Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Friday, August 2, 2013

சிவில் இன்ஜினியர்


”இங்க என்ன நாயே வேடிக்கை போய் வேலைய பாரு”ன்னு சும்மா நின்னுட்டு இருந்த சித்தாளை ஏசிவிட்டு என் பக்கமா திரும்பி ”ஆளு சும்மா நிக்குறான் வேடிக்க பாத்துட்டு இருக்க… வேல வாங்க தெரியல… என்னத்த படிச்சு கிழிச்சியோ… வந்துட்டானுங்க நம்ம உயிர வாங்குறதுக்குன்னு” முகத்துக்கு நேரே காறி உமிழ்ந்தா மாதிரியான பேச்சு உடம்பையே அதிர வைத்தது.. தினமும் இதே கதைதான்… 

என்னையும் சேர்த்து மூணு அனுபவமில்லாத இன்ஜினியர் அந்த சைட்டில் ஜாய்ன் பண்ணியிருந்தோம். சீனியர்ஸ்ஸோட பொண்டாட்டி ஏசுனது, வீட்ல தண்ணி வராததது, மேலதிகாரி ஏசுனது போன்ற எல்லா பிரச்சனைக்கும் எங்களை ஏசுவதுதான் அவர்களுக்கு வடிகால் ரொம்ப என்ஜாய் பண்ணி இன்வால்வ்மெண்ட்டோட ஏசிட்டு இருந்தாங்க.  

ஒரு மாசம் அப்பிடியே ஓடுச்சு ஞாயிற்றுகிழமைகளில் கான்க்ரீட்க்கு தண்ணி நனைக்க கூட ஆள் இல்லாமல் நாங்களே பாக்க வேண்டியதாயிடுச்சு.. படிச்சு முடிச்ச உடனே வேலை போலாம் ஜாலியா இருக்கலாம்னு நினைச்சா… ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை இரவும் பகலும் வெயிலில் காய்ஞ்சு மண் படிஞ்ச தலையும் சிமெண்ட் கறை படிஞ்ச ட்ரெஸ்ஸுமாய் அலைஞ்சது எங்களை எப்பவாது கண்ணாடியில் பார்க்கும் போது ஜெர்க் கொடுத்துச்சு. ஒரு மாச வெயிலில் ஒரு கோட் தார் அப்பிய மாதிரி இருந்த முகத்தை எப்பவாது ரூமில் ப்ரியா இருக்கும் போது எடுத்து பார்த்து… அப்பவே எங்கம்மா சொல்லுச்சு சிவில் எடுக்காத…சிவில் எடுக்காதன்னு நாந்தான் கேக்காம தப்பு பண்ணிட்டேனு சொல்லி வச்சா போல எல்லாரும் ஒண்ணு போல புலம்புவோம்.

அப்பதான் என் கூட படிச்ச இன்னொரு பையன் எங்களை பார்க்க வந்தான் அவனும் ஒரு வேலையில் சேர்ந்து ஒரு மாதம் ஆயிருந்துச்சு. அவனை பார்த்ததும் எங்களுக்கு ஆச்சர்யம்.. கலர் குறையாமல் முன்னை விடவும் ஜொலித்தான். விசாரிச்சப்போ கம்யூட்டரில் மட்டும்தான் வேலை… அதுவும் எட்டு மணிநேரம்தான் ஆபிஸ் பூரா ஒரே பொண்ணுங்களா இருப்பாங்கன்னு சொன்னதை கேட்டு மத்த ரெண்டு பேரும் நைட்டே பொட்டிய கட்டி கம்பெனிய விட்டு எஸ்கேப். என் ப்ராஜெக்ட் மேனேஜர் மத்த ரெண்டு பேரும் ஓடினதை பார்த்து என் பெட்டிய தூக்கி மறைச்சு வச்சு என்னைய ஓடவிடாம தடுத்திட்டாங்க.

ரெண்டு வருஷம் ஏச்சு, புழுதி, ஏக்கம், அவமானம் எல்லாத்தோட அனுபவங்கள் தொழில் நுட்பங்கள்னு பல விஷயங்களை அந்த வேலை கத்து கொடுக்க ஆரம்பிச்சுது. கொத்தனார்கள்தான் என் ஆசிரியர்கள் நிறைய்ய விஷயங்களை எளிதாய்  புரியுற வகையில் சொல்லி கொடுத்தாங்க. 

