Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, June 28, 2010

சுணங்கிய தேடல்கள்..!!




ஓரு


கிணற்று தவளையின்

கூச்சலைப் போல

என்

இதுவரையிலான வாதங்கள்.. !


தேடல்கள் சுணங்கி

மூளையை துருப்பிடிக்க

வைக்கும் என்னின்

இதுவரையிலான முயற்சியை

மூட்டை கட்டலாமா

என யோசனைகள்

விரிய ஓரு

விடியல் கிட்டுமென நம்பிக்கையுடன்..!!

 

Monday, June 14, 2010

உறங்கத்தான் உன்னினைவு விடுவதில்லை..




வானவில்
வாழ்க்கையொன்று வாழ்ந்தேன்….

வாழ்வின்
அர்த்தம் தெரியாமல்…

உறங்கத்தான்
உன்னினைவு விடுவதில்லை..

சுட்டாலும்
சூரியன் மறைவதில்லை..

எழுதபடாத
என்னிதயத்தில்
வடிக்கபட்ட காவியமே..!!!

என்
வாழ்வின் அர்த்ததை
தெளிய வைத்த ஓவியமே…!!!

காலம்
எழுதிய காதல்பக்கங்களில்
இப்போது நீயும் நானும்…………..

இம்மென்று
சொல் இறுதிவரை
இணை பிரியா திருப்போம்…!!!

இல்லையென்று
சொன்னால்
இடுகாட்டில் தான்என் உறக்கம்……

என்
இறுதிபயணம் இமயத்தில்
அல்ல உன் இதயத்தில்……………!!

என் அஸ்தி
கரையவேண்டியது கங்கையில்
அல்ல உன் கண்ணீரில்…………….!!

இரக்கம்
கொள் உறங்காத
என் இதயம் உன்னருகில்……………….!!!!!!



டிஸ்கி:  இது ஓரு மீள் பதிவு. முன்னாடி பல பேர் இதை கவனிக்காததால் திரும்பவும். நிறைய பேரின் கருத்துக்களை அறிய வேண்டி இப்போது...

Wednesday, February 10, 2010

தேவதை எனப்படுபவள் யாரெனில் தபுசங்கர் கவிதைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவளேதான்...

காதலர் தினத்துக்காக பதிவுலகமே கவிதைகளா எழுதி பரபரப்பா இருக்கறத பாத்த உடனே நானும் முடிவு பண்ணிட்டேன்.. நாமளும் கவிதை எழுதிரணும்டான்னு..   பேனாவை தொறந்து வச்சு வானத்தை பாத்த மேனிக்கு கண்ணை மூடிகிட்டு யோசிக்கறேன்..    ங்கொய்யால..  ஓண்ணுமே தோண மாட்டுக்கு... சரி என்னடா இது சத்திய சோதனைன்னு நினைச்சுகிட்டு... பெட்டிகுள்ள இருந்து பைஜாமால்லாம் போட்டு வைரமுத்து ரேஞ்சுக்கு நடந்து பாக்குறேன்... அப்பயும் கவிதை வருவனான்னு அடம் பிடிக்குது... பேசாம இதையெல்லாம் எண்டர் தட்டி கவிதைன்னு லேபிள் வைச்சுரலாமான்னு  (?!!!!)   யோசிச்சுகிட்டே பாத்தா தபுசங்கர் ஞாபகத்துக்கு வந்தார். அவர்தான் தேவதைகளின் கவிஞர் ஆச்சே..அவரோட கவிதையே எடுத்து போடலாம்னு முடிவு பண்ணி.. எனக்கு பிடித்த அவரின் சில கவிதைகளை பதிவிடுகிறேன்.  என்ஜாய் மக்கா..

-----------------------------------------------------------------

தபுசஙகரின் கவிதைகளில் எனை கவர்ந்தவைகள்


ஓரே ஓரு முறைதான்

எனினும்

உன் உன்னத நிழல்

என்மீது பட்ட போதுதான்

நான் ஓளியூட்டப்பட்டுக்

கவிஞனானேன்!



அற்புதமான காதலை

மட்டுமல்ல

அதை உன்னிடம்

சொல்ல முடியாத

அதி அற்புதமான

மெளனத்தையும்

நீதான் எனக்குத்

தந்தாய்


அழகான பொருட்களெல்லாம்

உன்னை நினைவு படுத்துகின்றன.

