வறுமையான சூழலில் வளர்ந்து , மாநகராட்சி பள்ளியில் படித்து, பகுதி நேரமாக புரோட்டா கடையில் வேலை பார்த்து தற்போது சட்ட கல்லூரியில் பி எல் இரண்டாமாண்டு படித்து வருகிறார். குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாக பள்ளி படிக்கும் போது பள்ளி முடிந்ததும் மாலை 4 மணி முதல் 11 மணி வரையில் புரோட்டா கடையில் வேலை பார்த்து வந்தார். தற்போது IAS தேர்வில் இந்திய அளவில் 53வது இடம். சாதனை.. !! மாபெரும் சாதனை... !!! முதலில் வாழ்த்துக்கள் வீரபாண்டியன் அவர்களே..

இந்த மாபெரும் சாதனைக்கு சொந்தகாரர் வீரபாண்டியன் மதுரை மண்ணின் மைந்தர். பத்தாம் வகுப்புவரை மதுரை செனாய் மாநகராட்சி பள்ளியில் படித்திருக்கிறார். பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றிருக்கிறார். சட்டகல்லூரியில் படித்து கொண்டே அண்ணா நகரில் ஓரு தனியார் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
வீரபாண்டியனின் அப்பா கணேசன் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். அம்மா பெருமாளக்காள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார். தம்பி வீரமணி சினிமாவில் உதவி ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து வருகிறார்.
வறுமையான குடும்ப சூழல், மாநகராட்சி பள்ளியில் படிப்பு, வறுமை காரணமாக மாலை 4 மணி முதல் 11 மணி வரை புரோட்டா கடையில் வேலை... இப்படி பட்ட சூழலை தாண்டி சாதனை படைத்தது பல இளைஞர்களுக்கு நம்பிக்கையை விதைத்திருக்கிறார். ஏழைகுடும்பத்தில் பிறந்து படிக்கும் போதே பெற்றோரின் கஷ்டத்தில் பங்கெடுத்து தடைகளை தகர்த்து வெற்றி பெற்றுள்ளார். நிச்சயமாக இவர் பதவிக்கு வந்தால் மேலும் பல நன்மைகள் செய்வார் என நம்பிக்கை பிறக்கிறது. விடாமுயற்சியால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு வீரபாண்டியன் ஓரு சிறந்த முன் உதாரணம்.
இதைவிட பெரிய ஆச்சர்யம் அவரின் பெற்றோர்களின் பேட்டி. வீரபாண்டியன் அவர்களின் தந்தை திரு. கணேசன் அவர்கள் ஓரு பத்திரிக்கை பேட்டியில் கூறியது
வீரபாண்டியனின் அப்பா கணேசன் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். அம்மா பெருமாளக்காள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார். தம்பி வீரமணி சினிமாவில் உதவி ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து வருகிறார்.
வறுமையான குடும்ப சூழல், மாநகராட்சி பள்ளியில் படிப்பு, வறுமை காரணமாக மாலை 4 மணி முதல் 11 மணி வரை புரோட்டா கடையில் வேலை... இப்படி பட்ட சூழலை தாண்டி சாதனை படைத்தது பல இளைஞர்களுக்கு நம்பிக்கையை விதைத்திருக்கிறார். ஏழைகுடும்பத்தில் பிறந்து படிக்கும் போதே பெற்றோரின் கஷ்டத்தில் பங்கெடுத்து தடைகளை தகர்த்து வெற்றி பெற்றுள்ளார். நிச்சயமாக இவர் பதவிக்கு வந்தால் மேலும் பல நன்மைகள் செய்வார் என நம்பிக்கை பிறக்கிறது. விடாமுயற்சியால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு வீரபாண்டியன் ஓரு சிறந்த முன் உதாரணம்.
இதைவிட பெரிய ஆச்சர்யம் அவரின் பெற்றோர்களின் பேட்டி. வீரபாண்டியன் அவர்களின் தந்தை திரு. கணேசன் அவர்கள் ஓரு பத்திரிக்கை பேட்டியில் கூறியது

“நானும் எனது மனைவியும் கல்வியறிவு பெறாதவர்கள். வீரபாண்டியன் சிறு வயதிலிருந்தே படிப்பில் முதலிடம் பெற்று வந்தார். அவர் IAS ஆக வேண்டும் என எண்ணினேன்”
இவர் பாத்திர வியாபாரம் செய்து வருகிறாம். எத்தனை உயர்வு இவரின் பாத்திரம்.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..
டிஸ்கி.:
இந்த தேர்விற்கு மூன்று லட்சத்து 18 ஆயிரத்து 843 பேர் விண்ணப்பித்தனர். முதன்மை தேர்வெழுதிய ஓரு லட்சத்து 67 ஆயிரத்து 35 பேரில், 11 ஆயிரத்து 849 பேர் எழுத்து தேர்விற்கு தேர்வு செய்ய பட்டனர். அதில் 625 ஆண்கள், 166 பெண்கள் என மொத்தம் 791 பேர் சிவில் சர்வீஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் 96 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள். அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
நண்பர் ஏகலைவன் வலைதளம் மற்றும் தினமலர் செய்திகளில் இருந்து தகவல்கள் திரட்டபட்டன. நன்றி ஏகலைவன், தினமலர்.
http://egalivan.blogspot.com/2009/05/blog-post_08.html
http://www.dinamalar.com/topnewsdetail.asp?News_id=1138&cls=row4&ncat=
http://egalivan.blogspot.com/2009/05/blog-post_08.html
http://www.dinamalar.com/topnewsdetail.asp?News_id=1138&cls=row4&ncat=































