Saturday, June 13, 2009

கவுஜ….கவுஜ




வானவில்
வாழ்க்கையொன்று வாழ்ந்தேன்….

வாழ்வின்
அர்த்தம் தெரியாமல்…

உறங்கத்தான்
உன்னினைவு விடுவதில்லை..

சுட்டாலும்
சூரியன் மறைவதில்லை..

எழுதபடாத
என்னிதயத்தில்
வடிக்கபட்ட காவியமே..!!!

என்
வாழ்வின் அர்த்ததை
தெளிய வைத்த ஓவியமே…!!!

காலம்
எழுதிய காதல்பக்கங்களில்
இப்போது நீயும் நானும்…………..

இம்மென்று
சொல் இறுதிவரை
இணை பிரியா திருப்போம்…!!!

இல்லையென்று
சொன்னால்
இடுகாட்டில் தான்என் உறக்கம்……

என்
இறுதிபயணம் இமயத்தில்
அல்ல உன் இதயத்தில்……………!!

என் அஸ்தி
கரையவேண்டியது கங்கையில்
அல்ல உன் கண்ணீரில்…………….!!

இரக்கம்
கொள் உறங்காத
என் இதயம் உன்னருகில்……………….!!!!!!

- கண்ணா.

40 comments:

சிறகுகள் said...

இரசிச்சி எழுதிருக்கிங்க போல..கவிஞரே...
படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்...

Unknown said...

அருமை:)))

வினோத் கெளதம் said...

என்னது இது ஒழுங்கா தானே போய்ட்டு இருந்துச்சு..
நல்லா தான் எழுது இருக்கீங்க..
யாரு அந்த பிகரு..

Vishnu - விஷ்ணு said...

பயங்கர சோகமால இருக்கீங்க போல.

Suresh said...

உனக்குள் ஒரு கவிஞன் இருக்கான் டா மச்சான் கவிதை கவிதை...

சரி சொன்ன மாதிரி பின்னூட்டம் போட்டாச்சு ஓழுங்கா 10 டாலர் அனுப்பி வை சாமி டாலர் இல்லைமா ;) அமெரிக்கா யார்க்கா இல்லை டா அமெரிக்கன் டாலர்

Suresh said...

//உறங்கத்தான்
உன்னினைவு விடுவதில்லை..

சுட்டாலும்
சூரியன் மறைவதில்லை/

ஹா ஹ அருமை ஒரு ஒரு வரியும் வைரத்தின் மின்னலகள்

குறிப்பா

//என்
இறுதிபயணம் இமயத்தில்
அல்ல உன் இதயத்தில்……………!!//

எப்ப மச்சான் சொல்லு வந்துவிடுவோம்

சென்ஷி said...

நல்லாயிருக்கு கண்ணா!

அது ஒரு கனாக் காலம் said...

கண்ணா , சும்மா பூந்து விளையாடுங்க ... நல்லா இருக்கு கவிதை

கலையரசன் said...

//என்
வாழ்வின் அர்த்ததை
தெளிய வைத்த ஓவியமே…!!!//

சூப்பரோ சூப்பர்!

கலையரசன் said...

//இம்மென்று
சொல் இறுதிவரை
இணை பிரியா திருப்போம்…!!!

எப்பிடிங்க இதலாம்?

கலையரசன் said...

//என்
இறுதிபயணம் இமயத்தில்
அல்ல உன் இதயத்தில்……!!//

அருமைய்யா... அருமை!

கலையரசன் said...

//என் அஸ்தி
கரையவேண்டியது கங்கையில்
அல்ல உன் கண்ணீரில்….!!//

அட்டகாசமான வரிகள்...

கலையரசன் said...

//இரக்கம்
கொள் உறங்காத
என் இதயம் உன்னருகில்…!//

பாராட்ட வார்தைகள் வரலைங்க...
அமர்களமான கவுஜ...

கண்ணா.. said...

ஏண்டா கலை,

நீ எப்படா சக்கரை சுரேஷ் கூட சேர்ந்த...

நான் போட்ட எல்லா வரியையும் கொஞ்சம் கொஞ்சமா காப்பி பண்ணி...ஓரு டிஃபால்ட் கமெண்ட் போடுறியே....

கண்ணா.. said...

@ சிறகுகள்

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல

கண்ணா.. said...

//என் பக்கம் said...
அருமை:)))//

வாங்க பிரதீப்

வருகைக்கு நன்றி

நீங்க அருமைன்னு சொன்னதுல உள்குத்து ஏதும் உண்டா.?

கலையரசன் said...

இரக்கம் கொள்...
முதல்ல நீஎங்க மேல
இரக்கம் காட்டுடா..

ஒரு ஒரு வரியா
எடுத்து போட்டு..
அருமை,
அட்டகாசம்,
அமர்களம்,
அழகுன்னு எழுதலாமுன்னுதான்
பார்த்ததேன்.. டைம் இல்லாததுனால,
தப்பிச்சே!

அதுக்குதான் தனியா ஒரு குரூப் இருக்குதே..
நீயுமாடா? திடீர்ன்னு எங்கிருந்து வந்துசுடா
இந்த கவித பாசம்!
எனக்கு ராசிபலன்ல போட்டுருந்தான்
பயம் ன்னு, இப்பதான் அதுக்கு
அர்த்தம் புரியுது!

நல்லா கிளப்பூராங்கையா பீதிய!!

கண்ணா.. said...

//வினோத்கெளதம் said...
என்னது இது ஒழுங்கா தானே போய்ட்டு இருந்துச்சு..
நல்லா தான் எழுது இருக்கீங்க..
யாரு அந்த பிகரு..//

வாங்க வினோத்

யாரு அந்த பிகருன்னு கேட்ட பாரு....நீதான்டா உண்மையான தமிழன்.. மத்தவங்கெல்லாம் நைஸா சைட் அடிச்சிட்டு கமெண்ட் போடாம போறாங்க ..


வருகைக்கு நன்றி

கண்ணா.. said...

// விஷ்ணு. said...
பயங்கர சோகமால இருக்கீங்க போல.//

வாங்க விஷ்ணு

வருகைக்கு நன்றி..

சோகமெல்லாம் ஒன்னும் இல்ல பாஸ்...இந்த மாதிரி ஓரு கவிதை எழுதியும் பிகர் மடியலேன்னா...நாங்கெல்லாம் வேற பிகரை பாக்க போய்கிட்டே இருப்போம்.....

கண்ணா.. said...

@ சுரேஷ்

//என்
இறுதிபயணம் இமயத்தில்
அல்ல உன் இதயத்தில்……………!!//

எப்ப மச்சான் சொல்லு வந்துவிடுவோம்//

அதான பாடை கட்றதுக்கு ரெடியா இருப்பீங்களே.....

என்னா நல்லெண்ணம்...

வருகைக்கு நன்றி மச்சான்..

கண்ணா.. said...

//சென்ஷி said...
நல்லாயிருக்கு கண்ணா!//

வருகைக்கு நன்றி அண்ணா

கண்ணா.. said...

//அது ஒரு கனாக் காலம் said...
கண்ணா , சும்மா பூந்து விளையாடுங்க ... நல்லா இருக்கு கவிதை//

வாங்க சுந்தர் சார்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல

கண்ணா.. said...

//கலையரசன் said...
இரக்கம் கொள்...
முதல்ல நீஎங்க மேல
இரக்கம் காட்டுடா..//



முதல்ல எதா இருந்தாலும் தமிழிஷ் தமிழ் மணத்துல ஓட்டை போட்டுட்டு பேசுடா............

உங்களுக்கெல்லாம் ஒட்டு போடுங்க...ஒட்டு போடுங்க ன்னு சொல்லி சொல்லியே நான் டயர்ட் ஆயிட்டேன்டா

Suresh said...

//ஏண்டா கலை,

நீ எப்படா சக்கரை சுரேஷ் கூட சேர்ந்த...

நான் போட்ட எல்லா வரியையும் கொஞ்சம் கொஞ்சமா காப்பி பண்ணி...ஓரு டிஃபால்ட் கமெண்ட் போடுறியே....//

டேய் டைம் எடுத்து புடிச்ச கவிதை வரிக்கு கமெண்டு போட்டா

!@#!@#!#

நீ என்ன டா சொல்லுறா :)

டிஃபால்ட்டா

சரி இனிமே நல்லாவே இல்லை சொல்லுறேன் அட பாவி..

உன் கவிதைக்கு ;) தனி பாராட்டு விழா எடுக்க சொல்லி இருக்கேன்..

;) கலை இவனுமா இந்த லிஸ்டில் அதுக்கு கவிஞர்கள் கூருப் இருக்கும் போது நீ மொக்கை போட்டு இருக்கலாம் ;)

அவன் அவன் லைனஸ் கூட காப்பி பண்ணாம ஒரு வரியில் அருமை, சூப்பர், கலக்கல். இப்படியா போடனும் எதுக்கு டா கவிதை நமக்கு

Suresh said...

தமிழர்ஸ் தமிஷில் வோட்டு போட்டாசு

கண்ணா.. said...

// Suresh said...

டேய் டைம் எடுத்து புடிச்ச கவிதை வரிக்கு கமெண்டு போட்டா

!@#!@#!#

நீ என்ன டா சொல்லுறா :)

டிஃபால்ட்டா

சரி இனிமே நல்லாவே இல்லை சொல்லுறேன் அட பாவி..//

சரி மச்சான் லூஸுல விடு..

