Monday, June 1, 2009

அமீரகத்தில் பதிவர்கள் சாதாரண செயற்குழு கூட்டம் ..அழைப்பு - ஜுன் 5, 2009




அமீரகத்தில் பதிவர்கள் மாநாடு (அதாங்க பதிவர்கள் சந்திப்பு) இந்த ஜுன் மாதம் 3வது அல்லது 4வது வாரம் நடத்திவிடலாம் என்று முடிவெடுத்து..ஆசிப் அண்ணாச்சி ஊரிலிருந்து வந்தவுடன் இடம்முடிவு செய்து அறிவிப்பு வெளியிடபடும்..

அந்த மாநாடை சிறப்பாக நடத்தி காட்ட பதிவர்களின் சாதாரண செயற்குழு கூட்டம் வரும் ஜுன் 5ம் தேதி வெள்ளிகிழமை “சிம்ரன் ஆப்ப கடையின்” முன் உள்ள கராமா பார்க்கில் கூடவிருக்கிறது...

இதில் பல்வேறு அதிமுக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றவிருப்பதால் வசதிபடும் பதிவர்கள் கலந்து கொள்ளவேண்டும் என அழைப்பு விடுக்கபடுகிறது..

அமீரகத்திலிருந்துதான் அதிக அளவில் அனானிகள் உலவுவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகையால் சிறப்பு தீர்மானமாக கோடிகணக்கில் குவிந்துள்ள அனானிகளை அழைக்கவும் என்னிடம் ஓரு திட்டம் உள்ளது. அதை இப்போது சொல்ல மாட்டேன். சொன்னால் சென்னை மற்றும் மதுரை பதிவர்கள் காப்பி அடித்து விடுவார்கள்.. அதனால் எனக்கு ஓட்டு போடுங்கள் ..(வாழ்க விஜயகாந்து..)




நாள்: ஜுன் 5ம் தேதி, வெள்ளிகிழமை

இடம்: கராமா பார்க்

நேரம்: மாலை 6 மணி முதல் 8 மணி வரை



மேலதிக விபரங்களுக்கு

முதல்வர் : அய்யனார் - 050 6940046

துணைமுதல்வர் : குசும்பன் @ சரவணன் - 050 2664131

அஞ்சாநெஞ்சன் : கலையரசன் - 050 7174360

முரட்டு தொண்டன் : கண்ணா @ வெங்கடேஷ் - 050 9253270

துபாய் அஜீத் : வினோத் - 050 4382662
மிஸ்டு கால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு

என்னுடைய நம்பருக்கு மிஸ்டு கால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு உலக பொருளாதார சரிவு என் அலைபேசியிலும் எதிரொலித்த காரணத்தால் கடந்த ஆறு மாத காலமாக என் மொபைல் பேலன்ஸ் -2.45 dhs ஆக உள்ளது. இதை எனக்கு வேண்டாதவர்கள் யாரோ எடிசாலட் கம்பெனிக்கு போட்டு கொடுத்து விட்டதால் அவர்கள் என் மொபைலில் இருந்து அவுட்கோயிங்கிற்கு தடை விதித்துள்ளனர். ஆறுமாதமாக அவுட் கோயிங் இல்லாமல் எப்படி என அப்பாவிகளாக கேட்பவர்களுக்கு ஆபிஸர் போனை ஆட்டையை போட்டு அவுட்கோயிங் செய்வது எப்படி என் சிறப்பு வகுப்புகள் எடுக்கபடும் எனவும் தெரிவித்து கொள்கிறேன்.




டிஸ்கி

இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.. யார் மனதையாவது புண்படுத்தினால் மன்னித்தருளவும்

42 comments:

koothanalluran said...

5ம் தேதிக்குள் துபாய்க்கு ஆசிப் வந்திடுவாரா. நாங்கள் அவ்வளவு சீக்கிரம் அவரை விட்டுடுவோமா ?

Unknown said...

உள்ளேன் ஐயா......

//சிம்ரன் ஆப்ப கடையின்” முன் உள்ள கராமா பார்க்கில் கூடவிருக்கிறது...//

ஆப்ப கடையின் உள்ளே கிடையதா.....

சென்ஷி said...

சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள் நண்பரே!

கலையரசன் said...

ஆப்ப கடையின் உள்ளே போகலாம்..
பிரதீப்தான் காசு கொடுக்கனும், பரவாயில்லையா?

