்தான். இது குறித்து எனது பொறியியல் கல்லூரி விரிவுரையாளரிடம் கேட்ட போது அவர் சொன்னார் ”That is the power of arc shape”அதாவது ஆர்க் அமைப்பில் சாதாரண அமைப்பை விட அதிக எடையை தாங்கும் என்பது ஸ்டரக்சுரல் அடிப்படை என்பதுதான் அவரின் அந்த வார்த்தைக்கு அர்த்தம். அதை நுட்பமாக தனது ஃபில்லர் ஸ்லாப் முறையில் இணைத்த லாரி பேக்கரின் திறமையை வியக்காமல் இருக்க முடிய வில்லை.

இந்த முறைப்படி கம்பிகளுக்கு இடையே 30 x 50 cm அளவில் இடைவெளி இருக்க வேண்டும். அந்த இடைவெளியில் இரண்டு மங்களூர் ஓடுகளை ஃபில்லராக பயன்படுத்த வேண்டும். பின்னர் இதன் மேல காங்கிரீட் போட வேண்டும். இதன் மூலம் காங்கிரீட்டின் அளவு குறைவதோடு, கட்டிடத்திற்கு குளுமையும் கிடைக்கிறது. இந்த கூரை அமைப்பில் வழக்கமாக கூரையின் மேல் போடப்படும் வெதரிங்கோர்ஸும் குறைந்த அளவே தேவைப்படும்.
ஃபில்லர் ஸ்லாப் படி அமைக்கப்பட்ட வீட்டின் உட் புற தோற்றம்


இந்த தொடர்களில் பலரும் கேட்கும் சந்தேகம் இப்பிடி கட்டிய வீடுகள் உறுதியானதாக இருக்குமா என்பதும் பார்ப்பதற்கு அழகாக இருக்குமா என்பதும் முக்கிய கேள்விகளாக உள்ளது. அதற்காக அவர் கட்டிய சில கட்டிட போட்டோக்களை இங்கு இணைத்துள்ளேன். மேலும் புகைப்படங்கள் லாரிபேக்கரின் தளத்தில் உள்ளது.













Monday, April 12, 2010

தமிழிஷில் மால்வேர் எச்சரிக்கை - IE ல் ஓபன் செய்யும் நண்பர்கள் கவனத்திற்கு..!!!

இன்று காலையில் தமிழிஷ் தளத்தை கூகுள் குரோமில் ஓபன் பண்ணும் போது மால்வேர் எச்சரிக்கை செய்தி வருகிறது. இது “aathavanonline.com” என்ற ஹோஸ்டில் இருந்து வருவதாக எச்சரிக்கிறது. ஆகவே IE ல் தமிழிஷ் தளத்தை ஓபன் பண்ணும் நண்பர்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கவும். தமிழிஷ் நிர்வாகத்தினர் இந்த பிரச்சினையை 
சரிசெய்யும் வரை பொறுமையாக இருக்கவும். அந்த எச்சரிக்கையின் ஸ்கீரின்ஸாட் கீழே..



தமிழிஷ் நிர்வாகத்தினர் இதை விரைவில் சரிசெய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

தமிழிஷ் நிர்வாகத்தினருக்கும் இது குறித்து மெயில் அனுப்பி இருக்கிறேன். 


பிகு:

தமிழிஷ் நிர்வாகத்தினர் இதனை உடனடியாக சரிசெய்து விட்டார்கள். அதனை எனக்கு மின்மடல் மூலம் தெரிவித்தும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி



தமிழிஷ் நிர்வாகத்தினர் எனக்கு அனுப்பிய பதில் மடல்

romTamilish Service
toகண்ணா
dateMon, Apr 12, 2010 at 10:46 AM
subjectRe: Contact Form: Malware warning

hide details 10:46 AM (5 minutes ago)
கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி கண்ணா! தமிழிஷில் இடப்பட்டுள்ள விளம்பரம் சார்ந்து அந்த எச்சரிக்கை வருவதாக நினைக்கிறோம். தீர்வு காணும் வரை அந்த விளம்பரத்திற்கு தமிழிஷில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து இது போன்று சரியான நேரத்தில் உங்களைப் போன்ற பயனர்கள் உதவுவது, தமிழிசை சிறப்புடன் நடத்தி செல்ல உதவுகிறது. உங்களின் இந்த தகவலுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
தமிழிஷ் 



Thursday, April 1, 2010

அகிள உளக தமில்கொலைபதிவற்கல் சங்கம்

பிரபல பதிவர் கவிபேரரசு குசும்பன் ஆரம்பித்த அகில உலக தமிழ்வலைபதிவர்கள் சங்கத்தில் சிலபல குறைகள் இருப்பதாலும் குறைந்தபட்ச பதிவர்களின் தேவையை அது பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எக்கி நிற்பதாலும், பிரபல பதிவர்களை மட்டுமே அவர்கள் குறிப்பிடுவதாலும், பிரபலமல்லாத பதிவர்களின் நலனை மட்டுமே மனதில் வைத்து போட்டி சங்கம் அமைக்க முடிவெடுத்தாகி விட்டது. ஆம் உங்கள் நலனை முன்னிட்டு “அகிள உளக தமில்கொலைபதிவற்கல் சங்கம்” ஆரம்பிக்க படுகிறது.

