Saturday, June 6, 2009

அமீரக பதிவர் சந்திப்பு – 05/06/2009 - புகைபடங்களுடன்

முதலில் என்போன்ற புதிய பதிவரின் அழைப்பை ஏற்று சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கலையரசன் முதல் ஆளாக 5.20 கெல்லாம் அங்கே வந்து விட்டு போன் செய்தார். நானும் வினோத்தும் அப்போதுதான் அறையை விட்டு வெளியே வந்தோம். அதன்பின் டாக்ஸி பிடித்து அடுத்த 15 நிமிடத்தில் அங்கே சென்றோம்.பின் சுந்தர் அவர்கள் வீட்டில் தயார் செய்த வடையுடன் வந்தடைந்தார். பின் பார்க்கில் தோதான இடம் பார்த்து உக்கார்ந்தோம்.அதன்பின் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.
மொத்தம் 14 நபர்கள் வந்திருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.




அவரவர்களின் அறிமுகத்திற்கு பின் கலந்துரையாடல் ஆரம்பித்தது. அய்யனார் மற்றும் ஆசாத் சிறப்பாக ஆரம்பித்தனர். பின் அனைவரும் சகஜமாக பேசி உரையாடலை சுவாரஸ்யமாக ஆக்கினர்.

பல பதிவுகளை பற்றி குறிப்பிட்டனர். அதையெல்லாம் உடனடியாக படிக்க வேண்டும் என நினைத்து கொண்டேன்.

அண்ணன் திரு ராகவன் நைஜீரியாவில் இருந்து வரும் 21ம் தேதி பதிவர்களை சந்திக்க விரும்பி துபாய் வருவதால் அனைவரும் வரவேண்டும் என கேட்டுகொள்ளபட்டது… 21ம் தேதி ஞாயிற்றுகிழமை வேலை நாள் என்பதால் 8 மணிக்கு ஏதாவது ஒரு ஹோட்டலில் சந்திக்கலாம் எனவும் விவாதிக்கபட்டது.

கலந்து கொண்ட பதிவர்கள்



அய்யனார்
http://www.ayyanaarv.blogspot.com/



அபுல்கலாம் ஆசாத்
http://www.ennam.blogspot.com/



சுந்தர்
http://trichisundar.blogspot.com/



சரவணன் @ குசும்பன்
http://www.kusumbuonly.blogspot.com/



சிவராமன்
http://sivaramang.wordpress.com/



லியோ சுரேஷ்




அசோக்குமார்




செந்தில்வேலன் http://senthilinpakkangal.blogspot.com/





கலையரசன்
http://www.kalakalkalai.blogspot.com/





பிரதீப் குமார்
http://www.oviya-thamarai.blogspot.com/





வினோத் கெளதம்
http://julykaatril.blogspot.com/





கண்ணா @ வெங்கடேஷ்
http://venkatesh-kanna.blogspot.com/





நாகா




ஜெயகுமார்




இனி சில குழுபடங்கள்
























குட்டு

நான் பல விதமாக போஸ் கொடுத்த போட்டோக்களையெல்லாம் அனுப்பாமல் சதி செய்து மறைத்து வைத்த கலையரசனுக்கு என் கடும் கண்டங்கள். நீங்களும் உங்கள் கண்டனங்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இது போன்ற விஷமிகளுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள்




அமீரகத்தில் இதற்குமுன் நடந்த பதிவர் சந்திப்பு புகைபடங்களை கீழ் உள்ள லிங்கில் கிளிக்கி பார்க்கலாம்

http://s189.photobucket.com/albums/z261/alif007/?action=view&current=24082007417.jpg

Wednesday, June 3, 2009

இளையராஜா vs பழையராஜா



1990 க்கு முன்னாலான இளையராஜாவின் இசைக்கும் தற்போதைய இளையராஜாவின் இசைக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.. இத்தனைக்கும் நான் அதி தீவிர இளையராஜா ரசிகன். இப்போதும் என்னுடைய தனிமை பொழுதுகள் பழையராஜாவின் பாடலுடன்தான் கழிகிறது..அதனை கேட்கும் போது தெறிக்கும் உணர்வுகள், ஊசாலாடும் நினைவுகளை வடிக்க வார்த்தைகளை தேடி தோற்று போய்விடடேன். அதிலும் முக்கியமாக 80களில் வந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் அந்தந்த பாடலின் காட்சிகளே மனதிரையில் ஓட ஆரம்பிக்கும். இத்தனைக்கும் பல படங்கள் நான் பார்த்ததே இல்லை. பாடல் காட்சிகள் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அந்த பாடலின் வரிகளில் அந்தந்த சூழ்நிலையை அழகாக விளக்கியிருப்பார்கள். அதுவும் ஒரு முக்கிய காரணம்.