நன்றி முரட்டு தொண்டா! பதிவர் சந்திப்புக்கு உன்னுடைய விடாமுயற்ச்சியே காரணம்!
வாழ்த்துக்கள்!!

வாழ்த்து எதுக்கு தெரியுமா, நையிட் எனக்கு வாங்கிதரபோற டிபனுக்குதான்!
(நான் மதியம்தான் "குறவன்", நையிட் "ஜென்டில்மேன்")

ALIF AHAMED said...

கராமா பார்க்ல பிகரே இருக்காதே.. :(

ALIF AHAMED said...

சென்ஷி கூறியது...
சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள் நண்பரே
//


ரீப்பிட்டேய்ய்

வினோத் கெளதம் said...

கண்ணா இப்ப தான் ஒட்டகத்துக்கு தண்ணி வச்சிட்டு வந்தேன்..முடிந்த அளவில் செயற்குழுவில் பங்கேற்க விழைக்கிறேன்..

அப்புறம் அந்த ஆசிட் முட்டை, சோடா பாட்டில் இது எல்லாம் ரெடி பண்ணி வச்சுர்ருங்க..

நானும் ஒரு கட் அண்ட் பேஸ்ட் பதிவு போட்டுறேன்..

குசும்பன் said...

ரைட்டு வந்துவிடுவோம்

அது ஒரு கனாக் காலம் said...

நானும் ஆஜர் ...

அக்னி பார்வை said...

சந்திப்பு வெற்றி மெற வாழ்த்துக்கள், மறக்காமல் அனைவரும் அவரவர் பார்வையை பதிவிடவும்...

மறக்காமல் மொக்கை போட்டு பதிவர்கள் மானத்தை காப்பாற்றவும்

அபி அப்பா said...

எலேய் தம்பி அவசரபட்டு பதிவு ஏன் போட்டாய்!

நாங்க் தான் பேசிகிட்ட்டு இருக்கோமே! இராகவன் நைஜீரியா அண்ணா தன் மனைவி பையனோட நம்ம எல்லாரையும் பார்க்க ஜூன் 21ம் தேதி இங்க வர்ரார்!
\
தவிர கோபி போன்றவர்களுக்கு அந்த வெள்ளி பொருளாததர ரீதியா சரியா வரலை!

க்கொஞ்சம் பொருமை கண்ணா!

கண்ணா.. said...

//அபி அப்பா கூறியது...
எலேய் தம்பி அவசரபட்டு பதிவு ஏன் போட்டாய்!

நாங்க் தான் பேசிகிட்ட்டு இருக்கோமே! இராகவன் நைஜீரியா அண்ணா தன் மனைவி பையனோட நம்ம எல்லாரையும் பார்க்க ஜூன் 21ம் தேதி இங்க வர்ரார்!
\
தவிர கோபி போன்றவர்களுக்கு அந்த வெள்ளி பொருளாததர ரீதியா சரியா வரலை!

க்கொஞ்சம் பொருமை கண்ணா!//

வாங்க அபி அப்பா,

வருகைக்கும் கருத்திற்கும் உரிமைக்கும் நன்றிகள் பல

நான் இதில் முன்னமே குறிப்பிடு இருக்கிறேன் ..பதிவர் சந்திப்பு ஆசிப் அண்ணாச்சி வந்தபின் முடிவு செய்யலாம் என்று..

வரும் 26ம் தேதி பிரபல பதிவர் (வேற யாரு நாந்தான்) ஊருக்கு செல்லவிருப்பதாலும், அதற்கு முன் கழக கண்மணிகளை சந்திக்க வேண்டியும்தான் இந்த அவசரகுழு கூட்டம்..

இது குறித்து இன்று காலை அய்யனார் மற்றும் சரவணனிடமும் கலந்துதான் இதை அறிவித்தேன்..

என்னிடம் உங்கள் அலைபேசி எண் இல்லை...அதனால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை...

தகவல் தொடர்பு பிழைக்கு மன்னிக்கவும்.

kishore said...

வாழ்த்துக்கள் கண்ணா... சீக்கிரம் உங்க பார் சந்திப்பை... ச்சே.. பதிவர் சந்திப்பை பற்றிய பதிவை எதிர் பார்கிறேன்...

ஊருக்கு வரும்போது.. சிம்ரன் ஆப்ப கடைல ஒரு செட் ஆப்பம் வாங்கிட்டு வாங்க... என்னது ஊருக்கு வருவதற்குள் கெட்டு போய்டுமா?
பரவாஇல்ல கண்ணா... எனக்கு சிம்ரன் ஆப்... ச்சே.. சிம்ரன் கடை ஆப்பம் தான் வேணும்ம்....