இடையில் ஓடிப்போன நண்பர்களில் ஒருவர் சிவில் லைனை விட்டுட்டு வேற லைனில் மாறிவிட்டார். இன்னொருவர் வேற லைன் மாறி மீண்டும் சிவிலுக்கே வந்துவிட்டார். ஆனால் அத்தனை ஏச்சு பேச்சுக்களோட என்னை மாதிரியே அதை சகித்து வேலையை கத்து கொண்டவர்கள் மட்டுமே இப்ப நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். இதுதான் சரின்னுல்லாம் சொல்றதுக்கு எழுதலை. அதிஷா ப்ளஸ்ல இப்ப படிச்சு முடிச்சவஙக்ளோட வேலைக்கு முயற்ச்சி செய்யும் மனப்பான்மை குறித்து எழுதியதை படித்ததும் தோணியது இங்கும் பதிந்து வைக்கலாம்னு இந்த பதிவு.

Monday, July 15, 2013

சிங்கம் – II - என் பார்வையில்


பொதுவாக எனக்கு சில படங்கள் டிரைலர் பார்க்கும் போதே இது கண்டிப்பா செம மொக்கையா இருக்கும்னு தோணிய படங்கள் எல்லாமே அதுபோல மொக்கையாவே இருந்திருக்கு. மாறாக சில டிரைலர் பாத்து நல்லாருக்கும் போலயே நினைச்சு ஏமாத்தின படங்கள்தான் அதிகம். இதையே எப்பிடி சொல்லலாம்னா ஒரு சோறு பதமில்லாத எந்த பானையும் இதுவரையில் பதமாகவே இருந்ததில்லை.



ஆனால் சிங்கம் 2 மட்டும் விதிவிலக்கா இருக்கும்னு சில பாஸிட்டிவ் விமர்சனங்கள் படிச்சதும் தோணுச்சு. இருந்தாலும் படத்தை பார்க்காமல் எந்த முடிவுக்கும் வந்துற கூடாதுன்னு படத்தை பார்க்க போனேன்..

வாவ்… அட்டகாசம்.. ஸ்பீடான… ரசிகனை லாஜிக் பார்க்க விடாத பரபரப்பான திரைகதை, பேக் க்ரவுண்ட் ம்யூசிக்ன்னு செம  மிக்ஸிங். 80-90ஸ்ல விஜயகாந்த், அர்ஜுன் படங்கள் ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அந்த இடத்தை இப்போ ஹரி புடிச்சுருக்காருன்னு தெரியுது.

சிங்கம் 1ல் பிரகாஷ்ராஜை கொன்றதும் ஆயுத கடத்தலை கண்காணிக்க தூத்துகுடியில் என் சி சி வாத்தியராக உளவு பார்க்க ஆரம்பித்து ஒரு ஜாதி கலவரம் ஏற்பட இருக்கும் தருணத்தில் மறுபடியும் போலிஸ் பதவிக்கு வந்து போதை பொருள் கடத்தல் நெட்வொர்க் ராஜாவை ஆப்பிரிக்காவில் போய் புடிச்சு வரும் சாதாரண கதையை திரைகதை மேஜிக்கில் கமர்ஷியல் ஹிட்டடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி.


அனுஷ்காவுக்கு வயசாயிடுச்சுன்னு விமர்சனம் எழுதறவங்கெல்லாம் அமலாபால், நஸ்ரியா கட்சிக்கு மாறிய துரோகிகளாகத்தான் இருக்கணும். எனக்கு இதிலயும் அனுஷ்க்காவை பிடிச்சிருக்கு.. அதுபோக ஸ்கூல் யூனிபார்ம்ல ஹன்சிகாவும் என் கண்ணுக்கு அழகாத்தான் தெரியுறாங்க (ரொம்ப காய்ஞ்சு கிடக்கேனோன்னு யாரும் தப்பா நினைக்க வேணாம்)
சந்தானம் காமெடி எனக்கு அவ்வளவா பிடிக்கலன்னாலும் அதுக்கு தியேட்டர்ல சின்ன பசங்கல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சதை பார்த்தா நமக்கு பிடிக்கலேன்னு சொன்னா வயசாயிடுச்சுன்னு பலர் நினைக்க வாய்ப்பிருப்பதால் பிடிச்சதாவே நின்னைச்சு நானும் ரெண்டு மூணு இடத்துல கைதட்டி சிரிச்சேன் (தியேட்டர்ல)


சூர்யாவுக்கு ஏழாம் அறிவு, மாற்றான் தோல்வியை சரிகட்ட வந்த கமர்ஷியல் ஹிட் என்பதை தவிர வேறு ஏதும் அதிகமா சொல்ல முடியவில்லை. நெட்வொர்க் ஜாமர் பயன் படுத்தி லாட்ஜ்ஜில் வில்லன்களை பிடிப்பது, சாயத்தண்ணீர் அடித்து கலவரகாரர்களை அடையாளம் கண்டு பிடிப்பதுங்கற மாதிரி சின்ன சின்ன புது விஷயங்களை காட்டி திரைகதையை சுவாரஸ்யமாகவே கொண்டு செல்கிறார்.