அவர் சிம்பொனி அமைத்தாரா..தலைகனம் பிடித்தவரா என்பது பற்றியெல்லாம் அவரை சுற்றி உள்ளவர்களுக்கு வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால் என் போன்றவர்களுக்கு அவரை பற்றி தெரிந்ததைவிட அவரின் இசையை பற்றிதான் அதிகம் தெரியும். அவர் எப்படிபட்ட குணத்தை கொண்டவர் என்பது பற்றிய கவலை எங்களுக்கு இல்லை.. என்னை பொறுத்த வரை எனக்கு எந்த இசையை பிடிகிறதோ அதை கேட்பேன். அது எந்த இசையமைப்பாளர் அமைத்தது என்றெல்லாம் வரையறையெல்லாம் எனக்கு கிடையாது. எனக்கு பிடித்திருக்கணும் அவ்வளவுதான்..

அந்த வகையில் பார்த்தால் இளையராஜாவின் பழைய பாடல்களில் உள்ள கம்பீரம் அவரின் சமீபத்திய பாடல்களில் இல்லையென்றுதான் தோன்றுகிறது. அவரின் சமீபத்திய பாடல்கள் சில கேட்கும் போது மனதை கவர்ந்தாலும் தொடர்ந்து என்னால் கேட்க முடியவில்லை. அது ஏன் என்று அலசும் அளவிற்கு எனக்கு இசை ரசனை இல்லாததால். என்க்கு பிடித்த பாடல்களை மட்டும் தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கிறேன். அதில் ரஹ்மான், யுவன், வித்யாசாகர், ஹாரீஸ் என பல பேர் வந்தாலும் இன்னும் பழையராஜாதான் என்னை ரசிக்க வைக்கிறார். இளையராஜா .! பழையராஜாவை மீட்டெடுங்கள்.

Monday, June 1, 2009

அமீரகத்தில் பதிவர்கள் சாதாரண செயற்குழு கூட்டம் ..அழைப்பு - ஜுன் 5, 2009




அமீரகத்தில் பதிவர்கள் மாநாடு (அதாங்க பதிவர்கள் சந்திப்பு) இந்த ஜுன் மாதம் 3வது அல்லது 4வது வாரம் நடத்திவிடலாம் என்று முடிவெடுத்து..ஆசிப் அண்ணாச்சி ஊரிலிருந்து வந்தவுடன் இடம்முடிவு செய்து அறிவிப்பு வெளியிடபடும்..

அந்த மாநாடை சிறப்பாக நடத்தி காட்ட பதிவர்களின் சாதாரண செயற்குழு கூட்டம் வரும் ஜுன் 5ம் தேதி வெள்ளிகிழமை “சிம்ரன் ஆப்ப கடையின்” முன் உள்ள கராமா பார்க்கில் கூடவிருக்கிறது...

இதில் பல்வேறு அதிமுக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றவிருப்பதால் வசதிபடும் பதிவர்கள் கலந்து கொள்ளவேண்டும் என அழைப்பு விடுக்கபடுகிறது..

அமீரகத்திலிருந்துதான் அதிக அளவில் அனானிகள் உலவுவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகையால் சிறப்பு தீர்மானமாக கோடிகணக்கில் குவிந்துள்ள அனானிகளை அழைக்கவும் என்னிடம் ஓரு திட்டம் உள்ளது. அதை இப்போது சொல்ல மாட்டேன். சொன்னால் சென்னை மற்றும் மதுரை பதிவர்கள் காப்பி அடித்து விடுவார்கள்.. அதனால் எனக்கு ஓட்டு போடுங்கள் ..(வாழ்க விஜயகாந்து..)




நாள்: ஜுன் 5ம் தேதி, வெள்ளிகிழமை

இடம்: கராமா பார்க்

நேரம்: மாலை 6 மணி முதல் 8 மணி வரை



மேலதிக விபரங்களுக்கு

முதல்வர் : அய்யனார் - 050 6940046

துணைமுதல்வர் : குசும்பன் @ சரவணன் - 050 2664131

அஞ்சாநெஞ்சன் : கலையரசன் - 050 7174360

முரட்டு தொண்டன் : கண்ணா @ வெங்கடேஷ் - 050 9253270

துபாய் அஜீத் : வினோத் - 050 4382662
மிஸ்டு கால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு

என்னுடைய நம்பருக்கு மிஸ்டு கால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு உலக பொருளாதார சரிவு என் அலைபேசியிலும் எதிரொலித்த காரணத்தால் கடந்த ஆறு மாத காலமாக என் மொபைல் பேலன்ஸ் -2.45 dhs ஆக உள்ளது. இதை எனக்கு வேண்டாதவர்கள் யாரோ எடிசாலட் கம்பெனிக்கு போட்டு கொடுத்து விட்டதால் அவர்கள் என் மொபைலில் இருந்து அவுட்கோயிங்கிற்கு தடை விதித்துள்ளனர். ஆறுமாதமாக அவுட் கோயிங் இல்லாமல் எப்படி என அப்பாவிகளாக கேட்பவர்களுக்கு ஆபிஸர் போனை ஆட்டையை போட்டு அவுட்கோயிங் செய்வது எப்படி என் சிறப்பு வகுப்புகள் எடுக்கபடும் எனவும் தெரிவித்து கொள்கிறேன்.




டிஸ்கி

இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.. யார் மனதையாவது புண்படுத்தினால் மன்னித்தருளவும்