Sunday, May 10, 2009

வீரபாண்டியன் IAS - வறுமையை தாண்டிய போராட்டம்...!! புரோட்டா கடையிலிருந்து ஓரு IAS.. !! சாதித்த சட்ட கல்லூரி மாணவர்...!!





வறுமையான சூழலில் வளர்ந்து , மாநகராட்சி பள்ளியில் படித்து, பகுதி நேரமாக புரோட்டா கடையில் வேலை பார்த்து தற்போது சட்ட கல்லூரியில் பி எல் இரண்டாமாண்டு படித்து வருகிறார். குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாக பள்ளி படிக்கும் போது பள்ளி முடிந்ததும் மாலை 4 மணி முதல் 11 மணி வரையில் புரோட்டா கடையில் வேலை பார்த்து வந்தார். தற்போது IAS தேர்வில் இந்திய அளவில் 53வது இடம். சாதனை.. !! மாபெரும் சாதனை... !!! முதலில் வாழ்த்துக்கள் வீரபாண்டியன் அவர்களே..




இந்த மாபெரும் சாதனைக்கு சொந்தகாரர் வீரபாண்டியன் மதுரை மண்ணின் மைந்தர். பத்தாம் வகுப்புவரை மதுரை செனாய் மாநகராட்சி பள்ளியில் படித்திருக்கிறார். பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றிருக்கிறார். சட்டகல்லூரியில் படித்து கொண்டே அண்ணா நகரில் ஓரு தனியார் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

வீரபாண்டியனின் அப்பா கணேசன் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். அம்மா பெருமாளக்காள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார். தம்பி வீரமணி சினிமாவில் உதவி ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து வருகிறார்.

வறுமையான குடும்ப சூழல், மாநகராட்சி பள்ளியில் படிப்பு, வறுமை காரணமாக மாலை 4 மணி முதல் 11 மணி வரை புரோட்டா கடையில் வேலை... இப்படி பட்ட சூழலை தாண்டி சாதனை படைத்தது பல இளைஞர்களுக்கு நம்பிக்கையை விதைத்திருக்கிறார். ஏழைகுடும்பத்தில் பிறந்து படிக்கும் போதே பெற்றோரின் கஷ்டத்தில் பங்கெடுத்து தடைகளை தகர்த்து வெற்றி பெற்றுள்ளார். நிச்சயமாக இவர் பதவிக்கு வந்தால் மேலும் பல நன்மைகள் செய்வார் என நம்பிக்கை பிறக்கிறது. விடாமுயற்சியால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு வீரபாண்டியன் ஓரு சிறந்த முன் உதாரணம்.


இதைவிட பெரிய ஆச்சர்யம் அவரின் பெற்றோர்களின் பேட்டி. வீரபாண்டியன் அவர்களின் தந்தை திரு. கணேசன் அவர்கள் ஓரு பத்திரிக்கை பேட்டியில் கூறியது

நானும் எனது மனைவியும் கல்வியறிவு பெறாதவர்கள். வீரபாண்டியன் சிறு வயதிலிருந்தே படிப்பில் முதலிடம் பெற்று வந்தார். அவர் IAS ஆக வேண்டும் என எண்ணினேன்

இவர் பாத்திர வியாபாரம் செய்து வருகிறாம். எத்தனை உயர்வு இவரின் பாத்திரம்.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..


டிஸ்கி.:


இந்த தேர்விற்கு மூன்று லட்சத்து 18 ஆயிரத்து 843 பேர் விண்ணப்பித்தனர். முதன்மை தேர்வெழுதிய ஓரு லட்சத்து 67 ஆயிரத்து 35 பேரில், 11 ஆயிரத்து 849 பேர் எழுத்து தேர்விற்கு தேர்வு செய்ய பட்டனர். அதில் 625 ஆண்கள், 166 பெண்கள் என மொத்தம் 791 பேர் சிவில் சர்வீஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் 96 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள். அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.




நண்பர் ஏகலைவன் வலைதளம் மற்றும் தினமலர் செய்திகளில் இருந்து தகவல்கள் திரட்டபட்டன. நன்றி ஏகலைவன், தினமலர்.

http://egalivan.blogspot.com/2009/05/blog-post_08.html

http://www.dinamalar.com/topnewsdetail.asp?News_id=1138&cls=row4&ncat=

Thursday, May 7, 2009

புர்ஜ் துபாய் - உலகின் மிக உயரமான கட்டிடம் வளர்ந்த விதம் படங்களுடன்.

உலகின் மிக உயரமான கட்டிடம் வளர்ந்த விதங்களை இங்கே படங்களாக தொகுத்துள்ளேன்... இதன் உயரம் தற்போது அறிவித்துள்ள படி 810 M. இந்த வருடம் செப்டம்பர் மாதம் எல்லா பணிகளும் முடிவடையும் என எதிர்பார்க்க படுகிறது. இதன் திறப்பு விழா துபாயின் சரிந்திருக்கும் பொருளாதார தேக்க நிலையை சற்றே நீக்கும் என நம்பி கொண்டிருக்கிறார்கள் துபாய்வாசிகள்.. ரியல் எஸ்டேட் துறையில் உள்ள படு மந்த நிலையும் சற்று நீங்கும் என நம்ப படுகிறது..

அதைபற்றியெல்லாம் அலச பல மேதைகள் இருப்பதால் நான் உங்களுக்கு படம் மட்டும் காட்டுறேன்...