படம் பார்க்கும் போது கவனிச்ச முக்கியமான விஷயம் பொதுவா சூர்யாவிற்கு இதற்கு முந்தைய படங்களிலெல்லாம் பார்த்த வரையில் ஆண் ரசிகர்களை விடவும் பெண் ரசிகர்கள்தான் அதிகமாக இருக்கும்னு நினைக்குறேன். தியேட்டர் அதகளங்கள், ஆரவாரங்கள்ல்லாம் விஜய் அஜித் போல இவருக்கு இருக்காது.. ஆனா இதில் அதெல்லாம் தலைகீழா இருக்கு.. செம ரகளை தியேட்டர்ல…


மொத்தத்துல படம் நல்லாருக்கு எனக்கு பிடிச்சிருக்கு

Friday, May 10, 2013

லாலா கடை லட்சிய வேலை


பத்தாவது படிக்கும் போது பார்ட் டைமா ஒரு எஸ்டிடி பூத்தில் வேலை பார்த்து வந்தேன். டூட்டி டைம் வந்து மாலை 8-11 கல்லாவில் இருந்து கணக்கு முடித்து கடையை அடைக்க வேண்டும் மறுபடி காலை 7 மணிக்கு திறந்து 9மணிக்கு மாற்று ஆள் வரும் வரையில் இருக்க வேண்டும் சனி, ஞாயிறுகளில் புல் டே டூட்டின்னு பேசி வேலைக்கு போயிட்டு இருந்தேன் .

அப்பதான் என்னுடைய லட்சிய வேலையை நான் கண்டறிந்தேன்.. மூணுகடை தள்ளியிருந்த லாலா கடையில் வேலை பார்க்கும் இசக்கியை பார்த்தப்புறம்தான் எனக்குள் அந்த ஆசை. இசக்கி வெள்ளந்தியான பய.. நானு வேலைக்கு சேர்ந்த மொத நாளா வந்து சினேகமா விசாரிச்சான். லாலா கடையில மீந்து போன பலகாரத்தையெல்லாம் குடுத்து விடுவாங்க. வழக்கமா 9 மணிக்கெல்லாம் சவுண்ட் கொடுத்து கூப்பிடுற அண்ணாச்சி இன்னும் கூப்பிடலை.. எனக்கு பசிக்க ஆரம்பிச்சிது. கடையில வேற ரெண்டு பேரு… போன் பேசிட்டே இருங்காங்க..டக்னு டேபிள்க்கு அடில குனிஞ்சு போன் வயரை உருகி விட்டு லைன் டெட்ன்னு அவங்களை அனுப்பிட்டு லாலா கடைக்கு போனா… செம கூட்டம்… அண்ணாச்சிய மெதுவா கூப்பிட்டு என்னாச்சின்னு கேட்டா… 

இன்னைக்கு நல்ல வியாபாரம் தம்பி ஓண்ணும் மிஞ்சலை நாளைக்கு தாரேன் என்னன்னு சொல்றாரு
உள்ள எட்டி பார்த்தா.. இந்த இசக்கிபய அந்த நெய்முறுக்கை எடுத்து வாய்ல போட்டு பாட்டு படிச்சிட்டே… பார்சல் கட்டிட்டு இருக்கான். வெட்கத்தை விட்டு அண்ணாச்சிட்ட கேட்டேவிட்டேன்
… 
அண்ணாச்சி நெய்முறுக்காது ஒண்ணு குடுங்க பசிக்குன்னு

அண்ணாச்சி ஒண்ணுமே சொல்லலை.. அதனால திருப்பி கேட்டேன்.. இசக்கி மட்டும் திங்கான்.. எனக்கு மட்டும் இல்லேன்னு சொல்றியேலேன்னு

என்னாச்சின்னு தெரிய்ல புசுக்குன்னு கோவப்பட்டுட்டாரு.. லேய்…உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா புரியாதா போ..போயி உங்க ஓனர்ட்ட போயி கேளு.. எங்கடையில வேலை பாக்குற ஆளுக்கு மட்டும்தான் ஓசில இனி பலகாரம்னு.

