Friday, April 3, 2009

காயா ... ? காதலா ... ?


என்
இதய பூமியில்
ஏன்
இத்தனை எரிமலை ..... ?

என்
கரிசல் காட்டில்
ஏன்
இத்தனை விரிசல் ...... ?


இது
அவள் பேசிய
வார்த் தையின் வெப்பத்திலா .... ?

அல்லது
அவள் வீசிய
பார் வையின் உஷ்ணத்திலா .... ?

நாம்செய்த
வார்த்தைப் போர்களின்
வீர மரணங்களா இவை ..... ?

சகியே !
போதும் ! சகிக்க
வில்லை இந்த யுத்தம் ..

தவறுக்கு
தண்டனையாக
தஞ்சம் அடைகிறான் தலைவன் ..

மன்னிக்க
மாட்டாயா ? மதுரமே !
மண்டி இடும் மன்னவனை ..

உன்
இதயம் என்ன
இன்னுமா இளக வில்லை ... ?

இனியும்
தாங்காது இப்போதே
சொல் காயா .......... ? காதலா .......... ?

2 comments:

Tech Shankar said...

செம லவ்வுங்கோ. சூ ப் ப் ர்

கண்ணா.. said...

நன்றி.........தமிழ்நெஞ்சம்...........தங்கள் வருகைக்கும்..........

என் கத்துகுட்டி...முயற்சிகளுக்கு ...அளித்த பாராட்டுகளுக்கும்..........நன்றி