- இரவீ - said...

அமீரக பதிவர்கள் சந்திப்புக்கு முயற்சித்த அனைவருக்கும் எனது பாராட்டுகள் மற்றும் நன்றி. குறிப்பாக எனக்கு இதுகுறித்து தெரிவித்த 'கலையரசன்' அவர்களுக்கு special நன்றி.

முதல் சந்திப்பு வெற்றி மேல் வெற்றி பெற இதயம் கனிந்த வாழ்த்துகள் (வெளியிலிருந்து ஆதரவு :) )
ஜுன் 21க்கு பிறகு நடக்கும் சந்திப்பில் - கண்டிப்பா கைதட்ட வந்துடுறேன்.

சந்திப்பு வெற்றிபெற மீண்டும் வாழ்த்துக்கள்.

குப்பன்.யாஹூ said...

all the very best

கண்ணா.. said...

@ koothanalluran

வருகைக்கு நன்றி... ஆசிப் அண்ணாச்சி 5ம் தேதி வரமாட்டார்.. அவர் வந்த பிறகுதான் பதிவர் சந்திப்பு..இது சும்மா லூ.ல்லாயிக்கு...

@ என் பக்கம்

நன்றி பிரதீப்.. ஆப்பகடைக்கு உள்ளே செல்லும் அளவிற்கு நிதிபற்றாகுறை இருப்பதால்..சந்திப்பின் போது உண்டியல் ஏந்தும் ஐடியாவும் இருக்கிறது..

நிதி குறைந்தவர் ஃபில்ஸ் தாரீர்..
நிதி மிகுந்தவர் திர்ஹாம்ஸ் தாரீர்

@ சென்ஷி,

நன்றி தல...வரமுயற்சி பண்ணுங்க தல..
இதுக்கு வரலன்னாலும் அடுத்து வரும் 21 அல்லது 26ம் தேதி நடக்க இருக்கும் சந்திப்பிற்கு கண்டிப்பா வந்துரணும்... தல

@ கலையரசன்

நன்றி மாப்பு..பிரதீப்க்கு சொன்னதை நீயும் படி...

@ மின்னுது மின்னல்

நன்றி.
நன்றி தல...வரமுயற்சி பண்ணுங்க தல..
இதுக்கு வரலன்னாலும் அடுத்து வரும் 21 அல்லது 26ம் தேதி நடக்க இருக்கும் சந்திப்பிற்கு கண்டிப்பா வந்துரணும்... தல

@ வினோத்

நன்றி மச்சான்..
நீதான்டா இதை நடத்தனும்னு ஆரம்பித்து வைத்தவன்..அதுக்கு ஸ்பெஷல் நன்றிகள்..

@ குசும்பன்

நன்றி தல..
நீங்கதான தல துணைமுதல்வர்..நீங்க இல்லாமலா..

@ அது ஓரு கனாக் காலம்

நன்றி...
உங்களை சந்திக்க ஆவலாய் உள்ளேன்..

@ அக்னி பார்வை

நன்றி..
மொக்கை போட்டு கிடப்பதே எம் பணி

@ அபி அப்பா

நன்றி அண்ணா..
பதிவர் சந்திப்பு நடக்கும் நாள் மற்றும் இடம் இந்த சந்திப்பில் முடிவு செய்து விடுவோம்.

@ deen

ஸ்மைலிக்கு நன்றிகள் பல

@ கிஷோர்

வாடா மச்சான்..
சிம்ரன் ஆப்பமா வேணும் உனக்கு..இரு .. வினோத் கிட்ட சொல்லி உங்க வீட்டுல சொல்லி ஆப்பு வைக்க சொல்லுறேன்..

@ rave(இரவீ)

நன்றிகள்..
அந்த தேதியும் முடிவு செய்து அறிவிக்கபடும்..

@ குப்பன்_யாஹு

வாழ்த்திற்கு நன்றிகள்

Suresh said...

வாழ்த்துகள் மச்சான் கலக்கலா நடக்க வாழ்த்துகள், என் ஹீரோ உங்க ஊரு தாதாவிடம் சொல்லிட்டேன்.. வினோத் நான் வரனும் என்று பிளைட் டிக்கெட் எல்லாம் எடுத்து கம்பெல் பன்னினான்..