பக்கத்து ஹார்டுவேர் கடையில வேலை பாக்குற மைக்கேலும் எண்ட்ட வந்து சொன்னான் இந்த இசக்கிபய மூணாப்புதாம்ல படிச்சிருக்கான்… ஆனா அவனுக்கு அடிச்ச யோகத்தை பாத்தியா.. டெய்லி நெய்முறுக்கு, அண்டிபருப்பு, பால்கோவான்னு ஸ்பெஷல் அயிட்டமாத்தான் சாப்பிடுவான்னான்.

அன்றிலிருந்து என்னுடைய குறிக்கோளே எப்பிடியாது சீக்கிரம் படிச்சு முடிச்சு ஓரு லாலா கடையில் வேலைக்கு சேர்ந்திரணும்ங்கறதாகத்தான் இருந்துச்சு. ப்ளஸ் டூ லீவுல அண்ணாச்சிட்ட கேட்டு வேலைல்லாம் ரெடி பண்ணி வச்சுருந்தேன் :))  வீட்டுக்கு தெரிஞ்சு கிடைச்ச ஏச்சுல அந்த ஆசையை மூட்டை கட்டி வச்சுட்டேன்.

Thursday, December 15, 2011

நான் உசுரோடத்தான்யா இருக்கேன் :)

கிட்டத்தட்ட ஒன்னரை வருடங்களுக்கு பிறகு… தொடர்ந்து பதிவு எழுதலாம்னு எண்ணம்.. கூகுள் பஸ் போனதுதான் முக்கியமான காரணமா இருக்கும்னு நினைக்கிறேன்… பிடிச்ச கூகுள் பஸ்ஸை சட்டுன்னு மாத்தி ப்ளஸ்ல போறதுக்கு பதிலா நமக்கு நெருக்கமான பதிவே எழுதலாம்னு வந்தாச்சு :)




எப்பயாச்சும் நான் பதிவு எழுதாலாம்னு நினைச்சாலும் உடனே ஞாபகத்து வருவது நம்ம சினேகிதன் அக்பர்தான்.. அவருதான் வீடு பத்தின தொடரை தொடர்ந்து எழுதுங்கன்னு எனக்கே அந்த தொடரை பத்தி ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்பார்.. இனிமே அதையும் டிரை பண்ணனும்.



இடைப்பட்ட காலத்தில் என் பதிவை கூகிளில் தேடிபார்த்து என்கிட்ட சந்தேகம் கேட்கும் மின்மடல்களை பார்க்கும் போது… என் மனசாட்சி என்னை பாத்து…”டேய் கண்ணா…. நீ இதுக்கெல்லாம் வொர்த் இல்லையேடா” ந்னு கேட்கும் ஆனாலும் அந்த மெயிலுக்கெல்லாம் பொறுப்பா பெரிய பருப்பு மாதிரி பதில் போட்டதை நினைச்சா சிரிப்புதான் வருது..



இதுக்கெல்லாம் காரணம் தமிழில் தொழில்நுட்ப பதிவுகள் மிகமிக குறைவாக வருவதுதான்.. விஷயம் தெரிஞ்ச நிறைய பேரு எழுத வராமலே இருப்பதும்.. என்னை மாதிரி அரைகுறை எழுதிகிட்டு இருக்கறதும்தான் முக்கிய காரணம்னு நினைக்குறேன்.. இனிமேல் நான் படிச்ச/படிக்கும் கட்டுமான செய்திகளையும் முடிந்தளவு பதிவு செய்யலாம்னு பாக்குறேன்.. பாக்கலாம்… நடக்குதான்னு :)



மொக்கை ஸ்டார்ட் :))



Read more: http://www.mylivesignature.com/mls_wizard2_1.php?sid=54488-88-2310E4045D4C93510FF9C713854FCA35#ixzz0gSZ8nIoA

Tuesday, July 27, 2010

இராமாயணம் நெல்லையில் நடந்ததா?? ஜடாயு தீர்த்தமும் காட்டு இராமர் கோவிலும் சாட்சியங்களா??

நேற்றுதான் இராவணன் படம் பார்க்க முடிந்தது. நான் பொதுவாக பொழுதுபோக்கவே படம் போவதாலும் இதில் விஷுவல் ட்ரீட் நல்லா இருந்ததாலும் எனக்கு படம் பிடித்திருந்தது. ஆனால் மணிரத்னம் கடத்தப்படும் இடமாக நெல்லையை ( அவரின் செண்டிமெண்ட்..??!!) காண்பித்து இருப்பார். அதை பார்க்கும்போது என் நினைவுகள் நெல்லையின் காட்டுராமர் கோவிலையும், ஜடாயு தீர்த்தத்தையும் நோக்கி போக ஆரம்பித்தது.