 

இந்த சங்கத்தில் யாரெல்லாம் சேரலாம்



நான் தினமும் பல பேருக்கு கமெண்ட் போடுகிறேன் ஆனால் யாருமே எனக்கு கமெண்ட் போட வில்லையே என கவலைபடுவரா நீங்கள்..???

எனக்கு தமிழில் சரியாக டைப்ப வரவில்லை ஆனால் நினைத்தை எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவரா..???

ஓரு வாக்கியம் டைப் செய்யவே நாக்கு தள்ளுதே.. எப்பிடிதான் பக்கம் பக்கமா டைப் செய்றாங்களோன்னு வாய் பிளப்பவரா..???

சீரியஸான பதிவில் நீங்கள் எதையாவது சொன்னால் வாசிப்பனுவம் பத்தாது, அது இதுன்னு சொல்லி உங்களை சிரிப்பு போலிஸ் ஆக்குறாங்களா..???

உங்களை யாராவது மானங்கெட்ட தனமா ஏசி கமெண்ட் போட்டதும் ரத்தம் சூடாகி திட்டலாம் என டைப்ப ஆரம்பித்தால் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருகிறதே என வருத்தப்படுபவரா,,????

இதில் குறிப்பிடபடாத இன்னும் பலவற்றையும் செய்பவரா நீங்கள்….?????


கவலையை விடுங்கள்.. உங்கள் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுதான் அகிள உளக தமில்கொலைபதிவற்கல் சங்கம்.

இதில் சேர்பவர்களுக்கு பதிவு காத்தாடாமல் இருக்க ஆள் வைத்து பின்னூட்டமும் ஓட்டும் போட ஏற்பாடு செய்யப்படும்.

பிரபல பதிவர்களுக்கு நீங்கள் போடும் பின்னூட்டத்திற்கு பதில் சொல்ல வில்லையென்றால் சங்கத்தின் மூலம் அவர்களுக்கு இம்போசிஷன் போட ஏற்பாடு செய்யப்படும்

பிரபலபதிவர்கள் உங்களுக்கு பின்னூட்டத்தில் ஸ்மைலி மட்டும் போட்டு சென்றால் அவர்களை தக்க விதத்தில் தட்டி கேட்கப்படும்.

இதன் சங்கத்து உறுப்பினர்களை ஏன் தவறாக டைப்பிகிறாய் என கேட்டால் கேட்டவர்களின் மூக்கில் குத்த ஆட்கள் நியமிக்கப்படும்.

ஏதேனும் பிரச்சனை என்றால் எஸ்ஸாவது எப்பிடி? யாராவது மானம் கெட்ட கேள்வி கேட்டாலும் கொஞ்சம் கூட சூடு, சொரணையில்லாமல் இருப்பது எப்படி? போன்றவைகள் பதிவர்பட்டறையில் சொல்லிதரப்படும் என்பதையும் இங்கு தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் ஆலோசனைகள் தற்போது சங்கத்துல எவனுமே சேராததால.. சேர்ந்தஉடன் ஆலோசித்து பிறகு சொல்லப்படும்.


உடனே முந்துங்கள். முதலில் வரும் 10 அதிர்ஷ்டசாலி நேயர்களுக்கு பஸ்ஸுல் ஜன்னலோர சீட் வழங்கப்படும் என்பதையும் சங்கத்தின் சார்பில் தெரிவிக்க கடமை பட்டுள்ளோம்



டிஸ்கி:

இந்த சங்கத்தில் எல்லாருமே தலைவர்கள்தான். எத்தனை நபர்கள் சேருகிறார்களோ அத்தனை பிராஞ்ச் ஆரம்பித்து அனைவருக்கும் தலைவர் பதிவு அளிக்கப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவிக்க கடமைபட்டிருக்கிறோம்.