வழக்கமா நீ வந்தேன்னா குறைஞ்சது 10 கமெண்டாவது போடுவ...

கடைசி பதிவுக்கு நீ வரவே இல்லை...அதுக்கு முந்தின பதிவிலயும் ரெண்டு கமெண்டோட போய்ட்ட..

அதான் கொஞ்சம் கலாய்ச்சேன்..

நீ வழக்கம் போல அடிச்சு ஆடு

கண்ணா.. said...

//Suresh said...
தமிழர்ஸ் தமிஷில் வோட்டு போட்டாசு
//

மச்சான் தமிழர்ஸ்ல லிங்க் பண்ணுறதுகுள்ள ரெண்டு மூணு தடவை எரர் மெஸேச் வருதுடா

ஏதும் ஈஸி வழி இருக்கா..?

கண்ணா.. said...

// Kanna said...
//Suresh said...
தமிழர்ஸ் தமிஷில் வோட்டு போட்டாசு
//

#$#$%#$#%$!$$*&

இன்னும் நீ தமிழிஷ்ல ஓட்டு போடவே இல்லை.. நான் இப்பதான் செக் பண்ணினேன்...

இன்னும் ஓத்த ஓட்டோடையே நிக்குடா..... :(

Suresh said...

சாரி மச்சான் லாகின் செய்ய போய் மறந்துட்டேன் 2 ஆகிடுச்சு..

தமிழர்ஸில் என்ன பிரச்சனை லிங்க் செய்ய உன் பதிவில் இருந்தே நீ சம்பிட் கொடுக்கலாமே

உன் பதிவு படிச்சிடுவேன் என்ன ஆபிஸ்ல பய புள்ள கொஞ்சம் வேலை ;) அதான் கும்ம முடியவில்லை உன் மெயிலில் இருந்து suresh.sci@gmail.com மெயில் செய் அடிக்கடி பேசிப்போம் மெயிலில்..

Suresh said...

//மச்சான் தமிழர்ஸ்ல லிங்க் பண்ணுறதுகுள்ள ரெண்டு மூணு தடவை எரர் மெஸேச் வருதுடா
/

என்ன எர் மெசேஜ்னு சொல்லு எனக்கு ஒன்னும் பிரச்ச்னை இல்லையே..

ஸீரின் சாட் அனுப்பு, அவ்ங்க சைட்டில் கொஞ்சம் வேலை நடக்குது அதான் கொஞ்சம் மாத்திட்டு இருக்காங்க போல நானும் பார்த்தேன் அந்த இடுகைகள் அளவை பெரிசு செய்து இருக்காங்க

வெற்றி-[க்]-கதிரவன் said...

கவிதா கவிதா ச்சி கவிதை கவிதை

Unknown said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ்

என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

தமிழ் said...

அருமையாக இருக்கிறது

kishore said...

சீக்ரம் வீட்ல சொல்லி கல்யாண ஏற்பாடு பண்ணனும்...

//என் அஸ்தி
கரையவேண்டியது கங்கையில்
அல்ல உன் கண்ணீரில்…………….!!//
அருமையான வரிகள்...

கலக்குங்க கவிஞரே ...

Unknown said...

தமிழ்10 gadget சரிசெய்யப்பட்டு விட்டது , இப்போது முயற்சி செய்து பாருங்கள்

தீப்பெட்டி said...

நல்லாயிருக்கு கண்ணா..

இன்னும் நிறய எழுதுங்க..

Unknown said...

அழகான கவிதை கண்ணா. வாழ்த்துக்கள்.

கண்ணா.. said...

நன்றி பித்தன்,

நன்றி தமிழினி,

நன்றி திகழ்மிளிர்,

நன்றி கிஷோர்,

நன்றி தீப்பெட்டி@கணேஷ்குமார்,

நன்றி பாஸ்கர்,

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்..

இணையத்தில் உளாவ நேரம் கிடைக்காத காரணத்தால் ஏற்பட்ட இந்த தாமதமான நன்றி அறிவிப்பிற்கும், ஒற்றை வரி நன்றிக்கும் என்னை மன்னித்து கொள்ளவும்

Joe said...

கவிதை நல்லா இருக்கு, இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்.

படம் அதை விட நல்லா இருக்கு.

கண்ணா.. said...

நன்றி ஜோ

வருகைக்கும், கருத்திற்கும்..நன்றி

//கவிதை நல்லா இருக்கு, இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்.

படம் அதை விட நல்லா இருக்கு//


அடுத்த கவிதையில் இன்னும் சிரத்தை எடுத்து கொள்கிறேன்.

நன்றி