சரியாக நினைவில்லாத ஓரு நாளின் சாயங்காலம் உறவினரின் அழைப்பின் பேரில் நெல்லை அருகேயுள்ள அருகன்குளம் கிராமத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தோம். எனக்கு அந்த கோவிலுக்கு செல்வது அதுதான் முதல் முறை, நண்பர் சில முறைகள் சென்றிருக்கிறார். அங்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வேறெங்க போகலாம்னு கேள்வியை வீசி விட்டு வண்டியை எடுக்க எத்தனிக்கும் போது

"இங்க பக்கத்துலதான் ஜடாயு தீர்த்தமும், காட்டு ராமர் கோவிலும் இருக்கு ஹிஸ்டாரிக்கல் பிளேஸ் இராமயணயத்துல இராவணன் சீதையை கடத்திட்டு போனது இங்க இருந்துதான். தெரியுமா?

வந்த எதிர் கேள்வியில் சுவாரஸ்யம் பல மடங்கு கூடி என்னப்பா சொல்ற போலாம் உடனேன்னு வண்டியை திருப்பினோம்.

ஜடாயு  தீர்த்தம்
சற்று குறுகலான சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த ஓரு பாதையில் செல்லும் போதே அணில்களின் குறுக்கு ஓட்டங்களும், அடர்ந்த வளர்ந்திருந்த மரங்களும் ஓரு காட்டுக்குள் செல்வது போன்ற தோற்றத்தை கொடுத்தது. அதிலிருந்து கொஞ்சம் தள்ளிப்போனால் ஓரு கோசாலை வருகிறது அதையும் தாண்டி சென்றால் முதலில் வருகிறது ஜடாயு தீர்த்தம். சென்றால் சிறிய கிணறு போன்ற அமைப்பும் அதையொட்டிய ஆறும் அதனுடன் இணைந்த சிறிய கோவிலும் அமைந்துள்ளது. அதாவது சீதையை இராவணன் கடத்தி செல்லும் போது ஜடாயு அவனுடன் போராடி வீழ்ந்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது அங்கு வந்த இராமன் ஜடாயுவிற்கு தண்ணீர் தருவதற்காக அம்பால் உருவாக்கிய கிணறுதான் இது என்று இங்குள்ளவர்களால் நம்பப்படுகிறது. பிறகு ஜடாயு இறந்தவுடன் அவருக்கான ஈமகாரியங்களை சற்று தொலைவிலுள்ள சிவன் கோவிலில் செய்ததாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. இங்கு மூன்று கிணறு போன்ற அமைப்புகளை ஜடாயு தீர்த்தம், இராம தீர்த்தம், சிவ தீர்த்தம் என அழைக்கிறார்கள். இதனருகிலேயே இருக்கிறது காட்டு இராமர் கோவில். இங்குள்ள ஆஞ்சனேயர் சிலை சுயம்பு என கூறுகிறார்கள்.

காட்டு இராமர் கோவில்

இராவணன் இங்கிருந்துதான் சீதையை கடத்தியதாகவும், கடத்தும் போது நடந்த போரில் ஜடாயு வீழ்த்தப்பட்டு கிடந்ததாகவும் அப்போது இராமர் ஜடாயுவிற்காக உருவாக்கிய நீரூற்றுதான் இப்போது ஜடாயு தீர்த்தம் என அழைக்கப்படுவதாகவும் அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். மிக ஆச்சர்யமாக இருந்தது. இது உண்மையாக இருக்குமா? அல்லது உணமை மாதிரி நம்ப வைக்க பட்டிருக்கிறதா என. உண்மையாக இருந்தாலும், உண்மை மாதிரி நம்ப வைக்கப்பட்டிருந்தாலும் அது மிக ஆச்சர்யமானதுதான். எது எப்படியோ நான் அந்த அமைதியான சூழலுக்காகவே அடிக்கடி அங்கு போக ஆரம்பித்தேன்.