எப்பிடி இருந்த இடம் .. எப்பிடி ஆயிட்டு ..
ஜனவரி 2005

ஏப்ரல் 2005


மே 2005
ஜூலை 2005
ஆகஸ்ட் 2005
செப்டம்பர் 2005
அக்டோபர் 2005

நவம்பர் 2005


டிசம்பர் 2005


பிப்ரவரி 2006மார்ச் 2006

ஏப்ரல் 2006
மே 2006
அக்டோபர் 2006
டிசம்பர் 2006
மே 2007

ஜீலை 2007
ஆகஸ்ட் 2007


ஜனவரி 2008
மார்ச் 2008
ஜீலை 2008

ஆகஸ்ட் 2008
டிசம்பர் 2008
ஜனவரி 2009






Saturday, May 2, 2009

ஜெயலலிதா... ஈழ ஆதரவாளரா?





தேர்தல் எத்தனையோ பல்டிகளையும், துரோகங்களையும் நிகழ்த்துகிறது… இந்த ஒற்றை வார்த்தைதான்.. கலைஞரை உண்ணாவிரதம் இருக்கவும், ஜெயலலிதாவை தனிஈழம் அமைத்து தருவேன் என சொல்லவும், வைகோ, ராமதாஸ், திருமாவை அணி மாறவும், இன்னும் என்னன்னவெல்லாம் செய்ய வைக்கிறது.. சரி விஷயத்திற்கு வருவோம்…

ஜெயலலிதாவின் திடீர் ஈழ ஆதரவு ஏன்? அதனால் ஏதும் பயன் உண்டா.? என்வரையில் ஜெவின் இந்த திடீர் ஆதரவு…சந்தேகமேயில்லாமல் தேர்தல் ஸ்டண்ட். மட்டுமே…இதுநாள் வரையில் ஈழம் என்பது இலங்கையின் உள் நாட்டு பிரச்சினை என சொல்லி வந்தவர் உண்ணாவிரதம் இருக்க செல்லும் போதே….. இன்னும் இது போல் எத்தனை பல்டிகள் அடிக்க போகிறாறோ என்றுதான் அனைவரும் நினைத்தனர்.. அதுதான் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது…

ஜெயலலிதா நினைத்ததை நடத்தி காட்டி விடுவார் என கூறிகொண்டு இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி…. எதை அவர் நடத்தி காட்டுவார். இப்பொது நினைத்ததையா? இல்லை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு நினைத்ததையா?

அதிமுக அணி 40 ல் வென்ற பின்னர் மத்தியில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தால்…… காங்கிரஸ் வரக்கூடாது என்ற உங்கள் எண்ணம் என்னாவது? அவர் அப்படி பல்டி அடிக்க மாட்டார் என யார் உத்திரவாதம் தருவார்கள் பல்டிக்கு பெயர் போன ராமதாஸ், வைகோ வா?

சரி.. பி ஜெ பி க்கு ஆதரவு அளிப்பாரா? அப்படியென்றால் நாம் நேரடியாக பி ஜெ பிக்கு வாக்களிப்புதுதானே முறை..

அண்ணன் வைகோ அவர்கள் சொல்வது போல், ஜெ பிரதம வேட்பாளர் என்றால்… ஏன் அவர் தேர்தலில் நிற்க வில்லை? தேர்தலில் நின்று நான் தான் பிரதம வேட்பாளர் என்றால் கொஞ்சம் நம்பும் படியாக இருக்கும்…

தேர்தலை முன்வைத்தாவது இவர்கள் எல்லாம் ஈழத்துக்கு ஆதரவாக பேசவாவது செய்கிறார்களே..அதுவரையில் மகிழ்ச்சி..

என்னை பொறுத்த வரையில், கலைஞர் உண்ணாவிரதம் இருந்து (?!) கனரக ஆயுத பிரயோகத்தை நிறுத்தியதை (??!!) போல ஒரு மேடை அமைத்து அதில் கலைஞர், ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, மற்றும் அனைத்து தலைவர்களும் உண்ணாவிரதம் இருந்து ஈழத்தில் போர்நிறுத்தம் செய்ய முன் வருவார்களா?

தனி ஈழம் அமைத்து தர தேர்தலுக்கு பின் முயற்சிகள் மேற்கொள்ளட்டும். தற்போது உடனடியாக போர் நிறுத்ததிற்கு இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளட்டும்…..

தமிழர்கள் இப்பிடி சேராமல் பிரிந்திருப்பதால்தான்… ஈழத்தில் தமிழன் செத்து கொண்டிருக்கிறான்..




கடைசி நேரம் வரையில் பதவியில் இருந்து பதவிசுகத்தை அனுபவித்து விட்டு இப்போது வெளியே வந்திருக்கும் ராமதாஸிக்கும், விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்கு பொடாவில் உள்ளே தள்ளிய ஜெயலலிதாவே..தனி ஈழம் அமைக்க உதவுவார் என நம்பும் அப்பாவி வைகோவுக்கும் இதை பற்றி பேச தகுதியே இல்லை..










விஜயகாந்த் இதுபற்றி வாயே திறக்காதது எனக்கு மிகபெரிய ஆச்சர்யமாய் இருக்கிறது… இரண்டு பெரிய கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்தாமல் இருக்கிறாறே? இவர் கல்யாண மண்டபத்தை இடித்ததற்கு கூப்பாடு போட்டாறே? ஈழ விஷயத்தில் ஊமையாய் இருக்கிறாறே? காங்கிரஸிடம் இருந்து பெட்டிகள் கைமாறியிருக்கலாமோ?

ஆனா இவங்க அடிக்கற லூட்டியெல்லாம் பார்த்தா.. இந்த சனியன் புடிச்ச எலக் ஷன் எப்படா முடியும் னு இருக்கு.