Showing posts with label ஸ்ரீலங்கா. Show all posts
Showing posts with label ஸ்ரீலங்கா. Show all posts

Wednesday, May 27, 2009

புலிகளின் வெற்றி

பிரபல எழுத்தாளரின் அரைகுறை புரிதல்.


இந்த பதிவில் வன்முறையின் தோல்வி எனும் கட்டுரையை முழுதும் படித்துவிட்டு வந்தால் என் கட்டுரை கொஞ்சம் புரியலாம்..

வன்முறையின் தோல்வி என சொல்லுபவர் வென்றது எது என சொன்னால் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்...

விடுதலை போராட்டங்களை வன்முறை என்ற அளவில் புரிந்திருக்கும் அவரின் புத்திசாலி தனத்தை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.. அதில் விடுதலை புலிகள் அத்தனைபேரும் கொல்லபட்டு விட்டார்கள் என்வும் கூறுகிறார். இவரை போய் பிரபல எழுத்தாளர் என்று என்னிடம் சொன்ன கஸ்மாலத்தை தேடிக்கிட்டு இருக்கேன்..அவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும்..அப்புறம் #^*%@#!##@***+##..

சரி அதை விடுங்க விஷயத்துக்கு வருவோம்.


எது வன்முறை.?


தன் இன விடுதலைக்காக, இன துரோகம் செய்தவர்களை கொல்வதின் பெயர் வன்முறை என்றால் ஒரு விடுதலை இயக்கத்தை போரில் வெல்ல உலக நாடுகளின் துணையுடன் பல்லாயிரகணக்கான அப்பாவி தமிழர்களை கொல்வதின் பெயர் என்ன.?










புலிகள் பல தலைவர்களை கொன்றார்கள், சக போராளிகளை கொன்றார்கள் என கூப்பாடு போடுபவர்கள் கூட அவர்கள் அப்பாவிகளை கொன்றதாக கூறுவதில்லை..




ஆனால் இப்போது ஸ்ரீலங்காவில் என்ன நடக்கிறது..அனைத்து உலக நாடுகளின் துணைகொண்டு அப்பாவிகளை அல்லவா அழித்து கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்களை புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என கூறுபவர்கள்.. பொதுமக்களின் மேல் ஸ்ரீலங்கா குண்டுகள் வீசுவதற்கு காரணம் கண்டுபிடிக்கிறார்கள். சரி ஓரு வாதத்திற்காக புலிகள் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்துவதாக கொண்டாலும் அதனால் பொது மக்களின் மேல் குண்டுகளை வீசுவதை நியாயபடுத்தலாமா..?

ஆனால், ஸ்ரீலங்கா அரசாங்கம் பொதுமக்களின் உயிர்களை மதிக்கவில்லை. மக்கள் மிகவும் குறுகிய நிலப்பரப்பில் செறிவாக இடம்பெயர்ந்து இருந்தபோதும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியிருந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது




விடுதலை புலிகளின் வெற்றி


என்வரையில் இது புலிகளின் வெற்றியாகவே கருதுகிறேன்.. உலக நாடுகளின் ஸ்ரீலங்காவிற்கு தமிழனுக்கு சம உரிமை கொடுக்கவேண்டும் என சொல்ல வைத்ததின் மூலம் புலிகள் தங்களின் போராட்டத்தில் பகுதி அளவு வெற்றி பெற்று விட்டார்கள் என்பதுதான் என் எண்ணம்..இந்த தற்போதைய பின்னடைவையும் நேர்கொண்டு வெகுவிரைவில் தங்களின் முழுவெற்றியையும் பெறுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் ( அங்க நாடாளுமன்றம்தானா.?!) ராஜ பக் ஷே வை தமிழர் உரிமைகள் பாதுகாக்கபடும் எனவும் சொல்ல வைத்ததை புலிகளின் இதுநாள் வரையிலான போராட்டத்தின் வெற்றியாகத்தான் நான் பார்க்கிறேன்..

புலிகள் தாங்கள் இதுவரையில் கையகபடுத்தியிருந்த நிலபகுதிகளை இழந்திருக்கலாம்..நம்பிக்கையை இழக்கவில்லை..மீண்டும் ஓயாத அலைகள் அடிக்கும்..இதையும் தாண்டி நிலபரப்புக்கள் கிடைக்கும்..அந்த நாளில் தமிழ் ஈழம் பிறக்கும்.




நாக்க புடுங்கிட்டு சாகலாம் போல இருக்கு பாஸ்


http://www.paristamil.com/tamilnews/?p=11924மேலே சொன்ன லிங்கில் போய் பார்த்த செய்தி

சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போரியல் குற்றங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை தேவை என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிலான நாடுகளும், இது அதற்கான தருணம் அல்ல என சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகளும் தெரிவித்திருக்கின்றன

சிறிலங்கா தொடர்பான விவாதத்தை சாதாரண கூட்டத்தில் விவாதிக்கலாம் என சிறிலங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் இந்தியாவுக்கான தூதுவர் தெரிவித்திருக்கின்றார்.
இந்தியாவுடன் இணைந்து சீனாவும், ரஸ்யாவும் சிறிலங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன.”

இந்த செய்தியை படிச்ச உடனே இந்தியனா பொறந்ததை நினைச்சி நாக்க புடுங்கிட்டு சாகலாம் போல இருக்கு பாஸ்