டிஸ்கி:
எனக்கு இறை நம்பிக்கை உண்டென்றாலும் அதை என் எழுத்தில் கொண்டு வர  எப்போதும் விரும்பியதில்லை.  இந்த பதிவும் மிகுந்த தயக்கங்களின் இடையேத்தான் எழுதுகிறேன்.  இது இந்த இடம் குறித்து நீண்டநாடகளுக்கு பின்தான் தெரிந்தது. என்னை போல சிலர் இருப்பதாலும், இது குறித்த விவாதங்களுக்கான ஓரு ஆரம்பமாகவும்தான்  இந்த பதிவு.


படங்கள் உதவி:  கூகுள்

Monday, March 22, 2010

பத்து பெண்களாஆஆஆஆ......!!!!! தொடர்பதிவு...

என்னை இந்த தொடர்பதிவிற்கு அழைத்த அன்பு நண்பர் பிரபுவிற்கு நன்றிகள் பல. பிடித்த பெண்கள் பத்து பேரை மட்டும்தான் சொல்ல வேண்டும், சொந்தகாரர்களை சொல்ல கூடாது என்ற கட்டுப்பாடுகளை மட்டும் கடைபிடிக்கிறேன்.

பிடித்த பத்து பெண்கள் என்ற இப்பதிவை என்னை பெற்று, வளர்த்து, சமூகத்தில் போராட எல்லா மனவலிமையையும் குணங்களாக எனக்கு தந்த என் அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்.

சாதனை பெண்கள் குறைவாக உள்ளார்களே.. நிறைய பேரின் தொடர் பதிவில் திரும்ப திரும்ப ஒரே பெயர்களே வருகிறதே என நண்பர்கள் சிலர் வருத்தப்பட்டனர். ஆமாம் உண்மைதான் பெண்களெல்லாம் ஆண்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாலே அவர்கள் வெளிச்சத்திற்கு வரவில்லை. நீங்கள் எந்த சாதனையாளர்களை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். அவர்கள் ஓன்று பெண்களாக இருப்பார்கள், அல்லது வெற்றி பெற்ற ஆண்களின் பின்னால் இருப்பார்கள். அப்படி உங்களின், என்னின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து பெண்களுமே சாதனையாளர்கள்தான்.

இதையெல்லாம் தாண்டி பிரபலமான, எனக்கு பிடித்த பத்து பெண்களின் தொகுப்பு கீழே.

செல்லம்மாள் பாரதி


மகாகவி பாரதியாரின் மனைவி. ஊர் உலகிற்கெல்லாம் பெண் விடுதலை, சமூக புரட்சி என உரக்க சொன்னவரின் வீட்டை கட்டிகாத்தவர். வீட்டில் சமைக்க அரிசியில்லாமல் அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி வைத்த அரிசியை கூட பாரதி குருவிக்கு கொடுக்கும் போதும் பொறுமையாக அறிவுருத்திய பெண்மணி. இது போன்ற பல சம்பவங்களை கேள்வி பட்டதில் இருந்து எனக்கு பாரதியாரின் படங்களை பார்க்கும் போதெல்லாம் அவரின் வெற்றிக்கு காரணமான செல்லம்மாள்தான் நினைவிற்கு வரும்.

நளினி முருகன்


காதல் கணவனுக்காக கடுமையான ஜெயில் வாழ்க்கையையே திருமணப் பரிசாக ஏற்று இன்னமும் அவரின் மேல காதல் குறையாமல் வாழும் இவரின் மன உறுதிக்காகவே இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்

சோனியாகாந்தி


தான் வளர்ந்த தேசத்தை விட்டு இந்தியாவில் வாழ்வது பெரிய விஷயம்தான் திருமணத்திற்கு பின் இந்தியராக வாழ்ந்தது மட்டுமல்லாமல் தன் காதல் கணவன் மறைவிற்கு பிறகும் இந்தியராகவே வாழ்ந்து அசத்துகிறார். காதலுக்காக தன் நாட்டையே உதறி தள்ளிய, தனக்கு வந்த பிரதமர் பதவியையும் உதறிய இவரை பார்த்தால் வியப்புதான் வருகிறது

டி.பி.ராஜலெட்சுமி

தமிழில் முதல் பெண் இயக்குனர். 1936 ல் மிஸ். கமலா என்ற திரைப்படத்தையும் பின்பு 1938ல் மதுரைவீரன் படத்தையும் இயக்கியுள்ளார் (நன்றி அய்யனார் – இந்த தகவல் அவரின் பதிவில் இருந்துதான் தேடி எடுத்தேன்)

சி. வி. திலகவதி


சதர்ன் ரயில்வேயின் முதல் பெண் ஓட்டுனர். உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் முதல் பெண் ஓட்டுனர் என்றாலும் வரும்காலத்தில் நிறைய பெண் ஓட்டுனர்கள் வருவதற்கு உந்து சக்தியாக இருக்கிறார்.