Monday, March 29, 2010

வீரபாண்டியன் IAS ஐ பதிவுலகிற்கு வரவேற்போம்

கடந்த வருடம் மே மாதம் ’’ வீரபாண்டியன் IAS - வறுமையை தாண்டிய போராட்டம்...!! புரோட்டா கடையிலிருந்து ஓரு IAS.. !! சாதித்த சட்ட கல்லூரி மாணவர்...!! ’’ என்று ஓரு பதிவிட்டு இருந்தேன். அந்த பதிவை படித்து விட்டு இதை தொடருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.படிக்கும் போது வறுமையின் காரணமாக புரோட்டா கடையில் பகுதி நேரமாக வேலையும் பார்த்து கொண்டு ப்ளஸ் டூவில் மாநில அளவில் ரேங்க் எடுத்ததோடு மட்டுமில்லாமல் IAS ஆகி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை இலட்சியமாக கொண்டு அதனை சாதித்தார். ஆம் IAS தேர்வில் அகில இந்திய அளவில் 53வது இட்த்தை பிடித்தார். வறுமையை தாண்டிய அவரின் போராட்டம் என்னை கவர்ந்ததால் அவ்வாறு பதிவிட்டிருந்தேன். அதன் பிறகு ஆனந்த விகடனில் அவரின் காதல் திருமணம் குறித்து போட்டிருந்த்தை படித்த்தும் சரியான ஆளை பற்றிதான் எழுதியிருக்கிறோம் என நினைத்து கொண்டிருந்தேன். ஏனெனில் காதலுக்காகவும் மனிதர் பல ஆண்டுகள் போராடி வென்றிருக்கிறார்.





இரண்டு நாள்களுக்கு முன்னால் அதே வீரபாண்டியன் IAS யிடம் இருந்து “intha seithiyai veliyittorukkum matrum vaazhthu therivitha anaivarukkum nenchaarntha nanrikal” என்று ஓரு பின்னூட்டம் வந்திருந்தது. பார்த்தவுடன் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. எப்போதும் மொக்கைகளையே எழுதி கொண்டிருக்கும் எனது ப்ளாக்கில் எப்போதாவது இது போல எழுதுவேன். அதற்கும் மொக்கைகளுக்கு உரியதை விட குறைந்த வரவேற்பே இருக்கும். ஆனால் ஓரு வருடம் கழித்தும் இது போல பதிவுகள் கவனிக்கப்படும் எனத்தெரியும் போது உருப்படியான விஷயங்கள் அடிக்கடி எழுதலாம் எனத்தோன்றுகிறது. அப்போதெல்லாம் இது போன்ற பதிவுகளுக்கும் தொடர்ந்து வந்து என்னை ஊக்கமூட்டிய நண்பர்கள் வினோத் மற்றும் கிஷோருக்கும் இந்நேரத்தில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வீரபாண்டியன் IAS ம் பதிவு எழுத ஆரம்பித்து இருக்கிறார். இரண்டு பதிவு ஆரம்பித்து இருந்தாலும் ஓரு பதிவில் தான் எழுதியிருக்கிறார். அவருடைய பதிவின் முகவரி http://veerapandiang.blogspot.com/ தேர்தலை குறித்து சிறிய கவிதையொன்றை எழுதியிருக்கிறார். வறுமையை தாண்டி போராடிய ஓருவர் பதிவு எழுத ஆரம்பித்து இருக்கிறார். அவரை நாம் ஊக்குவிப்போம். இது அவரின் புரோபைல் பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட்.


தொழில் சமூகசேவை என குறிப்பிட்டு இருக்கிறார். பதிவுலகிற்கு அவரை வரவேற்போம். இவரை போன்றவர்கள் தொடர்ந்து ஆர்வமுடனும், தொடர்ந்த ஊக்கத்துடனும் உழைக்கும் போதுதான் சமூகத்தில் வறுமையோடு போராடி கொண்டிருக்கும் பல பேருக்கு நம்பிக்கை குறையாமல் இருக்கும்.

Monday, March 22, 2010

பத்து பெண்களாஆஆஆஆ......!!!!! தொடர்பதிவு...

என்னை இந்த தொடர்பதிவிற்கு அழைத்த அன்பு நண்பர் பிரபுவிற்கு நன்றிகள் பல. பிடித்த பெண்கள் பத்து பேரை மட்டும்தான் சொல்ல வேண்டும், சொந்தகாரர்களை சொல்ல கூடாது என்ற கட்டுப்பாடுகளை மட்டும் கடைபிடிக்கிறேன்.

பிடித்த பத்து பெண்கள் என்ற இப்பதிவை என்னை பெற்று, வளர்த்து, சமூகத்தில் போராட எல்லா மனவலிமையையும் குணங்களாக எனக்கு தந்த என் அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்.

சாதனை பெண்கள் குறைவாக உள்ளார்களே.. நிறைய பேரின் தொடர் பதிவில் திரும்ப திரும்ப ஒரே பெயர்களே வருகிறதே என நண்பர்கள் சிலர் வருத்தப்பட்டனர். ஆமாம் உண்மைதான் பெண்களெல்லாம் ஆண்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாலே அவர்கள் வெளிச்சத்திற்கு வரவில்லை. நீங்கள் எந்த சாதனையாளர்களை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். அவர்கள் ஓன்று பெண்களாக இருப்பார்கள், அல்லது வெற்றி பெற்ற ஆண்களின் பின்னால் இருப்பார்கள். அப்படி உங்களின், என்னின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து பெண்களுமே சாதனையாளர்கள்தான்.

