ஜக்குபாய் இணையத்தில் வெளியானது குறித்து நடைபெற்ற பிரஸ்மீட்டில் ரஜினிகாந்தும், ராதிகாவும் பேசிய வீடியோக்கள் இங்கே பகிர்ந்துள்ளேன்.
இதுகுறித்து பத்திரிக்கைகளிலும், பதிவுலகிலும் வந்த செய்திகள் வழக்கம்போல் வெட்ட பட்டு தங்களுக்கு சாதகமானதை மட்டும் எடுத்து வெளியிட்டு செய்தியை திரித்துள்ளனர்.
இணையத்தில் வெளியிட்டதாக கைது செய்யபட்டவரை சரத்குமார் விரட்டி சென்று பிடித்ததாக ராதிகா கூறுகிறார். இதெல்லாம் வெளிவந்த செய்திகளில் இல்லாது நான் அறியும் புது விஷயம். பதிவுலகிலும் ரஜினிகாந்த் பிரெஞ்சு படத்தின் காப்பி என கூறியுள்ளார் என்ற செய்தியை படித்து வியந்தேன். எப்படி இது போல ஓபனாக கூறமுடியும் என. ஆனால் வீடியோவை பார்த்ததும்தான் தெரிந்தது அதன் ஓன் லைனை மட்டும் எடுத்துள்ளோம் என வழக்கமான சினிமா மொழியில் கூறியுள்ளார்.
இதில் ரஜினி வழக்கம்போல் தேவையில்லாமல் ஜக்குபாய் தலைப்பை பற்றி ஓரு நெகட்டிவ் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். பின் திருட்டு விசிடியே சில தியேட்டர்காரர்களின் ஓத்துழைப்பில்தான் நடப்பதாகவும் அப்படி பட்ட தியேட்டர்காரர்களை கண்டறிந்து அவர்களுக்கு படம் குடுக்க கூடாது எனவும், அரசாங்கம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றில்லாமல் நாமும் இது போல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய ராதிகா ஓரு நண்பர் வந்து ஜக்குபாய் இணையத்தில் வெளியாகிவிட்டது என சொன்னவுடன் சரத்குமார் காரை எடுத்து போய் அது குறித்த ஒருவரை தேடி விரட்டி பிடித்ததாகவும் கூறினார்.
இன்னைக்கு இணைய வசதியும் ஆபிஸில் வேலையே குடுக்காத மேனேஜரும் இருக்க போய்தான் இந்த விஷயங்கள் தெரிய வருகிறது. அதனால்தான் உங்கள் பார்வைக்கும்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேச்சு
ராதிகாவின் பேச்சு