சாவித்திரி


தர்மபுரியை சேர்ந்த இவர் சென்னை மாநகர பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். கடினமான வேலைகளுக்கு பெண்கள் வரமாட்டார்கள் என்ற மாயையை இவர், திலகவதி மற்றும் பல பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் நிருபித்து வருகிறார்கள்.

கவிஞர் தாமரை


எனக்கு இவரின் திரைபடபாடல்களில் இவரை பிடித்ததை விடவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் இவரின் பேச்சை கேட்டு இவரின் ரசிகன் ஆனேன். என்னா பேச்சு அது...!! ஸான்ஸே இல்லங்க... இப்ப கேட்டாலும் கைதட்ட தோணும்

சானியா மிர்சா


விளையாட்டு துறையில் இந்தியாவில் மிகபிரபலமான பெண் டென்னிஸ் வீராங்கனையாக இவர் உருவெடுத்த விதம் ஆச்சர்யமானது. ஆனால் அதற்கான இவரின் உழைப்புதான் என்னை கவர்ந்த்து.

ராதிகா


ராடான் மீடியா எனற நிறுவனத்தை வெற்றிகரமாக நட்த்தி வருபவர். இந்த துறையில் ஆண்களே நிறுவனத்தை நட்த்த திணறிவரும் இக்காலத்தில் வெற்றிகரமாக நடத்தி, பெண்களால் ஆண்களை விடவும் வெற்றிகரமாக செயல்படமுடியும் என நிருபித்து வருபவர்

ஜெயலலிதா


இவரின் தைரியத்திற்காக பிடிக்கும். தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியை ராணுவ கட்டுகோப்புடன் வழிநடத்தும் ஆளுமைதிறன், நிர்வாகத்திறன் எனக்கு இவரிடம் மிகவும் பிடித்தது.

இந்த தொடர்பதிவை தொடர விரும்புவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.


Tuesday, March 16, 2010

வாஸ்து மூலைகளும் மனித மூளைகளும்



சூரிய வெளிச்சம், காற்று போன்றவற்றை தேவையான அளவு வீட்டிற்குள் கொண்டு வருவதே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையாக இருந்து வந்திருக்கிறது. அதையே வாஸ்து பகவான் தன் தலையை ஈசான்ய மூலையிலும் (வடகிழக்கு) கால் பகுதியை கன்னி மூலையிலும் (தென் மேற்கு) வைத்து குறுக்காக படுத்திருப்பதாக கூறி ஒரு வரைமுறைகளை வகுத்து பின்படுத்த அறிவுறுத்தினர்.  பழைய காலங்களில் மக்களின் வாழ்வு முறையையும் தட்ப வெப்ப நிலையையும் கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை எவ்வளவோ காலங்கள் கடந்தும் மக்களின் வாழுவு முறைகள் பெரும்பாலும் மாறிவிட்ட நிலையிலும் அதை பயன்படுத்த நினைப்பதை விட முட்டாள்தனமான செயல் வேறு இருக்க முடியாது. இது இந்த காலத்தில் செடி கொடிகளை உடைகளாக பயன்படுத்துவதற்கு சமமான டிராஜடி.


இதை விடவும் பெரிய காமெடி மனையடி சாஸ்திரத்தையும் இதில் புகுத்தி இந்த அளவுதான் இருக்க வேண்டும் என பயமுறுத்துவது. மனையடி சாஸ்திரத்தில் ஓரு அடி என்பது வீட்டு தலைவனின் காலடி என தெளிவாக குறிக்கப் பட்டுள்ளது. அந்த வீட்டு தலைவரின் காலடி அளவிற்கு ஓரு தச்சு செய்து அதை கொண்டுதான் நீள அகலம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இப்போது பொதுவான டேப் அளவு வந்து விட்ட்தால் இதன் அடிப்படையே மாறி விடுகிறது. ஆனால் அதை வைத்து காசு புடுங்கும் கும்பலை பார்த்தால் ஆச்சர்யமாக வருகிறது. ஆதாரமோ, நிருபணமோ இல்லாமல் அப்பாவிகளின் குழப்பமான நிலையை பயன்படுத்தி எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள். இவர்களது இந்த திறமையெல்லாம் வேறெதிலாவது காட்டினால் இந்தியா இந்நேரம் வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டத்தில் சேர்ந்திருக்குமே எனத்தோன்றுகிறது

