Tuesday, July 27, 2010

இராமாயணம் நெல்லையில் நடந்ததா?? ஜடாயு தீர்த்தமும் காட்டு இராமர் கோவிலும் சாட்சியங்களா??

நேற்றுதான் இராவணன் படம் பார்க்க முடிந்தது. நான் பொதுவாக பொழுதுபோக்கவே படம் போவதாலும் இதில் விஷுவல் ட்ரீட் நல்லா இருந்ததாலும் எனக்கு படம் பிடித்திருந்தது. ஆனால் மணிரத்னம் கடத்தப்படும் இடமாக நெல்லையை ( அவரின் செண்டிமெண்ட்..??!!) காண்பித்து இருப்பார். அதை பார்க்கும்போது என் நினைவுகள் நெல்லையின் காட்டுராமர் கோவிலையும், ஜடாயு தீர்த்தத்தையும் நோக்கி போக ஆரம்பித்தது.


சரியாக நினைவில்லாத ஓரு நாளின் சாயங்காலம் உறவினரின் அழைப்பின் பேரில் நெல்லை அருகேயுள்ள அருகன்குளம் கிராமத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தோம். எனக்கு அந்த கோவிலுக்கு செல்வது அதுதான் முதல் முறை, நண்பர் சில முறைகள் சென்றிருக்கிறார். அங்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வேறெங்க போகலாம்னு கேள்வியை வீசி விட்டு வண்டியை எடுக்க எத்தனிக்கும் போது

"இங்க பக்கத்துலதான் ஜடாயு தீர்த்தமும், காட்டு ராமர் கோவிலும் இருக்கு ஹிஸ்டாரிக்கல் பிளேஸ் இராமயணயத்துல இராவணன் சீதையை கடத்திட்டு போனது இங்க இருந்துதான். தெரியுமா?

வந்த எதிர் கேள்வியில் சுவாரஸ்யம் பல மடங்கு கூடி என்னப்பா சொல்ற போலாம் உடனேன்னு வண்டியை திருப்பினோம்.

ஜடாயு  தீர்த்தம்
சற்று குறுகலான சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த ஓரு பாதையில் செல்லும் போதே அணில்களின் குறுக்கு ஓட்டங்களும், அடர்ந்த வளர்ந்திருந்த மரங்களும் ஓரு காட்டுக்குள் செல்வது போன்ற தோற்றத்தை கொடுத்தது. அதிலிருந்து கொஞ்சம் தள்ளிப்போனால் ஓரு கோசாலை வருகிறது அதையும் தாண்டி சென்றால் முதலில் வருகிறது ஜடாயு தீர்த்தம். சென்றால் சிறிய கிணறு போன்ற அமைப்பும் அதையொட்டிய ஆறும் அதனுடன் இணைந்த சிறிய கோவிலும் அமைந்துள்ளது. அதாவது சீதையை இராவணன் கடத்தி செல்லும் போது ஜடாயு அவனுடன் போராடி வீழ்ந்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது அங்கு வந்த இராமன் ஜடாயுவிற்கு தண்ணீர் தருவதற்காக அம்பால் உருவாக்கிய கிணறுதான் இது என்று இங்குள்ளவர்களால் நம்பப்படுகிறது. பிறகு ஜடாயு இறந்தவுடன் அவருக்கான ஈமகாரியங்களை சற்று தொலைவிலுள்ள சிவன் கோவிலில் செய்ததாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. இங்கு மூன்று கிணறு போன்ற அமைப்புகளை ஜடாயு தீர்த்தம், இராம தீர்த்தம், சிவ தீர்த்தம் என அழைக்கிறார்கள். இதனருகிலேயே இருக்கிறது காட்டு இராமர் கோவில். இங்குள்ள ஆஞ்சனேயர் சிலை சுயம்பு என கூறுகிறார்கள்.

