Friday, August 2, 2013

சிவில் இன்ஜினியர்


”இங்க என்ன நாயே வேடிக்கை போய் வேலைய பாரு”ன்னு சும்மா நின்னுட்டு இருந்த சித்தாளை ஏசிவிட்டு என் பக்கமா திரும்பி ”ஆளு சும்மா நிக்குறான் வேடிக்க பாத்துட்டு இருக்க… வேல வாங்க தெரியல… என்னத்த படிச்சு கிழிச்சியோ… வந்துட்டானுங்க நம்ம உயிர வாங்குறதுக்குன்னு” முகத்துக்கு நேரே காறி உமிழ்ந்தா மாதிரியான பேச்சு உடம்பையே அதிர வைத்தது.. தினமும் இதே கதைதான்… 

என்னையும் சேர்த்து மூணு அனுபவமில்லாத இன்ஜினியர் அந்த சைட்டில் ஜாய்ன் பண்ணியிருந்தோம். சீனியர்ஸ்ஸோட பொண்டாட்டி ஏசுனது, வீட்ல தண்ணி வராததது, மேலதிகாரி ஏசுனது போன்ற எல்லா பிரச்சனைக்கும் எங்களை ஏசுவதுதான் அவர்களுக்கு வடிகால் ரொம்ப என்ஜாய் பண்ணி இன்வால்வ்மெண்ட்டோட ஏசிட்டு இருந்தாங்க.  

ஒரு மாசம் அப்பிடியே ஓடுச்சு ஞாயிற்றுகிழமைகளில் கான்க்ரீட்க்கு தண்ணி நனைக்க கூட ஆள் இல்லாமல் நாங்களே பாக்க வேண்டியதாயிடுச்சு.. படிச்சு முடிச்ச உடனே வேலை போலாம் ஜாலியா இருக்கலாம்னு நினைச்சா… ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை இரவும் பகலும் வெயிலில் காய்ஞ்சு மண் படிஞ்ச தலையும் சிமெண்ட் கறை படிஞ்ச ட்ரெஸ்ஸுமாய் அலைஞ்சது எங்களை எப்பவாது கண்ணாடியில் பார்க்கும் போது ஜெர்க் கொடுத்துச்சு. ஒரு மாச வெயிலில் ஒரு கோட் தார் அப்பிய மாதிரி இருந்த முகத்தை எப்பவாது ரூமில் ப்ரியா இருக்கும் போது எடுத்து பார்த்து… அப்பவே எங்கம்மா சொல்லுச்சு சிவில் எடுக்காத…சிவில் எடுக்காதன்னு நாந்தான் கேக்காம தப்பு பண்ணிட்டேனு சொல்லி வச்சா போல எல்லாரும் ஒண்ணு போல புலம்புவோம்.

அப்பதான் என் கூட படிச்ச இன்னொரு பையன் எங்களை பார்க்க வந்தான் அவனும் ஒரு வேலையில் சேர்ந்து ஒரு மாதம் ஆயிருந்துச்சு. அவனை பார்த்ததும் எங்களுக்கு ஆச்சர்யம்.. கலர் குறையாமல் முன்னை விடவும் ஜொலித்தான். விசாரிச்சப்போ கம்யூட்டரில் மட்டும்தான் வேலை… அதுவும் எட்டு மணிநேரம்தான் ஆபிஸ் பூரா ஒரே பொண்ணுங்களா இருப்பாங்கன்னு சொன்னதை கேட்டு மத்த ரெண்டு பேரும் நைட்டே பொட்டிய கட்டி கம்பெனிய விட்டு எஸ்கேப். என் ப்ராஜெக்ட் மேனேஜர் மத்த ரெண்டு பேரும் ஓடினதை பார்த்து என் பெட்டிய தூக்கி மறைச்சு வச்சு என்னைய ஓடவிடாம தடுத்திட்டாங்க.

ரெண்டு வருஷம் ஏச்சு, புழுதி, ஏக்கம், அவமானம் எல்லாத்தோட அனுபவங்கள் தொழில் நுட்பங்கள்னு பல விஷயங்களை அந்த வேலை கத்து கொடுக்க ஆரம்பிச்சுது. கொத்தனார்கள்தான் என் ஆசிரியர்கள் நிறைய்ய விஷயங்களை எளிதாய்  புரியுற வகையில் சொல்லி கொடுத்தாங்க. 

இடையில் ஓடிப்போன நண்பர்களில் ஒருவர் சிவில் லைனை விட்டுட்டு வேற லைனில் மாறிவிட்டார். இன்னொருவர் வேற லைன் மாறி மீண்டும் சிவிலுக்கே வந்துவிட்டார். ஆனால் அத்தனை ஏச்சு பேச்சுக்களோட என்னை மாதிரியே அதை சகித்து வேலையை கத்து கொண்டவர்கள் மட்டுமே இப்ப நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். இதுதான் சரின்னுல்லாம் சொல்றதுக்கு எழுதலை. அதிஷா ப்ளஸ்ல இப்ப படிச்சு முடிச்சவஙக்ளோட வேலைக்கு முயற்ச்சி செய்யும் மனப்பான்மை குறித்து எழுதியதை படித்ததும் தோணியது இங்கும் பதிந்து வைக்கலாம்னு இந்த பதிவு.

1 comment:

கோவை நேரம் said...

ம்ம்..நன்றாக இருக்கிறது..