சரி டிக்கெட் அனுப்பு வருகிறேன் என்று

Suresh said...

உங்களுக்கு ஜோ பதிவில் பதில் சொல்லியாச்சு மச்சான் ஜோ அந்த பதிவர் சந்திப்பு வந்து உன்னை கவனிக்க போறாராம்..

Suresh said...

//அழைக்கவும் என்னிடம் ஓரு திட்டம் உள்ளது. அதை இப்போது சொல்ல மாட்டேன். சொன்னால் சென்னை மற்றும் மதுரை பதிவர்கள் காப்பி அடித்து விடுவார்கள்./

நடக்கட்டும்

Suresh said...

முரட்டு தொண்டனா அப்பா ஸாமி பயமா இருக்கு இந்த முரட்டு காளைய எப்போ பாக்குறது ;)

அஞ்சாநெஞ்சன் நம்ம நண்பன்..;)

முதல்வர் துனைமுதலவருக்கும் வாழ்த்துகள்

Suresh said...

மிஸ்டு கால் சூப்பர் மேட்டர்..

ஆமா வர வர எல்லாரும் ஏதாச்சும் சொல்லிட்டு இதுல டிஸ்கி போட்டுகறாங்க நல்லவங்க..:-)

நம்ம வினோத் இல்லையா

Suresh said...

வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

Something not related to this post:


Regarding your followers list.

Change your blog settings from Tamil to English.

Hope this could solve the problem.

கண்ணா.. said...

//நட்புடன் ஜமால் said...
Something not related to this post:


Regarding your followers list.

Change your blog settings from Tamil to English.

Hope this could solve the problem.//

thanks a lot jamal..

i had a trouble with these..finally u gave the direction to get rid

thanks again.

கண்ணா.. said...

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்...

என்னுடைய ப்ளாக்கில் பாலோவர் லிஸ்ட் கொண்டுவரதெரியாமல் முழித்து கொண்டிருந்தது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்..

அதற்கு இன்று அருமை நண்பர் நட்புடன் ஜமால் ஓரு தீர்வை கொடுத்திருக்கிறார்..அவருக்கு ஒரு ஓ...


நன்றி ஜமால்...

பாலோயர் லிஸ்ட் இல்லாததால்தான் தொடரமுடியவில்லை என பொய்சாக்கு சொன்னவர்களும், ஏற்கனவே பாலோயர் ஆயாச்சு என்று பொய் சொன்ன "சக்கரை சுரேஷ்" போன்றவர்களும் இனிமேலாவது என்னை பாலோ செய்து வாழ்வில் முன்னேறுங்கள் என்வும் கூறி என் உரையை இத்தோடு முடித்து கொள்கிறேன்..

கண்ணா.. said...

// @ Suresh said...

வாழ்த்துகள் மச்சான் கலக்கலா நடக்க வாழ்த்துகள், என் ஹீரோ உங்க ஊரு தாதாவிடம் சொல்லிட்டேன்.. வினோத் நான் வரனும் என்று பிளைட் டிக்கெட் எல்லாம் எடுத்து கம்பெல் பன்னினான்..

சரி டிக்கெட் அனுப்பு வருகிறேன் என்று//

நன்றி சுரேஷ்...வருகைக்கும் வாழ்த்திற்கும்...

என்னது டிக்கட் எடுத்து அனுப்பறதா...

இங்க சங்கமே சிம்ரன் ஆப்ப கடைக்கு உள்ள போக முடியலையேன்னு சங்கடத்துல இருக்கு....

இதுல இது வேறயா..?

Suresh said...

நண்பா அந்த பாலோவர் பிரச்சனைக்கே ஜமால் ஒரு பதிவே போட்டு இருக்காரு ..

சரி பாலோவர் ஆகியாச்சு அதுக்குனு வீட்டுக்கு ஸாரி கடைக்கு வந்து இப்படியா மிரட்டுறது சின்ன பையன் பயந்து போய் வந்தேன் :-)

தீப்பெட்டி said...

பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துகள்.. கண்ணா

அகமது சுபைர் said...

ஐ’யாம் சாரி...

என்னோட காலேசு முன்னாள் மாணவர்கள் கூட்டம் இருக்கு அதே நாள்ல... (நீ எங்கலே படிச்சேன்னு கேட்டா அழுதுடுவேன்.. :-)

அதுனால கூட்டத்துக்கு என்னோட வாழ்த்துகள்..

kishore said...