உன்னை நினைவுபடுத்துகிறவை எல்லாமே

அழகாகத்தான் இருக்கின்றன."




"உன்னிடம் பேச எவ்வளவு

ஆசைப்படுகிறேனோ அவ்வளவு

ஆசை உன்னிடம் பேசுபவர்களிடமும்

பேச வேண்டும் என்பதில்."




"நான் எது கேட்டாலும் வெட்கத்தையே

தருகிறாயே...வெட்கத்தைக் கேட்டால்

என்ன தருவாய்?."



காதல்தான்

நான் செய்யும் தவம்

என் கடுந்தவத்தைக் கலைத்து

என்ன வரம் வேண்டும் என்று

எந்த தெய்வமும்

என்னை கேட்காமலிருக்கட்டும்..

என் தவத்தைவிட

சிறந்ததாய்

எந்த வரத்தையும்

எந்த தெய்வத்தாலும்

தந்துவிட முடியாது!



'ஒரு நிமிடத்தில்


உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க

தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே' என்று

கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...


'நீ கூடத்தான்

ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக

ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!'


நீ எப்போதும்

தலையை குனிந்தே

வெட்கப்படுவதால்

உன் மதிப்புமிக்க

வெட்கத்தையெல்லாம்

இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க

முடிகிறது!


ஓரேயொரு முறை

கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி

வெட்கப்படேன்..


வெகுநாட்களாய்

உன் வெட்கத்தைத் தரிசிக்க

துடிக்கிறது

வானம்!


என்னை

உடைப்பதற்காகவே

என் எதிரில்

சோம்பல் முறிப்பவள் நீ


நீ யாருக்கோ செய்த

மெளன அஞ்சலியைப்

பார்தத்தும்..
.
எனக்கும்

செத்துவிடத் தோன்றியது



அன்று

நீ குடை

விரித்தற்காக்க்

கோபித்துக் கொண்டு

நின்றுவிட்ட

மழையைப்

பார்த்தவனாகையால்


இன்று


சட்டென்று மழை

நின்றால்

நீ எங்கோ குடை

விரிப்பதாகவே

நினைத்துக்

கொள்கிறேன்


உன் அழகு

வெட்டி வைத்திருந்த

ஆழ்துளைக் கிணற்றில்

விழுந்த சிறுவன் நான்



‘என்னை எங்கு பார்த்தாலும்

ஏன் உடனே நின்று விடுகிறாய்:’

என்றா கேட்கிறாய்

நீ கூட்த்தான்

கண்ணாடியை எங்கு பார்த்தாலும்

ஓரு நொடி நின்று விடுகிறாய்

உன்னைப் பார்க்க உனக்கே

அவ்வளவு ஆசை இருந்தால்

எனக்கு எவ்வளவு இருக்கும்




கரையில் நின்றிருந்த

உன்னைப் பார்த்ததும்

கத்திவிட்டன

கடல் அலைகள்...

'கோடான கோடி ஆண்டுகள்

எம்பி எம்பிக் குதித்து

கடைசியில் பறித்தே

விட்டோமா

நிலவை!' என்று.



உன்னிடம்

என் இதயத்தைத் தொலைத்துவிட்டதாக

எப்போதும் புலம்பியதில்லை நான்.

எனக்குள் இருந்த இதயத்தைக்

கண்டுபிடித்துக் கொடுத்தவளே நீதான்


பல நூற்றாண்டுகள் ஆகுமாமே

ஒரு வைரம் உருவாக.

நீ மட்டும் எப்படி

பத்தே மாதத்தில் உருவானாய்?


உன்னைக் கடித்த எறும்புகளெல்லாம்

'தேவதையைக் கடித்த எறும்புகள் சங்கம்' என்று

ஒரு சங்கம் வைத்திருக்கிறதாமே



நீ ஆற்றில் குளிப்பதை

நிறுத்திவிட்டு

வீட்டுக்குள் குளியலறை கட்டிக்

குளிக்க ஆரம்பித்தாய்.

வறண்டு போனது

ஆறு.