காட்டு இராமர் கோவில்

இராவணன் இங்கிருந்துதான் சீதையை கடத்தியதாகவும், கடத்தும் போது நடந்த போரில் ஜடாயு வீழ்த்தப்பட்டு கிடந்ததாகவும் அப்போது இராமர் ஜடாயுவிற்காக உருவாக்கிய நீரூற்றுதான் இப்போது ஜடாயு தீர்த்தம் என அழைக்கப்படுவதாகவும் அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். மிக ஆச்சர்யமாக இருந்தது. இது உண்மையாக இருக்குமா? அல்லது உணமை மாதிரி நம்ப வைக்க பட்டிருக்கிறதா என. உண்மையாக இருந்தாலும், உண்மை மாதிரி நம்ப வைக்கப்பட்டிருந்தாலும் அது மிக ஆச்சர்யமானதுதான். எது எப்படியோ நான் அந்த அமைதியான சூழலுக்காகவே அடிக்கடி அங்கு போக ஆரம்பித்தேன்.

டிஸ்கி:
எனக்கு இறை நம்பிக்கை உண்டென்றாலும் அதை என் எழுத்தில் கொண்டு வர  எப்போதும் விரும்பியதில்லை.  இந்த பதிவும் மிகுந்த தயக்கங்களின் இடையேத்தான் எழுதுகிறேன்.  இது இந்த இடம் குறித்து நீண்டநாடகளுக்கு பின்தான் தெரிந்தது. என்னை போல சிலர் இருப்பதாலும், இது குறித்த விவாதங்களுக்கான ஓரு ஆரம்பமாகவும்தான்  இந்த பதிவு.


படங்கள் உதவி:  கூகுள்

Thursday, July 22, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்

இன்று (22.07.2010) பிறந்தநாள் காணும்அமீரக அஜீத் , அருமை நண்பர் வினோத் கெளதமை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.... இதுதான் அவரின் கடைசி பேச்சுலர் பிறந்த நாள் என்பதாலும் அடுத்த பிறந்தநாளில் அவரின் ஷாலினியும் உடன் இருப்பார்கள் என்பதாலும் இந்த முறை தீர்த்தவாரி விழாவை சிறப்பான முறையில் நடத்த இருக்கிறார். ஆகையினாலே அமீரகத்து அன்பர்கள் அவரை நேரில் தொடர்பு கொள்ளுமாறும், இந்தியா மற்றும் அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்கள் அக்கவுண்ட் நம்பரை தெரிவித்தால் தீர்த்தவாரிக்கு லம்ப்பாக அமெளண்ட அனுப்ப படும் என்பதையும் கம்பெனி சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.




பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சி...

இது குறித்து மேலதிக சுவாரஸ்ய தகவல்களோடு நண்பர் கிஷோரின் பதிவு இங்கே




Monday, July 5, 2010

சுடச்சுட......நெல்லை பதிவர் சந்திப்பு செய்திகள் புகைப்படங்களுடன்...!!!

இரண்டு மாதங்களுக்கு முன், அதிகாலை 10 மணி அளவில் போன்.. ஓரு குரல் நான் ராஜா பேசுறேன் என்றது. எந்த ராஜா என்றதும் நாந்தான் துபாய் ராஜா என்றது அதேகுரல். ஆஹா நம்ம அண்ணந்தான் கூப்ப்டுறாரான்னு வழக்கமான நலம் விசாரிப்புகளுக்கு பிறகு நான் திருநவேலி வாரேன்... நாம மீட பண்ணலாமான்னு கேக்கவும் சரின்னு புது பஸ்ஸ்டாண்டு முன்னாடி உள்ள அருணா ஸ்விட்ஸை ஸ்பாட்டா முடிவு செய்து சந்திக்க தயாரானோம்.


ஓரு மணி நேரம் கழித்து மறுபடியும் போன்.. வந்தாச்சுன்னு... சரி வாரேன்னு பைக்கை எடுத்து கிளம்பினா ஓரு சந்தேகம் அவரை எப்பிடி அடையாளம் கண்டுபிடிக்க...அவரு புரோபைல் போட்டோவில் ஷேக் டிரஸ்ஸோட பாத்தது. ஓரு பார்ட்டி போட்டோவிலும் மொட்டை அடிச்சிருந்தாரு அதை தவிர வேறு ஓண்ணும் தெரியாதேன்னு காதல் கோட்டை அஜித்குமார் தேவயானியை பாக்க போற மாதிரி யோசனை பலமாதிரி ஓட ஆரம்பித்தது. பைக்கை நிப்பாட்டி விட்டு போன் பண்ணினால் கட் பண்ணி விட்டு ஆறடி உயர ஆள் கை காட்டுறாரு...(என்னா உசரம்ணே....!!! உங்க ஹைட்டுக்கு நீங்க பாஸ்ட் பெளலிங்க் போட்டா....பேட்டிங் பண்ணுறவன் செத்தான்) ஆஹா ராஜா கூப்பிட்டுடாரே...மீ த பர்ஸ்ட்டேய் சொல்லிறலாமான்னு வாய் வரைக்கும் வந்ததை நாகரீகம் கருதி அடக்கி கொண்டேன்.


பல விஷயங்களை சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தோம். திருநெல்வேலியில் இருந்து எவ்வளவு பதிவர்கள் என இருவரின் ஆச்சர்யங்களையும் பகிர்ந்து கொண்டோம். நாஞ்சிலுக்கு போன் பண்ணலாம் என கால் பண்ணினால் அவர் போனை வைத்து விட்டு கேரளா வரைக்கும் போயிருக்கிறார் என அவர் வீட்டில் தகவல் சொன்னார்கள். சரி அப்டின்னா.. மறுபடியும் எக்ஸ்பிரஸ் மலையாள மங்கையிடம் மயங்கி விட்டது. திருமப பார்ட்டி துபாய் வந்ததும் மலையாளப்பட விமர்சனம் கண்டிப்பாய் இருக்கும்னு மனசுல நினைச்சுகிட்டேன்.


அப்புறம் ஓரு ஜுஸை குடித்து கொண்டே உரையாடி கொண்டிருந்தோம். அவர் ஐந்து வருடமாக பதிவெழுதுவதையும் இப்போதுதான் அதிக அளவில் புதிய பதிவர்கள் வருவதையும், ஓரு முறை அம்பை பஸ் ஸ்டாண்டில் ஆடுமாடு என்ற பெயரில் பதிவெழுதும் பதிவரை பார்த்து விட்டு “நீங்கதானே ஆடுமாடுன்னு” எப்படி கேக்க என குழம்பி பின் அறிமுக படுத்தி பேசிய சுவாரஸ்யமான சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார். பின் அவரை பாளை பஸ் நிலையத்தில் டிராப் செய்து விட்டு நான் ஜங்சனுக்கு சென்றேன். திருநெல்வேலி நிறைய மாறிவிட்டது நிறைய மாறாமல் அப்படியே இருக்கிறது. அதையெல்லாம் பத்தி எழுதி ஓரு பத்து பதிவாது தேத்திறணும்னு நினைச்சுகிட்டேன்.


அதன் பிறகு ஓரு பத்து நாள் கழித்து நண்பர் பதிவர் எறும்பு ராஜகோபால் அண்ணனும் போனில் பேசினார்கள். ஊருக்கு வந்திருப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் நான் அப்போது தஞ்சாவூரில் இருந்ததால் அவரை சந்திக்க முடியாமல் போனது.


பதிவர் சந்திப்பு புகைப்படங்கள்


பதிவர் சந்திப்பை பற்றி எழுதினால் புகைபடங்கள் பதிவிட வேண்டும் என்ற தொன்று தொட்டு வரும் பாரம்பரியத்தை பின்பற்ற வில்லையென்றால் வரலாற்றுபிழை ஏற்பட்டு விடக்கூடாது என்பதாலும்  எங்களின் தன்னடக்கத்தின் காரணமாக நாங்கள் புகைப்படம் எடுக்காமல் விட்டதாலும் கூகுளில் இருந்து களவாண்ட படங்கள் உங்கள் பார்வைக்கு..