இப்போ நாங்களும் உங்க பாலோயர் தான்

கண்ணா.. said...

@ தீப்பெட்டி கணேஷ் குமார்

@ அகமது சுபைர்

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல

கண்ணா.. said...

//@ KISHORE said...

இப்போ நாங்களும் உங்க பாலோயர் தான்//

வாழ்க்கையில் முன்னுக்கு வந்துருவ...

பாலோயர் ஆனதற்கு நன்றி

Suresh said...

//
வாழ்க்கையில் முன்னுக்கு வந்துருவ...

பாலோயர் ஆனதற்கு நன்றி//

கண்ணா நீயும் பண்ணு மச்சான் ;) கிஷோரை

வடுவூர் குமார் said...

நான் வெளியேறிய பிறகு இப்படி ஒரு சந்திப்பு நடத்துவதின் பின்னனியில் ஏதேனும் நுண்ரசியல் இருக்கு?? :-)

நாகா said...

பதிவர்கள் மட்டும் தான் கலந்துகொள்ள வேண்டுமா அல்லது என் போன்ற வாசகர்களும் பங்கேற்கலாமா?

-Thyagu
050-9675564

கண்ணா.. said...

// வடுவூர் குமார் said...

நான் வெளியேறிய பிறகு இப்படி ஒரு சந்திப்பு நடத்துவதின் பின்னனியில் ஏதேனும் நுண்ரசியல் இருக்கு?? //


வாங்க வடுவூர் குமார்.

வருகைக்கு நன்றி..

நுண்ணரசியலா..? அப்டீன்னா என்ன..?


அதற்கென்ன நீங்கள் வந்த பிறகும் ஓரு சந்திப்பு நடத்திட்டா போச்சு...

கண்ணா.. said...

// Naga said...


பதிவர்கள் மட்டும் தான் கலந்துகொள்ள வேண்டுமா அல்லது என் போன்ற வாசகர்களும் பங்கேற்கலாமா?

-Thyagu
050-9675564//

வாங்க தியாகு @ நாகு

வருகைக்கு நன்றி...

வாசகர்களா (?!) எங்க மொக்கைக்குமா..?

பதிவர்கள், வாசிப்பவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்..

உங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்..

நன்றி

கோபிநாத் said...

\\சென்ஷி said...
சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள் நண்பரே!
\\

ரீப்பிட்டே ;) வேற வழி தெரியல கண்ணா ;)

கண்ணா.. said...

வாங்க கோபிநாத்,

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல

கண்ணா.. said...

கோபி..இதுக்கு முடியலைன்னாலும் அடுத்த சந்திப்பிற்கு கண்டிப்பாக வரவேண்டும்.....

Vinitha said...

;-) என்ஜாய் பண்ணுங்க.

***

சிம்ரன் ஆப்ப கடையின் சிக்கன் பிரியாணியும் , மட்டன் சுக்காவும், மறக்க முடியவில்லை. சரியான சிலோன் டேஸ்ட்!

****

இப்போ எப்படிங்க வேலை நிலைமை எல்லாம். விலைவாசி ரொம்ப ஜாஸ்தின்னு, கணவர் சொந்தங்கள் எல்லாம் பக்ரைன் மற்றும் கட்டாருக்கு மாறிட்டாங்க. ஐ.டி. ஆளுங்க மட்டும் இருப்பாங்க...

கண்ணா.. said...

வாங்க வினிதா

//சிம்ரன் ஆப்ப கடையின் சிக்கன் பிரியாணியும் , மட்டன் சுக்காவும், மறக்க முடியவில்லை. சரியான சிலோன் டேஸ்ட்!

இப்போ எப்படிங்க வேலை நிலைமை எல்லாம். விலைவாசி ரொம்ப ஜாஸ்தின்னு, கணவர் சொந்தங்கள் எல்லாம் பக்ரைன் மற்றும் கட்டாருக்கு மாறிட்டாங்க. ஐ.டி. ஆளுங்க மட்டும் இருப்பாங்க...//

ஆமாங்க டேஸ்ட் அருமையா இருக்கும்..

எனக்கு அங்க ரொம்ப புடிச்சது ஆப்பம்தாங்க......

விலைவாசி அப்பிடியேதான் இருக்கு..ஆனா இப்ப கொஞ்சம் கொஞ்சமா ரிஸஸன் மாறி projects வேலையெல்லாம் ஆரம்பிக்குறாங்க...

வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி....