Monday, June 28, 2010

சுணங்கிய தேடல்கள்..!!




ஓரு


கிணற்று தவளையின்

கூச்சலைப் போல

என்

இதுவரையிலான வாதங்கள்.. !


தேடல்கள் சுணங்கி

மூளையை துருப்பிடிக்க

வைக்கும் என்னின்

இதுவரையிலான முயற்சியை

மூட்டை கட்டலாமா

என யோசனைகள்

விரிய ஓரு

விடியல் கிட்டுமென நம்பிக்கையுடன்..!!

 

25 comments:

Katz said...

அருமை

அன்புடன் அருணா said...

/விடியல் கிட்டுமென நம்பிக்கையுடன்..!!/
கிட்டட்டும்..கிட்டட்டும்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

விடியல் தொடரட்டும்.

Prathap Kumar S. said...

சே...என்னவே என்னாச்சு... கவிதை நல்லாருக்கு...

ஆனால் இதெல்லாம் நல்லதுகிக்கில்லை... மொக்கை பதிவு எங்கவோய்...???

வினோத் கெளதம் said...

கடவுளே பெங்களூர் போறதுக்கு முன்னாடி எல்லாம் நல்லா தானே இருந்தாரு...

நாடோடி said...

என்ன‌ த‌ல‌ ரெம்ப‌ யோசிக்கிறீங்க‌ளோ!!!!.....

ஹுஸைனம்மா said...

ஊருக்குப் போனதுலருந்து கவிதை மட்டுமே வருதே ஏன் ஏன்?

சிநேகிதன் அக்பர் said...

நல்லது நடக்கும்.

ஆமா லாரி போக்கர் தொடர் எங்கே?

geethappriyan said...

கவித அருமை நண்பா,
புதிய ஊரும் வேலையும் எப்படி?
ஒரு மொக்கை பதிவிடுங்கள்.

கண்ணா.. said...

நான் ஓரு பத்து நாளா கடுமையான வேலையினால பதிவு பக்கமே வரலை நண்பர்களுக்கும் பதிவிற்கும் போகலை, பின்னூட்டமும் இடவில்லை. ஆனாலும் என்னை மறக்காமல் தளத்திற்கு வந்த அனைவரும் மிக்க நன்றி

கண்ணா.. said...

வாங்க வழிப்போக்கன். . முதல் வருகைன்னு நினைக்கறேன். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க அன்புடன் அருணா,

கிட்டுமான்னு பாக்கலாம் :) வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க ஸ்டார்ஜன்,

தொடர நினைக்கும் உள்ளத்திற்கும் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க நாஞ்சில் பிரதாப்,

என்னாது இது நல்லாருக்கா?!! விளங்கிரும்...

உண்மையை சொல்ல போனால் மொக்கை பதிவை விட இப்பிடி வரிகளை எண்டர் தட்டி மடக்கி போட்டு கவிதைன்னு லேபிள் போடுறது ரொம்ப ஈஸியா இருக்கு...

கண்ணா.. said...

வாங்க வினோத்,

அடப்பாவி...... நீ இன்னமும் பதிவெல்லாம் படிக்கறயா.???!!!!

நானெல்லாம் நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணம் நடக்கறவரை கவனத்தை வேறபக்கம் சிதற விட்டதே இல்ல.. நீ என்னன்னா.........

கண்ணா.. said...

வாங்க நாடோடி@ ஸ்டீபன்,

யோசிக்கறதா...நீங்க வேற.... இது சோம்பேறிதனம் பாஸ்...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தல

கண்ணா.. said...

வாங்க ஹுசைனம்மா,

நானும் கவிதைன்னு ஓரு பார் போட்டு சும்மாவே வச்சிருந்தம்லா.. அதான் அப்பப்ப எதையாவது எழுதி கவிதைன்னு லேபிள் போடலாம்னு..

நீங்க புர்ஜ் காலிபா போயிட்டு வந்தாச்சா... பதிவை இப்போதான் பார்த்தேன்... பின்னூட்டம் கொஞ்ச நேரம் கழிச்சு... இப்போ வரிசையா நண்பர்கள் பதிவையெல்லாம் படிச்சுகிட்டு இருக்கேன்

கண்ணா.. said...

வாங்க அக்பர்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....


எல்லா நேயர் விருப்பமும் மொக்கை பதிவில் இருக்கும் போது நீங்க மட்டும் லாரி பேக்கர் தொடரை கேக்கறதுல உள்குத்து ஏதும் இல்லையே...????!!!!

கண்ணா.. said...

வாங்க கார்த்தி,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தல..

புது வேலை நல்லா போய்கிட்டு இருக்கு.. இங்க பெங்களூர் மெட்ரோ ஸ்டேசன் கன்ஸ்ட்ரக்ஸன்...நம்ம ஊரு கம்பெனிங்கறதால ஓரு ஆளை போட்டு நாலு ஆள் வேலை வாங்குவாங்க.. ஆனால் இதில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஓரு ப்ராப்பர் சிஸ்டம் இல்லாம இருக்கறதுதான் இங்க உள்ள குறை.

டிஸைன்ன்னு பார்த்தா.. துபாய் மெட்ரோ ப்ளானை அப்பிடியே காப்பி அடிச்சுருக்காங்க... கிரியேட்டிவிட்டிங்குறது கொஞ்சம் கூட இல்ல...

Ahamed irshad said...

Super Kanna...

kishore said...

nalla iruku nanba

அன்புடன் மலிக்கா said...

ஹுஸைனம்மா said...
ஊருக்குப் போனதுலருந்து கவிதை மட்டுமே வருதே ஏன் ஏன்?

கவிதையிலதானே!
சுறுங்கியதையும்
சுணங்கியதையும் எல்லாத்தையும் சட்டென சொல்லமுடியும் அப்படித்தானே கண்ணா..

கவிதை மிக அருமை..

கண்ணா.. said...

வாங்க அஹமது இர்ஷாத்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க கிஷோர்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க அன்புடன் மலிக்கா,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

//கவிதையிலதானே!
சுறுங்கியதையும்
சுணங்கியதையும் எல்லாத்தையும் சட்டென சொல்லமுடியும் அப்படித்தானே கண்ணா..//

கவிதாயினி நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

:)