சின்ன வயதிலிருந்து என்னை

தொட்டுப் பேசும் பழக்கத்தை

நீ நிறுத்திக்கொண்ட போதுதான்

தெரிந்துகொண்டேன்...

நீ என்னைக் கட்டிக்கொள்ள

ஆசைப்படுவதை!

Saturday, June 13, 2009

கவுஜ….கவுஜ




வானவில்
வாழ்க்கையொன்று வாழ்ந்தேன்….

வாழ்வின்
அர்த்தம் தெரியாமல்…

உறங்கத்தான்
உன்னினைவு விடுவதில்லை..

சுட்டாலும்
சூரியன் மறைவதில்லை..

எழுதபடாத
என்னிதயத்தில்
வடிக்கபட்ட காவியமே..!!!

என்
வாழ்வின் அர்த்ததை
தெளிய வைத்த ஓவியமே…!!!

காலம்
எழுதிய காதல்பக்கங்களில்
இப்போது நீயும் நானும்…………..

இம்மென்று
சொல் இறுதிவரை
இணை பிரியா திருப்போம்…!!!

இல்லையென்று
சொன்னால்
இடுகாட்டில் தான்என் உறக்கம்……

என்
இறுதிபயணம் இமயத்தில்
அல்ல உன் இதயத்தில்……………!!

என் அஸ்தி
கரையவேண்டியது கங்கையில்
அல்ல உன் கண்ணீரில்…………….!!

இரக்கம்
கொள் உறங்காத
என் இதயம் உன்னருகில்……………….!!!!!!

- கண்ணா.

Saturday, April 25, 2009

ஈழத்து சிறுமி...









சாகக் கிடக்கிறான்
என் அண்ணன்
சிரித்து கொண்டே….

ஏன் சிரிக்கிறாய் ?
கேட்டதற்கு சொன்னான்.
நண்பர்கள் எல்லாம்
சிங்கள குண்டுகளால்
செத்து மடிகையில்

அவனின்
மார்பை துளைத்தது
இந்திய குண்டுகளாம்…

எனக்கு
விளங்க வில்லை
இந்தியாவில் இருந்து
காப்பாற்ற அல்லவா
வருவார்கள் என சொன்னான்…

சிரித்து கொண்டே
மரித்து போனான்…

என்னால் சிரிக்க
முடிய வில்லை .......................



ஈழம்..





ஈழம்..

மனிதன் மரத்து
போனதின் காயம்

மனிதம் மரித்து
போனதின் சாயம்…..

இரத்தங்களற்ற விடியலும்…..
யுத்தங்களற்ற பூமியும்
ஏன் ஈழனுக்கு இல்லை?

ஈழப் பிறவிகள் - என்ன
ஈனப் பிறவிகளா?

முன்னொரு காலத்தில்
மனிதன் என்றொரு
உயிரினம் இருந்ததாம்
இப்போது அவன்
எங்கே என்று
தெரிய வில்லை…

நாங்கள். யாரிடம்
போய் புலம்ப ……..

Friday, April 3, 2009

காயா ... ? காதலா ... ?


என்
இதய பூமியில்
ஏன்
இத்தனை எரிமலை ..... ?

என்
கரிசல் காட்டில்
ஏன்
இத்தனை விரிசல் ...... ?


இது
அவள் பேசிய
வார்த் தையின் வெப்பத்திலா .... ?

அல்லது
அவள் வீசிய
பார் வையின் உஷ்ணத்திலா .... ?

நாம்செய்த
வார்த்தைப் போர்களின்
வீர மரணங்களா இவை ..... ?

சகியே !
போதும் ! சகிக்க
வில்லை இந்த யுத்தம் ..

தவறுக்கு
தண்டனையாக
தஞ்சம் அடைகிறான் தலைவன் ..

மன்னிக்க
மாட்டாயா ? மதுரமே !
மண்டி இடும் மன்னவனை ..

உன்
இதயம் என்ன
இன்னுமா இளக வில்லை ... ?

இனியும்
தாங்காது இப்போதே
சொல் காயா .......... ? காதலா .......... ?

Thursday, April 2, 2009

தொலைந்து போனேன்..........!!!!!

ஏன்
உன்னை....
பார்த்து தொலைத்தேன்..............

உன்னை
பார்த்ததால்
தொலைந்து போனேன்................


- கண்ணா