இதையெல்லாம் தாண்டி பிரபலமான, எனக்கு பிடித்த பத்து பெண்களின் தொகுப்பு கீழே.

செல்லம்மாள் பாரதி


மகாகவி பாரதியாரின் மனைவி. ஊர் உலகிற்கெல்லாம் பெண் விடுதலை, சமூக புரட்சி என உரக்க சொன்னவரின் வீட்டை கட்டிகாத்தவர். வீட்டில் சமைக்க அரிசியில்லாமல் அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி வைத்த அரிசியை கூட பாரதி குருவிக்கு கொடுக்கும் போதும் பொறுமையாக அறிவுருத்திய பெண்மணி. இது போன்ற பல சம்பவங்களை கேள்வி பட்டதில் இருந்து எனக்கு பாரதியாரின் படங்களை பார்க்கும் போதெல்லாம் அவரின் வெற்றிக்கு காரணமான செல்லம்மாள்தான் நினைவிற்கு வரும்.

நளினி முருகன்


காதல் கணவனுக்காக கடுமையான ஜெயில் வாழ்க்கையையே திருமணப் பரிசாக ஏற்று இன்னமும் அவரின் மேல காதல் குறையாமல் வாழும் இவரின் மன உறுதிக்காகவே இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்

சோனியாகாந்தி


தான் வளர்ந்த தேசத்தை விட்டு இந்தியாவில் வாழ்வது பெரிய விஷயம்தான் திருமணத்திற்கு பின் இந்தியராக வாழ்ந்தது மட்டுமல்லாமல் தன் காதல் கணவன் மறைவிற்கு பிறகும் இந்தியராகவே வாழ்ந்து அசத்துகிறார். காதலுக்காக தன் நாட்டையே உதறி தள்ளிய, தனக்கு வந்த பிரதமர் பதவியையும் உதறிய இவரை பார்த்தால் வியப்புதான் வருகிறது

டி.பி.ராஜலெட்சுமி

தமிழில் முதல் பெண் இயக்குனர். 1936 ல் மிஸ். கமலா என்ற திரைப்படத்தையும் பின்பு 1938ல் மதுரைவீரன் படத்தையும் இயக்கியுள்ளார் (நன்றி அய்யனார் – இந்த தகவல் அவரின் பதிவில் இருந்துதான் தேடி எடுத்தேன்)

சி. வி. திலகவதி


சதர்ன் ரயில்வேயின் முதல் பெண் ஓட்டுனர். உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் முதல் பெண் ஓட்டுனர் என்றாலும் வரும்காலத்தில் நிறைய பெண் ஓட்டுனர்கள் வருவதற்கு உந்து சக்தியாக இருக்கிறார்.

சாவித்திரி


தர்மபுரியை சேர்ந்த இவர் சென்னை மாநகர பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். கடினமான வேலைகளுக்கு பெண்கள் வரமாட்டார்கள் என்ற மாயையை இவர், திலகவதி மற்றும் பல பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் நிருபித்து வருகிறார்கள்.

கவிஞர் தாமரை


எனக்கு இவரின் திரைபடபாடல்களில் இவரை பிடித்ததை விடவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் இவரின் பேச்சை கேட்டு இவரின் ரசிகன் ஆனேன். என்னா பேச்சு அது...!! ஸான்ஸே இல்லங்க... இப்ப கேட்டாலும் கைதட்ட தோணும்

சானியா மிர்சா


விளையாட்டு துறையில் இந்தியாவில் மிகபிரபலமான பெண் டென்னிஸ் வீராங்கனையாக இவர் உருவெடுத்த விதம் ஆச்சர்யமானது. ஆனால் அதற்கான இவரின் உழைப்புதான் என்னை கவர்ந்த்து.

ராதிகா


ராடான் மீடியா எனற நிறுவனத்தை வெற்றிகரமாக நட்த்தி வருபவர். இந்த துறையில் ஆண்களே நிறுவனத்தை நட்த்த திணறிவரும் இக்காலத்தில் வெற்றிகரமாக நடத்தி, பெண்களால் ஆண்களை விடவும் வெற்றிகரமாக செயல்படமுடியும் என நிருபித்து வருபவர்

ஜெயலலிதா


இவரின் தைரியத்திற்காக பிடிக்கும். தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியை ராணுவ கட்டுகோப்புடன் வழிநடத்தும் ஆளுமைதிறன், நிர்வாகத்திறன் எனக்கு இவரிடம் மிகவும் பிடித்தது.

இந்த தொடர்பதிவை தொடர விரும்புவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.