வாஸ்து மூலைகளும் மனித மூளைகளும்


அக்னி மூலை – தென் கிழக்கு

அக்னிமூலையில்தான் அடுப்பு இருக்க வேண்டும் என வாஸ்து கூறுகிறது. அந்த காலத்தில் விறகு அடுப்புதான் பயன்படுத்தினார்கள். அச்சமயத்தில் வெப்பம் வீட்டிற்குள் அதிகம் வராமல் இருக்கவும், தீ அணையாமல் நன்றாக எரியவும் காற்றின் திசைகேற்ப தென்கிழக்கில் சமையறை அமைத்தார்கள். நவீன யுகத்தில் கேஸ் அடுப்பை பயன்படுத்தும் காலத்திலும் அதையே சொல்லி காசு பறிக்கும் கும்பலை என்ன செய்யலாம்.?

ஈசான்ய மூலை – வட கிழக்கு

மனையில் ஈசான்யமூலைதான் சுத்தமாகவும், தண்ணீர் தொட்டி போன்றவைகளும் இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மழை நீர் வடிவதற்கு வாகாகவும், தண்ணீர் வழிந்தோட ஏதுவாகவும் இந்த மூலையானது மற்ற மூலைகளை விட பள்ளமாக இருக்க வேண்டும் என வரையறுக்க பட்ட்து. தண்ணீர் இருக்க வேண்டும் என்பதற்காக மீன் தொட்டிகளையெல்லாம் விற்பனை செய்து வருகிறார்கள்

கன்னிமூலை – தென்மேற்கு

தென்மேற்கு மூலைதான் மேடாக இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த மூலை மேடாக இருந்தால்தான் இதற்கு நேரேதிர் மூலையான ஈசான்யத்திற்கு தண்ணீர் வழிந்தோட வசதியாக இருக்கும். இதையே சொல்லி ஓவர் ஹெட் டேங்க் கூட கன்னிமூலையில்தான் இருக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.

வாயு மூலை – வடமேற்கு

வாயு மூலையில்தான் கழிவு நீர் தொட்டிகள் அமைய வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இதுவும் ஈசான்ய மூலைக்கு சொன்ன மாதிரிதான் நீர் வழிந்தோட ஏற்ற வகையில் ஈசான்ய மூலையில் தண்ணீர் தொட்டியும் வாயு மூலையில் கழிவு நீர் தொட்டியும் அமைய வேண்டும் என அறிவுறுத்துகிறது. தற்போதைய பைப்பிங் சிஸ்டம் மூலம் நமக்கு வேண்டிய இடங்களில் வாட்டம் கொடுத்து விடலாம் என்பதால் இதுவும் இங்கு தேவையில்லாமல் போகிறது.

எந்தெந்த மூலையில் என்னென்ன அறைகள் வரலாம் என்பதை குறிக்கும் வாஸ்து வரைபடம் கீழே



மேலே குறிப்பிட்டதும் கூட வாஸ்துவை காட்டி இவர்களாக வரைந்தவைதான். நமக்கு என்ன தேவையோ, எது வசதியோ அதை கருத்தில் கொண்டு வீட்டை அமையுங்கள். மற்றபடி வாஸ்து பயமுறுத்தல்கள் எல்லாம் இந்த மெயிலை 100 பேருக்கு பார்வேர்ட் செய்யாவிட்டால் அவ்வளவுதான் என வரும் மெயிலுக்கு சமானம்தான்


= = =
 இந்த சுட்டியில் பார்த்த சில பயமுறுத்தல்கள்

”இயற்கையாகவே தென்கிழக்கு (அக்னி) மூலையில் நீராதாரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி நீராதாரங்கள் இருந்தால் அந்த வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு அடிக்கடி நோய் தாக்குதல் ஏற்படும். வீட்டிற்குள் சிறிய மருந்துக்கடை நடத்த வேண்டிய நிலை வரலாம். அக்னி மூலை பாதிப்பு காரணமாக ஒரு சிலருக்கு வாரிசு இல்லாமல் போகலாம்”

“சில வீடுகளில் ஆண் சந்ததியே இல்லாமல் இருப்பதும் உண்டு. அதற்கு அந்த வீட்டின் ஈசானிய மூலையை அடைத்து வைத்திருப்பதே முதன்மைக் காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதும் உண்டு”

= = =

மனையில் நல்ல காற்றோட்டம் வரும் வகையில் வீட்டை அமையுங்கள். நன்கு உழையுங்கள் நல்ல பலன்கள் தேடி வரும்.